இருட்டு அறையில் முரட்டுக் குத்து (செக்ஸ் கதை அல்ல; துரோகக் கதை): Inspired by Hamlet

எளியவர்கள் பற்றி அராத்து எழுதியதன் தொடர்ச்சி இது. அராத்து எழுதியது ஒரு சமூகவியல் cum அரசியல் ஆய்வு முடிவு. நமக்கு இரண்டு இயலுமே கொஞ்சம் அலர்ஜி. ஆனாலும் கஷ்டப்பட்டு அவர் என்ன சொல்ல வருகிறார் என்று பார்த்தால், மேட்டர் சிம்பிள். எளியவன் என்றால் கஞ்சிக்கு இல்லாதவன் என்று அர்த்தம் அல்ல. மூளை காஞ்சவன் எளியவன். அவன் அம்பானியாகவும் இருக்கலாம். அய்யம்பேட்டை அய்யாசாமியாகவும் இருக்கலாம். அப்படி ஒரு எளியவர் சமீபத்தில் என்னை முதுகில் குத்திய கதை அராத்து, காயத்ரி, … Read more

கலா கௌமுதியில் மீண்டும்…

Bynge.in இல் நான் எழுதி வரும் அ-காலம் தொடரை (அப்படி ஒரு தொடர் வருவது உங்களுக்குத் தெரியுமா?) கலா கௌமுதியில் மொழிபெயர்த்துப் போடலாமா என்று கலா கௌமுதியிலிருந்து தகவல் வந்தது.  அதன் ஆசிரியர் என்னுடைய இருபது ஆண்டுக் கால நண்பர்.  சமீபத்தில் ஏழெட்டு ஆண்டுகளாகத் தொடர்பில் இல்லை.  நான்தான் காரணம். பொதுவாக நான் மலையாளத்தில் வெளியிடுவதை ஏழெட்டு ஆண்டுகளாக நிறுத்தி விட்டேன்.  பணம் ரொம்பக் கம்மியாகத் தருகிறார்கள்.  ஒரு கட்டுரைக்கு ஆயிரம் ரூபாய்.  மாத்ரு பூமியில் மட்டும் … Read more

வயதும் புத்தியும்

நேற்று எழுதிய சிறிய குறிப்பில் கடைசியில் இப்படி எழுதியிருந்தேன். ”என் கட்டுரைத் தொகுதிகளை இன்னும் விரிவாக வாசித்தீர்களானால் இந்தக் கேள்வியே எழாது.  உங்கள் வயது இருபத்தைந்துக்குள் இருக்க வேண்டும்.  சரியா?   வயதைக் கண்டு பிடித்தது உங்கள் கேள்வியினால் அல்ல. உங்கள் மெயில் ஐடியை வைத்து. சுமார் இருபது வயது இளைஞர்கள்தான் இப்படிப்பட்ட ஐடி வைத்துப் பார்க்கிறேன்.” முதலில் இருபத்தைந்து என்று எழுதி விட்டு, பிறகு, அதுவே அதிகம் என்று தோன்றி இருபது என்று இன்னொரு வாக்கியத்தைச் … Read more

அளவுகோல்கள்

அன்புள்ள சாரு அவ‌ர்க‌ளுக்கு, உங்கள் இலக்கிய அளவுகோல்கள் மற்றும் சினிமா அளவுகோல்கள் என்னவாக இருக்கும் என்று அவ்வப்போது நான் யோசிப்பதுண்டு. நீங்கள் சில படைப்புகளை குப்பை என்றும் சில படைப்புகளை அற்புதம் என்றும் சிலாகிப்பீர்கள். எப்படி சில படைப்புகளை குப்பை என்றும் அற்புதம் என்றும் மதிப்பிடுகிறீர்கள். சொன்னால் நன்றாக இருக்கும்.  இப்படிக்கு உங்கள் வாசகன்,  தினேஷ்  அன்புள்ள தினேஷ், நேற்று காலையிலிருந்து தியாகராஜாவுக்காகப் பதினாறாம் பதினேழாம் நூற்றாண்டு எழுத்துகளைப் படித்துக் கொண்டிருந்த நிலையில் உங்கள் இந்தக் கடிதம் … Read more

இவளே, என்னைப் பற்றி என்ன நினைக்கிறாய்?

இப்போலாம் என்ன பாராவோட ரொம்ப க்ளோஸ் போல இருக்கு? இந்த கொரோனா காலத்துல என்ன க்ளோஸ்?  கொரோனாவே எல்லாத்தையும் க்ளோஸ் பண்ணிக்கிட்டு இருக்கு, நீங்க வேறே… இல்ல.  கவனிச்சுக்கிட்டுத்தான் வர்றேன்.  பழக வேணாம்னு சொல்லல.  அவரும் நல்ல மாதிரிதான்.  ஆனா உங்களோட ராசி என்னன்னா நீங்க யாரோட க்ளோஸா ஆனாலும் அவங்க பிறகு உங்களுக்கு எதிரியா மாறிட்றாங்க.  பாருங்க, நீங்கதானே சொன்னீங்க, வெளி ரங்கராஜன் தன் வாழ்நாளிலேயே திட்டி எழுதின ஆள் நீங்கதான்னு… அதனால சொல்றேன்.  சேச்சே. … Read more