புதுமைப்பித்தனின் கபாடபுரம்

புதுமைப்பித்தனின் சில முக்கியமான கதைகளை நம் தளத்தில் கொடுத்து வருகிறேன். ஆனால் எந்த எதிர்வினையும் இல்லை. தொடர்ந்து கொடுக்கவா, நிறுத்தி விடவா? பின்வரும் லிங்கில் புதுமைப்பித்தனின் பல கதைகள் உள்ளன. அதில் கபாடபுரமும் உள்ளது. புதுமைப்பித்தன் அதை 75 ஆண்டுகள் முந்தி எழுதி விட்டார். இன்று எழுதியிருந்தால் அது மிகப் பெரிய உலக சாதனை. 75 ஆண்டு முந்தி விட்டதால் இன்றைய வாசகர்களுக்குத் தெரியாமலே போய் விட்டது. என்றாலும் எழுத்தாளர்கள் அனைவரும் படித்திருக்கிறார்கள். பலர் அது பற்றி எழுதியிருக்கிறார்கள். ஆனால் கல்கி படித்தவர்களுக்கு கபாடபுரம் தெரியாமல் போய் விட்டது. ஒரு மகத்தான சயன்ஸ் ஃபிக்‌ஷன் கதை அது. படித்துப் பாருங்கள். உலக மொழிகளில் எழுதப்பட்ட உச்சபட்ச சயன்ஸ் ஃபிக்‌ஷன் கதைகளுக்கு நிகரான இந்தக் கதை எழுதப்பட்ட ஆண்டு 1945.

https://tamil.pratilipi.com/read/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%88-jxpzfc7julup-282546auni21594