ஒரு பின் நவீனத்துவ எழுத்தாளர் ஆன்மீக நாவல் எழுதலாமா?: வளன் அரசு

பின் நவீனத்துவம் எதையுமே ஒதுக்கியதில்லை. அதன் முக்கியமான அம்சம் தேர்ந்தெடுத்தல். அதாவது உங்களுக்கு முன் பல்வேறு வாய்ப்புகள் இருக்கிறது. அதில் ஒன்றை நீங்கள் தேர்ந்தெடுக்கிறீர்கள். அல்லது நீங்கள் வேட்டைக்கு செல்வதாக கற்பனை செய்துகொள்ளுகள். காட்டில் பல்வேறு விலங்குகள் இருக்கிறது. பார்க்கும் அத்தனை விலங்குகளையும் வேட்டையாடுதல் சரியான வேட்டையல்ல. ஒரு வேட்டைக்காரன் தன் வேட்டையை தெரிவு செய்கிறான். அப்படி தேர்ந்தெடுத்ததும் தன் வேட்டைக்காக காத்திருக்கிறான் அல்லது காட்டில் சுற்றி வருகிறான். அப்போது அவன் முன் தன் வேட்டையைவிட பெரிய … Read more

ஒரு வேண்டுகோள்

நேற்றும் முந்தாநாளுமாகச் சேர்ந்து ஒரு பதினைந்து மணி நேரம் எழுதினேன். நாலைந்து அத்தியாயங்களை முடித்து விடலாம் என்று திட்டம். பார்த்தால் ஒரே ஒரு அத்தியாயம்தான் முடிந்தது. அதுவும் இரண்டாயிரம் வார்த்தைகள் கூட வரவில்லை. நாவல் அத்தனை இறுக்கமாக இருக்கிறது. தினமும் நான்கு மணி நேரம்தான் உறங்குகிறேன். ஆனால் காலை நடைப்பயிற்சியை மட்டும் விடுவதில்லை. என்னுடைய பதினேழாவது வயதிலிருந்து முப்பது வயது வரை தினமும் பத்திலிருந்து பதினைந்து கிலோமீட்டர் ஓடும் பழக்கம் இருந்தது. நாகூரிலும் தில்லியிலும் அதற்கேற்ற பெரிய … Read more

தியாகராஜா

இருபது அத்தியாயங்கள் எழுதி விட்டேன். இன்னும் ஒரு முப்பது அத்தியாயங்கள் எழுத வேண்டும். ஏற்கனவே எழுதி வைத்ததுதான். செப்பனிடும் வேலைதான் செய்து கொண்டிருக்கிறேன். அந்த வேலை எழுதும் வேலையை விட அதிக நேரம் எடுக்கிறது. ஆயிரம் பக்கம் ராஸ லீலாவுக்கு செலவிட்ட நேரத்தை விட மூன்று மடங்கு அதிக நேரம் எடுக்கிறது இந்த நாவலுக்கு. ஏனென்றால், ஒவ்வொரு வார்த்தையையும் வாக்கியத்தையும் எழுதுவதற்கு ஏராளமான ஆய்வுகள் செய்ய வேண்டியிருக்கிறது. இந்த நாவலை நீங்கள் ஒரே அமர்வில் இரண்டு மூன்று … Read more

தியாகராஜா ஸ்பெஷல் எடிஷன்: ஒன்பது பிரதிகள்

ஒருமுறை சீனி எனக்குப் பிடித்த நூறு புத்தகங்களின் பெயர் கேட்டார்.  கொடுத்தேன்.  பார்த்து விட்டு அவர் ஒரு ஆச்சரியத்தைப் பகிர்ந்து கொண்டார்.  அதில் உள்ள தொண்ணூறு புத்தகங்கள் ஓஷோவின் நூறு நூல் பட்டியலில் இருந்ததாம்.  அதில் இரண்டு புத்தகங்கள் மிகெய்ல் நெய்மி எழுதிய தெ புக் ஆஃப் மிர்தால், கலீல் ஜிப்ரான் எழுதிய ப்ராஃபட்.  இருவரும் நண்பர்கள்.  இருவரும் லெபனானைச் சேர்ந்தவர்கள்.  இந்த இரண்டில் ப்ராஃபட் என்ற நூல் பைபிள் அளவுக்கு உலகம் முழுவதும் பிரபலமான புத்தகம்.  … Read more

தியாகராஜா: ஸ்பெஷல் எடிஷன்: மாணவர்களுக்கு

அரசுத் தேர்வுக்குப் படித்துக்கொண்டிருக்கும் ஒரு மாணவியிடமிருந்து இன்று ஒரு மின்னஞ்சல். மாதம் ஐநூறு ரூபாய் அனுப்புகிறேன்; இருபது மாதத்தில் பத்தாயிரம் வந்து விடும். எனக்கு ஸ்பெஷல் எடிஷன் ஒரு பிரதி வேண்டும். நான் சொன்னேன், நீங்கள் நிச்சயம் அரசுத் தேர்வில் தேர்ச்சி பெறுவீர்கள். அதிகார இருக்கையில் அமர்வீர்கள். அப்போது மறக்காமல் இருபதாயிரம் கொடுத்து விடுங்கள்; இப்போது உங்கள் பெயரைச் சேர்த்துக்கொள்கிறேன். இது போல் யாரேனும் மாணவர்களுக்கு ஸ்பெஷல் எடிஷன் தேவைப்பட்டு, இப்போதைக்குப் பணம் இல்லை என்றால், மாதம் … Read more

நான் ஒரு மேதை

என்னோடு உரையாடுபவர்கள், என்னோடு நட்பு பாராட்டுபவர்கள் யாவரும் நான் ஒரு மேதை என்பதை நம்ப வேண்டும். அப்படி நம்பாதவர்கள் என்னோடு உரையாட வேண்டிய அவசியமே இல்லை. அப்படி நம்பாதவர்கள் ன்னோடு நட்பு பாராட்டுவதும் சாத்தியம் இல்லை. இல்லை, சாரு ஒரு பேதை என்று நினைப்பவர்கள் பற்றி எனக்கு அக்கறையே இல்லை. அது அவர்கள் சுதந்திரம். அடுத்தவரின் கருத்துச் சுதந்திரத்தில் நான் குறுக்கிட மாட்டேன். ஒரு எங்கே வரும், ஓர் எங்கே வரும் என்பது கூடத் தெரியாத கேணக்கூதியா … Read more