Dear Charu,
I was reading about the Jean Genet & Nabakov on wikkipedia. It was mentioned that pablo picasso had to write to the french president to keep jean off from the prison. he was a petty thief and he has commited lots of, lets just say petty crimes too.. if it was {!–more–>}
Dear Charu,
I can see how much you are shuffled between your two lives of a good family man and a creator , but the truth is you cant excel in both . you got to choose . Most of the successful people didn’t have a great personal life thats because your {!–more–>}
அன்பு மனுஷ்யபுத்திரன்,
உங்கள் கவிதைகளை சாரு ஆன்லைனில் படித்தேன். உண்மையைச் சொல்லிவிடுகிறேன். எனக்குக் கவிதைகளை புரிந்துகொள்ளும் மனோபக்குவம் இதுவரை வாய்த்ததில்லை. கவிதைகளை ரசிக்கும் திறமை எனக்கு இதுவரை இல்லை. பலமுறை, சாரு பல கவிதைகளைப் பற்றி எழுதும்போதெல்லாம், அது எப்படி கவிதைகளைப் படித்து சில பேரால் இவ்வளவு இன்புற முடிகிறது என்று எண்ணியிருக்கிறேன். ஆனால், இன்று உங்களது கவிதைகளைப் படித்தபோதுதான், எனக்கும் அந்த மனப்பான்மை வாய்த்ததைப் புரிந்துகொண்டேன். உங்கள் {!–more–>}
(கவிதைகளின் கடைசியில் என்னுடைய ஒரு சிறு குறிப்பு உள்ளது: சாரு)
manushyaputhiran@gmail.com
கூண்டுப் புலி
கூண்டுப் புலிக்கு
கேரட் தரும்
சிறுமியொருத்தி
அதன் பசித்த கண்களைக்
கவனிக்கவேயில்லை
கூண்டுப் புலியைச்
சீண்டும்
சிறுமியொருத்தி
அது நகைச்சுவை உணர்ச்சியற்றது
என்பதை அறிந்திருக்கவில்லை
கூண்டுப் புலியைச்
சவாலுக்கு அழைக்கும்
சிறுமியொருத்திக்கு
புலி மிகவும் தந்திரமானது
என்பது தெரியவில்லை
கூண்டுப் புலியைப்
புகைப்படம் எடுக்கும்
சிறுமியொருத்தி
தான் எடுப்பது
புலியின் ஒரு பொய்த் தோற்றம்
என்பதைக் கண்டுபிடிக்கவே இல்லை
கூண்டுப் புலியோடு
பேச முற்படும்
சிறுமியொருத்தியால்
அதன் மௌனத்தின் ஆழத்தை
நெருங்கவே இயலவில்லை
கூண்டுப் புலிக்குக்
கதை சொல்ல முற்படும்
சிறுமியொருத்தி
கானகத்தின் கதைதவிர
புலிக்கு எந்தக் கதையும் புரியாதென்பதை
அறிந்திருக்கவில்லை
கூண்டுப் புலிக்குக்
கவிதை எழுதக் கற்றுக்கொடுக்கும்
சிறுமியொருத்தி
வார்த்தைகளின் ரத்த வேட்கை குறித்துப்
புரிந்துகொள்ளவே இல்லை
கூண்டுப் புலியின்
பிறந்த நாளுக்குப் பரிசளிக்கும்
சிறுமியொருத்தி
கூண்டுப் {!–more–>}
சாரு,
வணக்கம்.
நான் இதுவரை புதுமைப்பித்தன், கு அழகிரிசாமி, கி.ராஜநாராயணன்,தி.ஜானகிராமன்,சுந்தர ராமசாமி,அசோகமித்திரன் ஆகியோரின் கதைகளை மட்டுமே படித்துள்ளேன்.
சுந்தரராமசாமியின் படைப்புகள் அவ்வளவு உவப்பானவையாக இல்லை.ஆனால் புதுமைப்பித்தனை எனக்குப் பிடித்துள்ளது.
நீங்கள் சிலாகித்துச் சொன்ன ஆதவனின் படைப்புகளை இப்பொழுது படிக்க ஆரம்பித்து உள்ளேன். முதலில் சிறுகதைகளில் இருந்து தொடங்கியுள்ளேன்.பத்து சிறுகதைகளை மட்டுமே இப்பொழுது வாசித்துள்ளேன்.
என்ன சொல்வதென்றே தெரியவில்லை.அற்புதம். ஆதவனை அறிமுகம் செய்ததற்கு மிக்க நன்றி.
தங்களைக் கவர்ந்த தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகளை அவ்வப்போது அறிமுகம் செய்தால் தன்யனாவேன்.
பணிவன்புடன்,
பெருமாள்.
கரூர்.
அன்புள்ள பெருமாள்,
என் வாசகர்களிடம் ஒரு பொதுவான பண்பை கவனித்திருக்கிறேன். என் எழுத்தை மட்டுமே படிக்கும் அவர்கள் நான் பரிந்துரை செய்யும் எழுத்தாளர்களைப் படிப்பதில்லை. சிலர் மட்டுமே விதிவிலக்கு. இல்லாவிட்டால் {!–more–>}
பிரபஞ்சன் : கே.ஆர். விஜயா
கலாப்ரியா : தேவிகா
கவிஞர் சுகுமாரன் : ’முதல் மரியாதை’ ராதா
கவிஞர் விக்ரமாதித்யன் : கஞ்சா கருப்பு
சாரு,
தங்கள் பதில்களால் நல்ல இலக்கியத் தெளிவு பெற்று வருகிறோம். ஆண்குறிக்கு லிங்கம் என்று பெயர் என கூறியிருக்கிறீர்கள்.சரிதான்; ஆனாலும் லிங்கம் என்ற இந்தப் பெயரை சங்க இலக்கியங்களிலும் , நவீன இலக்கியங்களிலும் ’யோனி’யைப் பயன்படுத்திய அளவிற்குப் பயன்படுத்தியிருக்கிறார்களா? நவீன இலக்கியங்களில் ஆண்குறி என்றே அடிக்கடி பயன்படுத்துவது போல் தெரிகிறது.
என்ன, ஆண்குறிக்கு 12 விதமான பெயர்களா? தயவு செய்து அதை வெளியிட்டு, சற்றே மார்க்கெட் இல்லாமல் அல்லாடும் ஆண்குறிக்கு {!–more–>}
சாரு,
நீங்களும் இந்த அராத்தும் அடங்க மாட்டீங்களா ? தாங்க முடியலே . உங்க ப்ளாக் unblocked website – so பிரச்சனை இல்லாமல் ஆபீசெலே படிக்க முடியுது . நீங்களும் அராத்தும் பண்ணும் அலம்பலில் கூடிய விரைவில் உங்க blog porno site என்று சொல்லி block பண்ணிடுவாங்க . எல்லா ஆபீசெலேயும் . அப்புறம் இருக்குறே கொஞ்ச நஞ்ச வாசகர்களும் காலி . ஜாக்கிரதை . LOL
பெர்னத், சென்னை – 40.
கேள்வி: பெண்குறி, யோனி என வழங்கப்படுவதை போல , ஆண்குறிக்கு ஏன் தனிப் பெயர் இல்லை? பாவம் ஆண்குறி!
ஆர்வக் கோளாறு அராத்து.
பதில்: பாவம் ஆண்குறி அல்ல; நீங்கள்தான். உங்கள் கேள்வியிலேயே பாதி பதில் உள்ளதே? பெண்குறிக்கு ஆண்பால் என்ன? உங்கள் கேள்வியைப் பாருங்கள். யோனிக்குப் பெண்பால் லிங்கம். இன்னும் சுத்தத் தமிழில் சுமார் 12 பெயர்கள் ஆண்குறிக்கு வழங்கப்படுகின்றன.
30.8.2010.
1.47 p.m.
அராத்து : இலக்கியப் பத்திரிக்கையில் ஏன் கவர்ச்சிப்படங்கள் வருவதில்லை?
பதில்: என்ன அப்படிச் சொல்கிறீர்கள்? முரசொலியில் கருணாநிதியின் படமும் நமது எம்ஜிஆரில் ஜெ. படமும் தினமும் தவறாமல் வந்து விடுகிறதே?