சாருவுடன் சில தினங்கள்…

வாசகர்கள் எழுத்தாளர்களை நேரில் சந்திக்கக் கூடாது என்ற  கருத்தை சுஜாதா ஒரு தடவை சொல்லப் போக, தமிழ்நாட்டின் வாசிப்புத் தளத்தில் சுஜாதா அப்போது பெரும் சக்தியாக விளங்கியதால் அவர் சொன்னது அனைத்து வாசகரிடத்திலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி விட்டது. அது ஒரு தவறான கருத்து.  காரணம்? சாக்ரடீஸிலிருந்து இன்றைய எழுத்தாளர் வரை அவர்கள் எழுதியவற்றை விட பேச்சின் மூலமும் உரையாடலின் மூலமும்தான் அதிகமான சிந்தனை மாற்றங்களை வாசகரிடத்தில் ஏற்படுத்துகிறார்கள்.  என்னை எடுத்துக்கொண்டால், நான் எழுதியது வெறும் பத்தே … Read more

ராஸ லீலா பதிப்பகம்

என்னுடைய புத்தகங்களை முதன்மைப்படுத்தி பதிப்பிக்க ஒரு புதிய பதிப்பகம் தொடங்கப்பட்டுள்ளது. மிக விரைவில் செல்வகுமாரின் கவிதைத் தொகுதியும், ரஸ்புடின் நிர்குணின் கவிதைத் தொகுதிகளும் கூட ராஸ லீலா பதிப்பகத்திலிருந்து வெளிவரும். இப்போது மயன் மாளிகை என்ற என்னுடைய கட்டுரைத் தொகுதி இன்னும் இரண்டு வாரத்தில் ராஸ லீலா பதிப்பகத்திலிருந்து வெளிவர இருக்கிறது. மற்றபடி என்னுடைய எழுபது புத்தகங்கள் இதுவரை வந்தது போல் ஸீரோ டிகிரி பதிப்பகத்தில் கிடைக்கும். தொடர்ந்து அங்கிருந்தே கிடைத்து வரும். அதில் எந்த மாற்றமும் … Read more

எழுத்தாளனின் இலவச சேவை!

இனிமேல் கல்லூரிகளில் பேச அழைத்தால் கூச்சம் பார்க்காமல் கட்டணம் ஒரு லட்சம் என்று வெளிப்படையாகச் சொல்லி விடலாம் என்று முடிவெடுத்திருக்கிறேன். அப்படி கூச்சம் பார்க்காமல் சொல்லவில்லை என்றால், கல்லூரியில் நமக்கு ஒரு பைசா தர மாட்டேன் என்கிறார்கள். சென்ற ஆண்டு ஒரு தனியார் பல்கலைக்கழகத்திலிருந்து அழைப்பு. தமிழ்நாட்டின் முதல் இடத்தில் நிற்கும் கல்வி நிறுவனம். அங்கே ஒரு மாணவர் படிப்பதற்கு ஒரு கோடி ஆகிறது. என்னைப் பேச அழைத்தார்கள். எனக்கு எவ்வளவு கட்டணம் என்று கேட்டேன். எதிரே … Read more

ஜோடிப்புறாவை எங்கே காணோம்?

இரவு பகலாக இந்த நாவலை எழுதினேன். இத்தனை தீவிரமாக, இத்தனை வேகமாக ஒரு நாவலை என் வாழ்வில் எழுதியதில்லை. ஐந்து தினங்களில் எழுதி முடித்தேன். மொத்தம் 20000 வார்த்தைகள். அன்பு நாவலின் அடுத்த பாகம் என்று கொள்ளலாம். இதன் பிடிஎஃப் வடிவம் தயாரானதும் யார் யாருக்கெல்லாம் தேவையோ அவர்களுக்கு அனுப்பி வைக்க இருக்கிறேன். என் நாவல்களின் மொழிபெயர்ப்புக்குப் பணம் தேவைப்படுகிறது. பெட்டியோ, அன்பு நாவல்களின் மொழிபெயர்ப்பு முடிந்து விட்டது. ராஸ லீலா பாகம் ஒன்று, பாகம் இரண்டு … Read more

பணம் என்றால் என்ன?

Ayn Rand-இன் இரண்டு நாவல்களில் பணம் பற்றி விரிவாகப் பேசுகிறார். Atlas Shrugged மற்றும் Fountainhead. இதில் முந்தைய நாவலில் விளக்கம் அதிகம். இரண்டையும் நாம் சுருக்கினால், பணம் பற்றிய ஒரு அற்புதமான புரிதல் கிடைக்கும். பல நல்ல மனிதர்கள் பணத்தைப் பற்றி இழிவாகப் பேசுவார்கள். அது தவறு. பணம் என்பது ஒரு பரிமாற்றத்தை மதிப்பீடு செய்யும் கருவி. Tool of exchange என்பது அயான் ராண்டின் பிரயோகம். அது voluntary trade-ஐ அடிப்படையாகக் கொண்டது — … Read more

இரு கரங்களில் வாளுடன் ஒரு சந்நதம்…

‘ஜோடிப்புறாவை எங்கே காணோம்?’ வாசித்தேன். வாசகர்கள் பொதுவாக உங்கள் எழுத்தைக் குறித்து குறிப்பிடுகையில், சந்நதம் வந்து ஆடியிருக்கிறீர்கள் என்பார்கள். அப்படி ஆடும் பொழுது இரண்டு கைகளிலும் வாளைக் கொடுத்தால் என்னவாகும்? அதுதான் இந்த நாவல். விஷயதானம் அளித்தவர்களை எல்லாம் குத்திக் கிழித்துத் தொங்கவிட்டிருக்கிறீர்கள். அதிலும் குறிப்பாக இளைஞர்களை. மாயமான் வேட்டைக்கு ஒரு விவேக் போல, ஜோடிப்புறாவுக்கு ஒரு திவ்யா. இரண்டு கதாப்பாத்திரங்களும் இன்றைய இளைஞர்களின் வறட்டுத்தனமான பிடிவாதம், சுரணையின்மை, கருணையின்மை போன்றவற்றைப் பிரதிபலிக்கும் இருவேறு வடிவங்கள். பிராணிகளின் … Read more