சாருவுடன் சில தினங்கள்…

வாசகர்கள் எழுத்தாளர்களை நேரில் சந்திக்கக் கூடாது என்ற  கருத்தை சுஜாதா ஒரு தடவை சொல்லப் போக, தமிழ்நாட்டின் வாசிப்புத் தளத்தில் சுஜாதா அப்போது பெரும் சக்தியாக விளங்கியதால் அவர் சொன்னது அனைத்து வாசகரிடத்திலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி விட்டது. அது ஒரு தவறான கருத்து.  காரணம்? சாக்ரடீஸிலிருந்து இன்றைய எழுத்தாளர் வரை அவர்கள் எழுதியவற்றை விட பேச்சின் மூலமும் உரையாடலின் மூலமும்தான் அதிகமான சிந்தனை மாற்றங்களை வாசகரிடத்தில் ஏற்படுத்துகிறார்கள்.  என்னை எடுத்துக்கொண்டால், நான் எழுதியது வெறும் பத்தே … Read more

வயது (குறுங்கதை)

கோயம்பத்தூர் புத்தக விழாவில் ஒரு மூத்த எழுத்தாளரைச் சந்திக்க நேர்ந்தது.  நீண்ட கால நண்பர்.  சந்தித்து சில ஆண்டுகள் இருக்கும்.  பத்து ஆண்டுகள் கூட இருக்கலாம்.  எனக்குப் பிரியமான எழுத்தாளரும் கூட.  அவரோடு இருந்தால் எப்போதும் சிரிப்பும் அமளியுமாகவே இருக்கும்.   குசலம் விசாரித்த பிறகு உரையாடலை எங்கிருந்து தொடங்குவது என்று தெரியவில்லை.  நண்பர் என்னைப் போலவே ஒரு குடிவிரும்பி.  குடி பற்றிய அல்லது எது பற்றியுமே சங்கோஜமோ, கூச்ச உணர்வோ, குற்ற மனப்பான்மையும் இல்லாத அளவுக்கு வெளிப்படையானவர். … Read more

இலக்கிய நூல்களின் இன்றைய நிலை

1.சமீபத்தில் கோயம்பத்தூர் புத்தக விழாவில் ஒருவர் என்னைச் சந்தித்தார்.  அடையாளம் தெரியவில்லை.  பார்த்து இருபது ஆண்டுகளோ அதற்கு மேலோ இருக்கும்.  பெயரைச் சொன்ன பிறகுதான் புரிந்து கொண்டேன்.  முன்பு அவர் எனக்கு மிகவும் நெருக்கமான நண்பராக இருந்தவர்.  பிறகு பல லௌகீக காரணங்களால் இலக்கியத்திலிருந்து ஒதுங்கி விட்டார்.  தொடர்பு விட்டுப் போயிற்று.  இப்போது இருபது ஆண்டுகள் கழித்து, லௌகீக வாழ்க்கை சற்றே அலுத்துப்போய் இங்கே இலக்கியத்தின் பக்கம் வந்து எட்டிப் பார்த்தால் என்ன ஆகும்?  இங்கே இலக்கியத்திலோ … Read more

ஔஸீரா X

ஔரங்ஸேப், ஸீரோ டிகிரி, ராஸ லீலா, எக்ஸைல் ஆகிய நான்கு நாவல்களிலிருந்தும் சில பகுதிகளைத் தேர்ந்தெடுத்து அதை ஔஸீரா X என்ற தலைப்பில் ஒரு தொகுப்பாகக் கொண்டு வருகிறார்கள் ராஸ லீலா பதிப்பகத்தினர். சாரு களஞ்சியம் என்ற தொகுப்புக்கு இது ஒரு முன்னோட்ட வெளியீடாக இருக்கும். அதன் அட்டைப் படம் கீழே. அட்டை வடிவமைப்பு நிர்குண்

சாரு களஞ்சியம்

ராஸ லீலா பதிப்பகத்திலிருந்து Charu Reader என்ற தொகுதி வெளிவர இருக்கிறது. சாரு களஞ்சியம் என்று பெயர் வைத்திருக்கிறேன். இரண்டு தொகுதிகள். ஒவ்வொரு தொகுதியும் ஆயிரம் பக்கம். கெட்டி அட்டை. இன்னும் இரண்டு மாதங்களில் வரும். ஸீரோ டிகிரி பதிப்பகத்தின் மூலம் என்னுடைய அறுபத்தொன்பது நூல்கள் வந்துள்ளன. ராஸ லீலா பதிப்பகத்திலிருந்து பதினோரு நூல்கள். இந்த எண்பது நூல்களிலிருந்தும் உங்களுக்குப் ப்பிடித்த பகுதிகளின் பக்க எண்களை எனக்கு அனுப்புங்கள். தொகுப்பு வேலைக்கு எனக்கு அது உதவியாக இருக்கும். … Read more

வெறியாட்டம்

தெய்யம் என்று ஒரு நடனம். இரண்டாயிரம் ஆண்டுகள் பழமையானது. நான் 1978இலிருந்து 1990 வரை தில்லியில் இருந்த போது தெய்யம் நடனத்தைப் பார்த்திருக்கிறேன். தெய்யம் கலையின் உச்சபட்ச கலைஞர்களின் நடனத்தை அங்கே அனுபவம் கொண்டிருக்கிறேன். உத்தம வில்லன் படத்தில் தெய்யம் கொஞ்சமாக வருகிறது. தெய்யம் போன்ற ஒரு கடினமான நடனக் கலை உலகிலேயே இல்லை என்பது என் கருத்து. பாலேயும் கடினமானதுதான். ஆனால் தெய்யம் நெருப்பு. நெருப்போடு ஆட வேண்டும். வேண்டுமானால் இப்படிச் சொல்லலாம். இத்தனை ஆக்ரோஷமான … Read more