ஆர்மீனியா ஸோமர்ஸ்

2001-இல் எழுதிய “நான் எழுதுவது அறநூல் அல்ல” என்ற என் கட்டுரையில் உருகுவாயைச் சேர்ந்த Armenia Somers என்ற பெண் எழுத்தாளரின் The Fall என்ற சிறுகதை பற்றிக் குறிப்பிட்டிருக்கிறேன்.  எனக்குக் குழந்தைகளைப் பிடிக்காது என்ற நூலை தற்சமயம் பிழைதிருத்தம் செய்து கொண்டிருந்த போது அந்த நூலின் முதல் கட்டுரையாக இருக்கிறது இது.  The Fall கதை எனக்கு வரி வரியாக ஞாபகம் இருக்கிறது.  போலீஸால் தேடப்படும் ஒருவன் – அவன் திருடனா, போராளியா என்ற விபரம் கதையில் சொல்லப்பட்டிருக்காது – போலீஸில் பிடிபடாமல் தப்பி ஓடும் போது ஒரு மாதா கோவிலில் தஞ்சம் அடைகிறான்.  இரவு நேரம்.  மாதா கோவிலில் யாரும் இல்லை.  அதற்கு மேல் அங்கே நடக்கும் சம்பவங்களை இங்கே எழுதினால் என் உயிருக்கு உத்தரவாதம் இல்லை.  1980களில் நான் படித்த கதை இது.  அந்தக் காலத்தில் நான் லத்தீன் அமெரிக்கச் சிறுகதைகளைத் தமிழில் மொழிபெயர்த்துக் கொண்டிருந்தேன்.  பல கதைகள் கல்குதிரை இதழில் வெளியாயின.  அப்போது நான் ஆர்மீனியா ஸோமர்ஸின் மேற்படி கதையையும் மொழிபெயர்க்க ஆசைப்பட்டு, உயிர் பயத்தால் அந்த ஆசையைக் கைவிட்டேன்.  ஏனென்றால், கதை அப்படி.

இப்போது எனக்குக் குழந்தைகளைப் பிடிக்காது என்ற நூலை மறுபிரசுரத்துக்காக பிழைதிருத்தம் செய்யும் போது இவ்விஷயம் எனக்கு ஞாபகம் வந்ததால் Armenia Somers பற்றி விக்கிபீடியாவில் என்ன இருக்கிறது என்று தேடினேன்.  முக்கியமாக அந்தக் குறிப்பிட்ட கதையை இப்போது 35 ஆண்டுகள் கழித்து மீண்டும் படித்துப் பார்க்க விரும்பினேன்.  இந்த 35 ஆண்டுகளில் எத்தனையோ கதைகள் படித்தும் அந்தக் கதை மட்டும் எப்படி இத்தனை துல்லியமாக ஞாபகம் இருக்கிறது!  கதை அப்படி.  படிக்கின்ற யாருக்குமே மறக்காது.  ஆனால் Fall கதையை விடுங்கள்.  ஸோமர்ஸ் பற்றிய விபரம் கூட கிடைக்கவில்லை.  விக்கிபீடியா மட்டும் அல்ல; வேறு எந்த இடத்திலும் ஆர்மீனியா ஸோமர்ஸ் பற்றிய விபரம் இல்லை.  தென்னமெரிக்கப் பெண் எழுத்தாளர்கள் என்பது போன்ற ஆய்வுக் கட்டுரை ஒன்றிரண்டில் ஸோமர்ஸின் பெயர் வருகிறது.  அவ்வளவுதான்.

யாராவது அந்தக் கதையைத் தேடித் தர முடியுமா?  Armenia Somers.  Uruguayan writer.  Title of the  Story : The Fall.  கதை ஏதாவது தென்னமெரிக்கச் சிறுகதைத் தொகுப்பில் கூட இருக்கலாம்.

***

www.charuonline.com என்ற இந்த இணையதளம் 2002-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.  சினிமா, இசை, அரசியல், இலக்கியம் போன்ற தலைப்புகளில் இதில் இத்தனை ஆண்டுகளாகத் தொடர்ந்து எழுதி வருகிறேன்.  இந்த இணையதளத்தை ஒரு மாதத்தில் 60000 பேர் வாசிக்கிறார்கள்.  தமிழில் எழுத்தாளர்கள் இணையத்தில் எழுத ஆரம்பிப்பதற்கு வெகுகாலம் முன்னரே ஆரம்பிக்கப்பட்ட பழைய இணைய தளம் இது.  அப்போது விகடன், தினமலர் போன்ற பத்திரிகைகளின் இணைய தளங்கள்தான் இருந்தன.  இப்போது இந்த இணையதளத்தைக் கட்டணம் செலுத்திப் படிக்கும் தளமாக மாற்றலாமா என யோசித்தேன்.  அறுபது ஆயிரத்தில் ஆறு பேர் கூட எஞ்ச மாட்டார்கள்.  முன்பே அதைப் பரிசோதித்துத் தோற்றிருக்கிறேன்.  எனவே மீண்டும் அந்தச் சோதனையில் ஈடுபட மாட்டேன்.  ஆக, இப்போது என் வேண்டுகோள் என்னவெனில், இதை வாசிக்கும் அன்பர்களில் விருப்பமுள்ளவர்கள் தாமாகவே முன்வந்து கட்டணம் செலுத்தலாம்.  விருப்பம் இல்லாதவர்கள் கட்டணம் செலுத்தாமலும் படிக்கலாம்.  அவரவர் விருப்பம்.  பணம் எப்போதும் என் சிந்தனையில் இருந்ததில்லை.   இனிமேலும் இருக்காது.  பணம் பற்றி யோசிக்காமல் இருக்கக் கூடிய சூழல் இருந்தது.  யோசிக்காமல் இருந்தேன்.  இப்போது நிலைமை மாறி விட்டதால் பணத்துக்கான ஒரு சிறிய ஏற்பாடு இது.  எவ்வளவு கட்டணம் என்பதும் அவரவர் விருப்பம்.  மாதாமாதம் அனுப்ப முடியாவிட்டால் மூன்று மாதத்துக்கான தொகையை அனுப்பலாம்.   கட்டணம் செலுத்தவில்லையே, படிக்கலாமா கூடாதா என்ற அறம் சம்பந்தமான கேள்விக்குள் நுழைந்து விடாதீர்கள்.  அது 60000 என்ற வாசகர் எண்ணிக்கையைக் குறைத்து விடும்.  முடிந்தவர்கள் கட்டணம் செலுத்துங்கள்.  முடியாவிட்டால் எந்தப் பிரச்சினையும் இல்லை.

என் மின்னஞ்சல் முகவரி:  charu.nivedita.india@gmail.com

கட்டணம் செலுத்துவதற்கான வங்கிக் கணக்கு விவரம்:

UPI ID: charunivedita@axisbank

பெயர்: K. ARIVAZHAGAN

Axis Bank Account No. 911010057338057

Dr Radhakrishnan Road, Mylapore

IFSC No. UTIB0000006

ஒரு நண்பர் பெயரில் உள்ள K என்பதன் விரிவு என்ன என்று கேட்டிருந்தார்.  அவர் வங்கியில் கேட்கிறார்களாம்.  Krishnasamy.  என் தந்தையின் பெயர்.  ஆக்ஸிஸில் அனுப்ப முடியாவிட்டால் என் ஐசிஐசிஐ கணக்கு விபரம் கீழே:

K. ARIVAZHAGAN

ICICI a/c no.  602601 505045

MICR Code: 600229065

IFS Code ICIC0006604

T. NAGAR BRANCH chennai