பெட்டியோ பற்றி அராத்து

சாருவின் பெட்டியோ நாவலை படித்து முடித்தேன். பெரும்பாலானவர்கள் சாரு சர்ச்சைக்குரிய எழுத்தாளர் என்று திருவாய் மலருவார்கள். கடைசியில் பார்த்தால் அதில் ஒரு சர்ச்சையும் இருக்காது.

இந்த நாவலில் நான்கைந்து வெடி குNடுகள் இருக்கின்றன. இலக்கிய உலகமே கலவர பூமியாக மாறக்கூடிய சாத்தியக்கூறு உள்ளது. எத்தனை தலைகள் விர்ச்சுவலாக உருளப்போகின்றனவோ?

NFT என்பதால் இதெல்லாம் நடக்காமல் போகக்கூட சாத்தியம் உள்ளது. 100 பிரதிகள் மட்டுமே. யாரேனும் வாங்கியவர்கள் கொஞ்சம் கொஞ்சம் வெளியே விட்டால் கூட போச்சி….பற்றிக்கொள்ளும்.