ராஸ லீலா – வேலை முடிந்தது

ராஸ லீலா பிழைதிருத்தம் முடித்து விட்டேன்.  டைப்செட்டிங் செய்யும் நண்பரிடம் கொடுக்க வேண்டும்.  அவர் இந்தப் பிழைகளையெல்லாம் சரி செய்த பிறகு, சரி செய்த பிரதியை ஒவ்வொரு பிழையாகப் பார்க்க வேண்டும்.  பிரதியைப் படித்துப் பார்க்க வேண்டிய சிரமம் இல்லை.  பிழைகள் சரி செய்யப்பட்டனவா என்று பார்க்க வேண்டும்.  ஒரிரு நாளில் முடிந்து விடும். 

பிழை திருத்தம் செய்வது என்பது பாதாள சாக்கடையில் புகுந்து சுத்தப்படுத்தும் வேலையைப் போன்றது.  அப்படித்தான் இருந்தது எனக்கு.  மது அருந்திக் கொண்டிருந்த போது இத்தனை சிரமம் தெரியவில்லை.  அதுவும் இல்லாததால் மண்டைக்குள் ஆயிரம் தேள்.  அப்படிப்பட்ட வேலை அது.  ஆனால் ஒரு பெரிய ஆசுவாசம் (ஃபேஸ்புக் எழுத்தாளர்கள் இந்த இடத்தில் ரிலீஃப் என்று எழுதுவார்கள்!) என்னவென்றால், ராஸ லீலாவை மீண்டும் ஒருமுறை நிதானமாகப் படித்தேன்.  அற்புதம் என்ற ஒரே வார்த்தைதான் சொல்ல முடிகிறது.  தமிழில் நிகழ்ந்த அற்புதம்.  என் நண்பர்கள் அப்படித்தான் சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறேன்.  ஆனால் இந்த ஆங்கிலம் தெரிந்த மூடர்கள்தான் நாவலின் இரண்டாம் பாகத்தில் repetition இருக்கிறது என்று சொன்னதை என்னால் மறக்க இயலவில்லை.  இப்போது சொன்னார்கள் என்றால் அப்புறம் இருக்கிறது கதை.  தங்களுடைய மூடத்தனத்தை எழுத்தாளனிடமா திணிக்க வேண்டும்?  சொல்லப்போனால், நாவலின் முதல் பாகத்தை விடவும் இரண்டாம் பாகம்தான் இன்னும் செழுமையானது.  சொற்களால் சிருஷ்டிக்கப்பட்டிருக்கும் எப்பேர்ப்பட்ட அபத்த உலகம்!  திரும்பத் திரும்ப அதே வார்த்தைகள், அதே உணர்வுகள், உணர்ச்சிக் கொந்தளிப்புகள்… எத்தனை பெண்கள் இந்த ஹைப்பர் ரியாலிட்டி உலகைத் தங்களின் அபத்த வார்த்தைகளால் புதிது புதிதாக சிருஷ்டித்துக் கொண்டே போகிறார்கள்!  அதிலும் ஃபௌஸியா, மலேஷியா பத்மினி, திவ்யா – மை காட்!  ஆனால் எல்லாவற்றையும் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பே எழுதி விட்டேன்.

இந்த நாவலை நான் மட்டுமே பிழை திருத்தம் செய்ய முடியும்.  ஏனென்றால், ஒரு இடத்தில் Différance என்று வருகிறது. இப்படி நான் எழுதியதை பிழை திருத்தம் செய்பவர்கள் Difference என்று திருத்தம் போடுவார்கள்.  அதனால்தான் என் பிரதியில் யாரும் கையே வைக்கக் கூடாது என்று உத்தரவிட்டிருக்கிறேன்.  Différance என்பது தெரிதா கண்டுபிடித்த கோட்பாடுகளில் ஒன்று. பிரதிக்கும் பிரதியின் அர்த்தத்துக்கும் உள்ள வித்தியாசம் பற்றியது அது.  வேறோர் சமயத்தில் விரிவாக எழுதுகிறேன்.  ராஸ லீலா கலெக்டிபிளை வாங்குங்கள்.  முடியாதவர்கள் இன்னும் ஒரு மாதம் காத்திருந்து நாவலை வாங்கலாம். 

***

ராஸ லீலா கலெக்டிபிள் பற்றி முன்பு எழுதியது:

ராஸ லீலா collectibles (Collecto’s copy) பற்றி அதிகம் பேருக்குத் தெரியவில்லை என்று நினைக்கிறேன். வாசகர் வட்டத்தின் உள்வட்டத்தினர் மட்டுமே பணம் அனுப்பி முன்பதிவு செய்திருக்கின்றனர். இந்த கலெக்டிபிளின் விலை ரூ.10,000/- இதன் மதிப்பு இப்போது தெரியாது. சுமார் ஐந்து ஆண்டுகள் ஆனாலே இந்தப் பிரதியின் மதிப்பு தெரிய வந்து விடும். நெப்போலியன் காலத்தில் தயாரிக்கப்பட்ட கோனியாக் இப்போதும் கிடைக்கிறது. விலை இரண்டரை லட்சம் ரூபாய்.

’கலெக்டிபிள்’ என்றால் அதன் பின் அட்டையில் ராஸ லீலாவின் அந்தப் பிரதியைப் பெற்றுக் கொண்டவரும் நானும் சேர்ந்த புகைப்படம் இடம் பெறும். அதாவது, ஒவ்வொரு பிரதியையும் தனித்தனியே அச்சடிக்க வேண்டும். கிட்டத்தட்ட handmade காஷ்மீர் கம்பளம் மாதிரி. மட்டுமல்லாமல், புத்தகத்தின் முதல் பக்கத்தில் அந்த காப்பியை நான் யாருக்குக் கொடுத்திருக்கிறேனோ அவரைப் பற்றிய என்னுடைய சிறு குறிப்பும் அச்சிடப்பட்டிருக்கும். உதாரணமாக, கணேஷ் அன்புவின் பிரதி என்றால் அந்தப் பிரதியின் பின்னட்டையில் கணேஷ் அன்புவும் நானும் உள்ள புகைப்படம் இருக்கும். முதல் பக்கத்தில் கணேஷ் அன்பு பற்றி நான் எழுதிய குறிப்பு ஒன்றும் இருக்கும். ஒரு காப்பியின் தயாரிப்புச் செலவே 2000 ரூபாய் ஆகும். எனவே யார்யாரால் முடிகிறதோ அவர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். மே 15உடன் இத்திட்டம் முடிவுக்கு வருகிறது. இல்லாவிட்டால் புத்தகம் கிடைக்க நீண்ட நாள் ஆகும். அநேகமாக உலக அளவில் புத்தகத் தயாரிப்பில் இப்படி ஒரு collector’s copy தயாரிக்கப்பட்டதில்லை என்று நினைக்கிறேன். விருப்பம் உள்ளவர்கள் எனக்கு எழுதுங்கள்: charu.nivedita.india@gmail.com

எனவே முடிந்தவரை ராஸ லீலா கலெக்டர்’ஸ் காப்பி திட்டத்தில் கலந்து கொள்ளுங்கள்.  கீழே உள்ள இணைப்பில் யமுனைச் செல்வன் ராஸ லீலா பற்றி எழுதிய கட்டுரை.    
வாசிப்பு: ராஸ லீலா – கொண்டாட்டமான நாவல்

***

www.charuonline.com என்ற இந்த இணையதளம் 2002-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.  சினிமா, இசை, அரசியல், இலக்கியம் போன்ற தலைப்புகளில் இதில் இத்தனை ஆண்டுகளாகத் தொடர்ந்து எழுதி வருகிறேன்.  இந்த இணையதளத்தை ஒரு மாதத்தில் 60000 பேர் வாசிக்கிறார்கள்.  தமிழில் எழுத்தாளர்கள் இணையத்தில் எழுத ஆரம்பிப்பதற்கு வெகுகாலம் முன்னரே ஆரம்பிக்கப்பட்ட பழைய இணைய தளம் இது.  அப்போது விகடன், தினமலர் போன்ற பத்திரிகைகளின் இணைய தளங்கள்தான் இருந்தன.  இப்போது இந்த இணையதளத்தைக் கட்டணம் செலுத்திப் படிக்கும் தளமாக மாற்றலாமா என யோசித்தேன்.  அறுபது ஆயிரத்தில் ஆறு பேர் கூட எஞ்ச மாட்டார்கள்.  முன்பே அதைப் பரிசோதித்துத் தோற்றிருக்கிறேன்.  எனவே மீண்டும் அந்தச் சோதனையில் ஈடுபட மாட்டேன்.  ஆக, இப்போது என் வேண்டுகோள் என்னவெனில், இதை வாசிக்கும் அன்பர்களில் விருப்பமுள்ளவர்கள் தாமாகவே முன்வந்து கட்டணம் செலுத்தலாம்.  விருப்பம் இல்லாதவர்கள் கட்டணம் செலுத்தாமலும் படிக்கலாம்.  அவரவர் விருப்பம்.  பணம் எப்போதும் என் சிந்தனையில் இருந்ததில்லை.   இனிமேலும் இருக்காது.  பணம் பற்றி யோசிக்காமல் இருக்கக் கூடிய சூழல் இருந்தது.  யோசிக்காமல் இருந்தேன்.  இப்போது நிலைமை மாறி விட்டதால் பணத்துக்கான ஒரு சிறிய ஏற்பாடு இது.  எவ்வளவு கட்டணம் என்பதும் அவரவர் விருப்பம்.  மாதாமாதம் அனுப்ப முடியாவிட்டால் மூன்று மாதத்துக்கான தொகையை அனுப்பலாம்.   கட்டணம் செலுத்தவில்லையே, படிக்கலாமா கூடாதா என்ற அறம் சம்பந்தமான கேள்விக்குள் நுழைந்து விடாதீர்கள்.  அது 60000 என்ற வாசகர் எண்ணிக்கையைக் குறைத்து விடும்.  முடிந்தவர்கள் கட்டணம் செலுத்துங்கள்.  முடியாவிட்டால் எந்தப் பிரச்சினையும் இல்லை.

ஓரிரு நண்பர்கள் paypal மற்றும் google pay மூலம் பணம் அனுப்பலாமா என்று கேட்டார்கள்.  நான் paypal-இல் இருக்கிறேன்.  Paypal மூலம் அனுப்ப முடியாவிட்டால் Xoom.com மூலமும் அனுப்பலாம். பேபாலின் கிளை நிறுவனம்தான் அது. கூகிள்பே மூலம் அனுப்ப என் தொலைபேசி எண் வேண்டும் என்று நினைக்கிறேன்.  மின்னஞ்சல் செய்தால் தொலைபேசி எண் தருகிறேன்.  பொதுவில் போட இயலாது.  charu.nivedita.india@gmail.com

கட்டணம் செலுத்துவதற்கான வங்கிக் கணக்கு விவரம்:

UPI ID: charunivedita@axisbank

பெயர்: K. ARIVAZHAGAN

Axis Bank Account No. 911010057338057

Dr Radhakrishnan Road, Mylapore

IFSC No. UTIB0000006

ஒரு நண்பர் பெயரில் உள்ள K என்பதன் விரிவு என்ன என்று கேட்டிருந்தார்.  அவர் வங்கியில் கேட்கிறார்களாம்.  Krishnasamy.  என் தந்தையின் பெயர்.  ஆக்ஸிஸில் அனுப்ப முடியாவிட்டால் என் ஐசிஐசிஐ கணக்கு விபரம் கீழே:

K. ARIVAZHAGAN

ICICI a/c no.  602601 505045

MICR Code: 600229065

IFS Code ICIC0006604

T. NAGAR BRANCH chennai