(பின்நவீனத்துவ) பரமார்த்த குருவும் சீடர்களும்…
தோற்றம் கான்ஸ்டான்ஸியோ பெஸ்ச்சியின்பரமார்த்த குருமட்டி, மடையன், பேதை, மிலேச்சன், மூடன்.சீடர்கள் ஐவர்புராணங்களின் புழுதியில்காலடி பதித்துகுருவைத் தாங்கினர். இந்தப் பின்நவீனத்துவ குருவுக்கோசீடர் எண்ணிலர்ஒருநாள் பின்நவீனத்துவ குரு அறிவித்தார்:’குரு இறந்து விட்டார்;தந்தையின் பிரம்பு, அதிகாரத்தின் இரும்புத் தடி,ஆதிக்கத்தின் சுருக்குக் கயிறு –எல்லாவற்றையும் குப்பைத்தொட்டியிலேவீசுங்கள்…” ’வீசினோம் நண்பா’கூவினர் சீடர்நண்பா எனக் கேட்டுஉளம் குளிர்ந்தார்பின்நவீனத்துவ குருபின்னே இருக்காதா, குருவைநண்பா என எவன் அழைத்தான்வரலாற்றில்?ரொலாந் பார்த்துக்கேகிடைத்திராத அதிர்ஷ்டமென்றார்பின்நவீனத்துவ குரு காலப்போக்கில் சிலர்பின்நவீனத்துவ குருவுக்கேபாடம் எடுக்கக் கண்டுஅவர்களை மட்டும் பள்ளியிலிருந்துகளையெடுத்தார். காதல் காதலுக்குக் கண்ணில்லை என்பது … Read more