வாழ்க்கையில் எடுத்த மிகத் துணிச்சலான முடிவு

ஆம், அன்பு குறித்து ஒரு புகார் மனு நாவலை எழுதத் துணிந்ததுதான் என் வாழ்வில் நான் எடுத்த மிகத் துணிச்சலான முடிவு. இது வெளிவந்தால் என் உற்றம் சுற்றம் நட்பு என்று பலரும் என்னை விட்டு நிரந்தரமாகப் பிரிந்து போகலாம். நான் ஏற்கனவே சொல்லியிருக்கிறேன். நான் பிரேதங்களின் மீது நடந்து எழுதுகிறேன் என்று. என் வாழ்வை எரித்துக் கொண்டு எழுதுகிறேன். என்ன ஆனாலும் சரி என்று துணிந்து எழுதியிருக்கிறேன். இதை எழுதியே ஆக வேண்டும். உலகளந்தான் என்ற பாத்திரம்தான் இதற்கான விசையை எனக்கு அளித்தது. படித்தால் உங்களுக்குப் புரியும். வெறித்தனமாக எழுதினேன். ஒரே வாரத்தில் எழுதினேன். 300 பக்கம் வரலாம். முடித்து விட்டு செப்பனிடும் பணியைச் செய்து கொண்டிருக்கிறேன்.

உலகில் உள்ள எல்லா இலக்கியப் படைப்புகளும் அன்பையே மையமாகக் கொண்டு இயங்குகின்றன. ஆனால் அன்பு எத்தனை பெரிய வன்முறைக்கான கண்ணி என்பதை இந்த நாவல் சுட்டுகிறது. உலக இலக்கிய வரலாற்றில் அன்புக்கு எதிராக எழுதப்பட்ட முதல் நாவல் இதுதான் என்று துணிந்து கூறுகிறேன். அதற்காக எல்லோரும் கத்தியை எடுத்துக் கொண்டு ஒருவரை ஒருவர் குத்துக் கொல்லுங்கள் என்று சொல்லவில்லை. அன்பு என்று சொல்பவர்களின் கைகளில் உள்ள ரத்தக் கறை பற்றியே இந்த நாவல் பேசுகிறது.

காஃப்காவின் கே எப்படி இலக்கியத்தில் முக்கியமோ அதே அளவுக்கு முக்கியம் பெறுவார்கள் இந்த நாவலின் பெருமாளும் உலகளந்தானும். பல பக்கங்களை நான் உன்மத்த நிலையில் எழுதினேன். இல்லாவிட்டால் ஒரு முந்நூறு பக்க நாவலை ஒரே வாரத்தில் எழுதியிருக்க முடியாது. பேய் வேகம் என்று சொல்லலாம். தட்டச்சு செய்த வேகத்தில் நரம்புகள் நடுங்குகின்றன. தோள்பட்டை கடுக்கிறது.

படித்தால் இந்த வெறியைப் புரிந்து கொள்வீர்கள்.

எக்ஸைல் ஒரு துருவம் என்றால் அன்பு குறித்து ஒரு புகார் மனு இன்னொரு துருவம். இதுவரை உலக இலக்கியத்தில் இந்த விஷயம் பேசப்பட்டதில்லை என்பது இந்த நாவலை முக்கியத்துவமாக்குகிறது.

த அவ்ட்ஸைடர் ஆவணப்படத்துக்கு இருபத்தைந்து லட்சம் போல் செலவாகியிருக்கிறது. படத்தைப் பார்த்தவர்களுக்கு அது புரிந்திருக்கும். இன்னும் ஃபெப்ருவரியில் சீலே போக வேண்டும். அதற்கான நிதி திரட்டுதலில் இந்த நாவலை ஈடுபடுத்தப் போகிறேன். நாவலின் பிடிஎஃப் வடிவத்தை உங்களுக்கு அனுப்புவேன். படித்து விட்டு நண்பர்களுக்குப் பகிரக் கூடாது. உங்களை நம்பித்தான் இதைச் செய்கிறேன். ஒரு சத்தியத்துக்குக் கட்டுப்பட்டதாக. பத்தாயிரம் ரூபாய் இதன் ஆரம்ப அன்பளிப்பு. பத்தாயிரம் ரூபாய்க்கு மேலும் அனுப்பினால் என் செயல்பாடுகளுக்கு உதவும்.

பத்தாயிரம் என்ற தொகை உங்கள் மனதில் உட்காரும்போது அது என் வாழ்வின் விலை என்பதை கவனத்தில் கொண்டு தொகையில் பூஜ்யத்தை நிரப்புங்கள். ஒரு லட்சம் என்றுதான் அன்பளிப்பை ஆரம்பிக்கலாம் என்று நினைத்தேன். அப்படிச் செய்தால் அது ஓரிருவரால்தான் முடியும் என்ற தயக்கம் இருந்தது. பத்தாயிரம் என்று போட்டு விட்டேன். புத்தகம் எப்படியும் வெளியே வர பத்து நாட்கள் ஆகும். இப்போது நான் அனுப்புவது பிடிஎஃப் வடிவம். புத்தகம் வெளிவருவதற்கு முன்பே படிக்கிறீர்கள் என்பதையும் மனதில் கொள்ளுங்கள்.

பணம் அனுப்புபவர்களுக்கு அன்பு குறித்து ஒரு புகார் மனு நாவலின் பிடிஎஃப்பை அனுப்பி வைக்கிறேன். இதை நன்கொடை என்றே கருதுங்கள். விலை அல்ல. ஏனென்றால், இந்த நாவலில் என் வாழ்வையே உருக்கி எழுதியிருக்கிறேன். என் வாழ்வைப் பகடையாக மாற்றி உங்கள் முன்னே வீசியிருக்கிறேன். எடுத்துப் படித்துப் பாருங்கள்…

RazorPay மூலம் அனுப்பலாம். அல்லது, என்னுடைய ஐசிஐசிஐ வங்கி அல்லது ஆக்ஸிஸ் வங்கிக் கணக்குக்கு அனுப்பலாம். விவரம் கீழே.

UPI ID: charunivedita@axisbank

பெயர்: K. ARIVAZHAGAN

Axis Bank Account No. 911010057338057

Dr Radhakrishnan Road, Mylapore

IFSC No. UTIB0000006

பெயரில் உள்ள K என்பதன் விரிவு Krishnasamy.  ஆக்ஸிஸில் அனுப்ப முடியாவிட்டால் என் ஐசிஐசிஐ கணக்கு விபரம் கீழே:

K. ARIVAZHAGAN

ICICI a/c no.  602601 505045

MICR Code: 600229065

IFS Code ICIC0006604

T. NAGAR BRANCH Chennai