நலமா?

அன்புள்ள சாருவுக்கு, தாங்கள் நலமா? ஜலதோஷம் குணமாகிவிட்டதா? நேற்றிரவு தங்களின் ஒரு குறுநாவலுக்கு எழுதிய முன்னுரை கட்டுரையை வாசித்தேன். தாங்கள் குறிப்பிட்டது போல “நாற்பது ஆண்டு வாசிப்பின் சாரம்” என்பதின் கனத்தை என்னால் உணர முடிந்தது. தங்களுக்கு இக்கட்டுரையை எழுதி முடிக்க ஆறு மணி நேரம் ஆனதாக குறிப்பிட்டிருந்தீர்கள். வாசித்து புரிதலை அடைய எனக்கு மூன்று மணி நேரம் எடுத்தது, அவ்வளவு அடர்த்தியான கட்டுரை இது. சிம்யூலேஷன் ஹைப்பர்-ரியாலிட்டியாக தோன்றுவதும், அதன் விளைவுகள் இலக்கியத்தில் ஒரு விதமான பாதிப்பையும், தமிழ்த் … Read more

ஒரு குறுநாவலுக்கு எழுதிய முன்னுரை

இப்போது ஒரு குறுநாவல் எழுதிக்கொண்டிருக்கிறேன். இரண்டொரு நாட்களில் முடித்து நமது தளத்தில் பதிவேற்றுவேன். அதகளமாக இருக்கும். அன்பு நாவலின் தொடர்ச்சி என்று வைத்துக் கொள்ளலாம். ஆனால் அதன் கதை நீங்கள் சற்றும் எதிர்பாராததாக இருக்கும். அந்தக் குறுநாவலுக்கு ஒரு முன்னுரை எழுதினேன். 1100 வார்த்தைகள்தான். ஆனால் இதை எழுத எனக்கு ஒரு ஆறு மணி நேரம் எடுத்தது. நாற்பது ஆண்டு வாசிப்பின் சாரம் இது. குறுநாவலின் பெயரைச் சொன்னால் அதைப் பதிவேற்றம் செய்வதற்குத் தடங்கல் வரும். யாரும் … Read more

கேடு தரும் டாஸ்மாக் உணவகங்கள்

இப்போது எழுதப் போகும் விஷயத்தைப் பற்றி பல முறை எழுதியிருந்தாலும் என்னோடு உடன் வரும் நண்பர்கள் மறந்து விடுவதால் மீண்டும் எழுதுகிறேன்.  உனக்கு எங்கே போயிற்று புத்தி என்று நீங்கள் என்னைக் கேட்டால், எனக்கு இந்த விஷயத்தில் புத்தி இல்லை என்ற பதில்தான் வரும்.  இவ்விஷயத்தில் நான் அதிகவனமாகவே இருந்தாலும் ஓரிரு முறை மறந்து விடுகிறேன்.  மறந்தால் என் வாழ்வில் பதினைந்து நாள் காலி. இறையருள் பாதி, பாதி என்னுடைய அதி தீவிர உடல் பராமரிப்பு மற்றும் … Read more

25 புதிய புத்தகங்கள்

உயிர்மை மூலமாக என் புத்தகங்கள் பதிப்பிக்கப்பட்டுக் கொண்டிருந்த சமயத்தில் ஆண்டு தோறும் ஆறு அல்லது ஏழு புதிய புத்தகங்கள் வந்து கொண்டிருந்தன. கடைசியில் பத்து பத்து புத்தகங்கள் வந்தன. ஆண்டு தோறும். இதன் ரகசியம் என்னவென்றால், நான் இணையத்தில் எழுதுவதையெல்லாம் சப்ஜெக்ட் வாரியாகத் தொகுத்து, பிழை திருத்தம் செய்து புத்தகமாக வெளியிடுவார் மனுஷ்ய புத்திரன். உயிர்மையிலிருந்து வெளியே வந்த பிறகு அந்தக் காரியம் நின்று விட்டது. பின்னர், நண்பர் ஸ்ரீராம் ஆண்டு தோறும் புத்தகங்களை சப்ஜெக்ட் வாரியாகத் … Read more

புத்தக விழா குறிப்புகள் – 11

புத்தக விழா இன்று இறுதி நாள்.  இந்தப் புத்தக விழா எனக்கு மிகவும் இனிமையாகக் கழிந்தது. பல நூறு புத்தகங்களில் கையெழுத்திட்டேன்.  இன்னமும் ஸீரோ டிகிரி நாவலை ஏதோ நேற்றுதான் வெளிவந்தது போல் வாங்கிக்கொண்டிருந்தார்கள்.   ஆனால் என் மிக முக்கியமான படைப்பான அந்த்தோனின் ஆர்த்தோ நாடகத்தை ஒருவரும் வாங்கி நான் பார்க்கவில்லை.  இலக்கியத்துக்குப் புறம்பான ஏதோ ஒரு புத்தகத்தை கிட்டத்தட்ட எல்லோருமே வாங்கிக் கொண்டு போனதை பார்த்தேன்.  இதுவரை வாழ்க்கையில் அப்படி ஒரு காட்சியைக் கண்டதில்லை.  ஒரு … Read more