வைர சூத்திரத்தின் விலை

ஏற்கனவே பல முறை எழுதிய விஷயம்தான்.  மீண்டும் எழுத வேண்டியிருக்கிறது.  ஒரு இணைய இதழில் நான் கொடுத்த மிக நீண்ட நேர்காணலை நீங்கள் படித்திருப்பீர்கள்.  என் எழுத்து வாழ்விலேயே எனக்கு அதிக எதிர்வினைகள் வந்தது அந்த நேர்காணலுக்குத்தான்.  அதற்கு முன்பு ஒரு ஜனரஞ்சகப் பத்திரிகையின் இணைய இதழில் கோணல் பக்கங்கள் என்ற பத்தியை எழுதியபோதுதான் அந்த அளவுக்கு எதிர்வினைகள் வந்தன.  அந்த நீண்ட நேர்காணல் ஒரு நூறு பக்க புத்தகமாக வரும்.  நூறு பிரதிகள் விற்கும்.  எனக்கு அதன் மூலம் ஆயிரம் ரூபாய் ராயல்டி கிடைக்கும்.  நேர்காணல் வந்த … Read more

மைலாப்பூரில் கூழ் கிடைக்குமா?

ஃபேஸ்புக்கில் சீனி ஒரு மதிய வேளையில் கூழ் குடித்தது பற்றி எழுதியிருந்தார். என்ன ஆச்சரியம், நான் ஒரு நான்கு தினங்களாக கூழ் பற்றியே யோசித்துக்கொண்டிருக்கிறேன். நான் தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்தவன் என்பதால் இருபது வயது வரை கோதுமை, கேழ்வரகு பற்றி எதுவுமே தெரியாது. பார்த்தது கூட இல்லை. கம்பு பற்றி கேள்வியே பட்டதில்லை. இருபது வயதுக்கு மேல்தான் காட்பாடி பக்கம் வந்த போது அங்கே கேழ்வரகு கூழ் குடிக்க நேர்ந்தது. அதற்குப் பிறகு நான் கூழுக்கு அடிமையாகி … Read more

பாராட்டும் திட்டும்

டியர் சாரு, ”நீங்கள் திட்டினால் திட்டு வாங்குபவர் அரிவாளால் தன் நெஞ்சைப் பிளந்து இதயத்தைக் கையில் எடுத்து வைத்துக்கொண்டு கதறுவார்கள்” என்று ஒருமுறை அராத்து நம்முடைய கலந்துரையாடலின்போது சொன்னார். ஆனால் இப்போது அப்படியெல்லாம் இல்லாமல் மிகவும் மென்மையாகி விட்டீர்கள் என்றும் கூடவே சேர்த்துக்கொண்டார். ஆனால் இன்னொரு விஷயத்தை நான் கவனித்திருக்கிறேன். நீங்கள் யாரையாவது பாராட்டினால் அவருக்குப் பைத்தியம் பிடித்து விடுகிறது. சாமியாரிலிருந்து ஆரம்பித்து ”இப்போது” வரை அதுதான் நடக்கிறது. இந்த விதியிலிருந்து தப்பிப் பிழைத்த ஒரே ஒருவர் … Read more

வாசகர் வட்டம்

சிறுபத்திரிகை எழுத்தாளர்கள் என்று இன்று யாரும் இல்லை. இப்போதைய பிரிவு, ஜனரஞ்சக எழுத்தாளர்கள், இலக்கியவாதிகள். அவ்வளவுதான். ஜனரஞ்சக எழுத்தாளருக்கும் நமக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஆனால் இலக்கியவாதிகளையும் ஜனரஞ்சகப் பத்திரிகைகள் இப்போது அனுமதிக்கின்றன. லா.ச.ரா. மட்டும் வாழ்நாள் முழுக்கவும் ஜனரஞ்சகப் பத்திரிகைகளில் மட்டுமே எழுதியவர். அவருக்கு ஜனரஞ்சகம் இடம் கொடுத்தது. அசோகமித்திரன் ஜனரஞ்சகப் பத்திரிகைகளிலும் கணையாழி, தீபம் போன்ற இடைநிலைப் பத்திரிகைகளிலும் எழுதியவர். அவரையும் சிறுபத்திரிகை வட்டத்தில் குறுக்க முடியாது. சுந்தர ராமசாமி அப்படி இல்லை. தீவிர … Read more

தவம்

என்னிடமிருந்து கற்றுக் கொள்வதற்கும் பெற்றுக் கொள்வதற்கும் ஆயிரமாயிரம் விஷயங்கள் உண்டு. முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு கல்குதிரைக்காக ஏராளமான லத்தீன் அமெரிக்கச் சிறுகதைகளை நான் மொழிபெயர்த்திருக்கிறேன். அதில் ஒன்று, கடல் கன்னி என்ற கதை. கிட்டத்தட்ட குறுநாவல் அளவு வரும். ரொஹெலியோ சினான் (Rogelio Sinán) என்ற எழுத்தாளரின் கதை. பனாமாவைச் சேர்ந்தவர். இவர் பெயரெல்லாம் யாருக்கும் தெரியாது. எனக்கு எப்படித் தெரிந்தது? அந்தக் காலகட்டத்தில் கூபாவிலிருந்து க்ரான்மா என்ற வாரப் பத்திரிகை வந்து கொண்டிருந்தது. Tabloid. அதுவரை … Read more

லத்தீன் அமெரிக்க இலக்கியமும் நானும்…

My Life, My Text என்ற தலைப்பில் கனடாவிலிருந்து வெளிவரும் Asian Review இணைய இதழில் என் சுயசரிதத்தை எழுதி வருவது உங்களுக்குத் தெரிந்திருக்கும். இப்போது அதன் ஆறாவது அத்தியாயம் வெளிவந்திருக்கிறது. இந்தத் தொடருக்காக இதுவரை உலக மொழிகளில் எழுதப்பட்டுள்ள முக்கியமான சுயசரிதங்களைப் படித்து விட்டேன். ஒன்றே ஒன்றுதான் பாக்கியிருக்கிறது. ஆலன் ராப்-க்ரியே எழுதிய Ghosts in the Mirror. இன்னும் சில தினங்களில் கிடைத்து விடும். காத்திருக்கிறேன். அதற்கிடையில் கார்ஸியா மார்க்கேஸ் பற்றிய கலந்துரையாடலுக்காகப் படித்துக்கொண்டிருக்கிறேன். … Read more

வாசிப்பு

வாசகர் வட்டத்தில் ராஜா என்று ஒரு நண்பர். என்னுடைய புத்தகங்களில் சித்தரிக்கப்படும் இடங்கள் ஒன்று விடாமல் நேரில் சென்று பார்த்து விடும் பழக்கம் உள்ளவர். ஔரங்ஸேப் நாவலில் நான் அப்படி பல ஊர்களைப் பற்றி எழுதியிருக்கிறேன். எல்லாம் சூஃபி ஞானிகள் வாழ்ந்து அடங்கிய ஊர்கள். அந்த ஊர்களுக்கெல்லாம் போய் வந்திருக்கிறார் ராஜா. கூட வருவதற்கு நண்பர்கள் இல்லாமலேயே போய் வந்து விடுவார். இரண்டு மாதங்களுக்கு ஒரு முறையாவது நாகூர் கொசத்தெருவில் நான் வாழ்ந்த வீட்டுக்குப் போய் வருவார். … Read more