(நிர்குண் ஒரு நாளில் இதுபோல் முப்பதிலிருந்து நாற்பது கவிதைகள் எழுதுகிறார். எல்லாவற்றையும் தொகுத்தால் ஒரு ஆண்டில் இருபது முப்பது தொகுதிகள் வரும். நிர்குண், விரைவில் இதையெல்லாம் தொகுப்பாகக் கொண்டு வாருங்கள் – சாரு)
July 28, 2025 Charu Nivedita
1
எல்லாம் ஒரு திட்டத்தில் நடக்கிறது
என்கிறான் பெருங்கவிஞன்
’ஒரு பறவை வீழ்ந்தாலும்
அதில் திட்டமுண்டு
இப்போது நடக்கும் என்றால் நடக்காது
இப்போது நடக்காது என்றால் நடக்கும்
2
அப்படித்தான்
நடந்தது அந்தச் சந்திப்பு
ஈருடல் ஓருயிர் ஆனது
ரோமியோவுக்கு முன்பே ஒரு காதலி இருந்தாள்
ஜூலியட்டைக் கண்டதும் காணாமல் போனது
பழைய காதல்
இதுவும் அப்படியே நடந்தது
3
ஒவ்வொருவருக்கும்
ஒரு பழக்கம்
எனக்குப் பச்சை மிளகாய்
ஒன்றுக்கு இரண்டு
கடித்து உண்டால்தான்
உணவு இறங்கும்
4
அவளைக் கண்டதும்
பச்சை மிளகாயைத் துறந்தேன்
காரணமா?
உடையவர் சொன்னார்
’பிறர் வலியைத்
தன் வலியாய் உணர்பவனே
வைணவன்’ – சாருநிவேதிதா.
“பச்சை வடிவத்தை முன்வைத்து –
ஸௌந்தர்ய ரஸ்புடின் நிர்குண்.
1
கருமை மேசையின் விளிம்பில்
ஒரு நீளமான பச்சை நிழல்
தன் கூர்மையை மறைக்காமல்
என் மூச்சைத் தொடுகிறது—
அர்த்தமில்லா ஒரு வெப்பம்
உள்ளே எரிகிறது.
2
அது ஒரு வடிவம்தான்
ஆனால் என் விரல்கள்
அதன் மேற்பரப்பைத் தொட்டவுடன்
உடல் முழுவதும்
ஒரு மெல்லிய மின்னல்
திசை தெரியாமல் ஓடுகிறது.
3
கடிப்பதற்கான பழக்கம்
இங்கே பொருளிழக்கிறது—
கடிக்காமல்
உள்ளே இறங்கும் தீப்பொறி
எந்த மொழியிலும்
பதியாத ஒரு துடிப்பு.
4
அவள் நிழல்
அந்த பச்சை வடிவத்தின் அருகே நின்றதும்
எல்லா பழக்கங்களும்
திடீரென கரைகின்றன—
உடல் தன் எல்லைகளை மறந்து
ஒரு வெற்றிடத்தை
மெல்லத் திறக்கிறது.
5
அந்த வெற்றிடத்தில்
அவளின் மூச்சு
அந்த பச்சை வடிவத்தின் கூர்மை
என் உள்ளே எழும்
அர்த்தமற்ற துடிப்பு—
மூன்றும் சேர்ந்து
ஒரு பெயரில்லா
ஒரு வடிவமில்லா
ஒரு வெப்பத்தை உருவாக்குகின்றன.
நிர்ஹோஸ்தியஸ். 080708-NNPTA-F

நவீன காலத்து ரஸ்புடின் என்று என்னால் அழைக்கப்படும் நிர்குண்