5. ஒரு சிறிய கூழாங்கல் போதும்…

இதே தலைப்பில் அமைந்த மூன்றாவது கட்டுரையின் தொடர்ச்சி இது:

தமிழ்நாட்டிலேயே நாகர்கோவில் மாதிரி ஒரு ஊர் வராது.  சொர்க்கம் மாதிரி இருக்கும்.  ஆனால் பெரும்பாலான மனிதர்கள் நரகர்கள்.  அசுரர்கள்.  பெரும்பாலான என்று சொல்லி விட்டேன்.  எல்லோரும் அல்ல.  அதிலும் என் வாழ்வில் நான் சந்தித்த நாகர்கோவில் ஆட்கள் ஒருத்தரை ஒருத்தர் மிஞ்சிக் கொண்டேதான் போகிறார்கள்.  ரெண்டு மாதத்துக்கு முன்பு ஒருத்தர் – ஒரு இருபத்தஞ்சு வயது சின்னப் பையன் – வந்தார்.  பழகினார்  அவரிடம் நான் நாகர்கோவிலாச்சே, தம்பி நீ எப்படி என்று கேட்டபோது சேசே, நான் விதிவிலக்கு சார் என்றார்.  ஒரு பதினைந்து நாள் ஓடவில்லை.  நான் பார்த்த மனிதர்களிலேயே படுபயங்கரம் அவர் தான்.  பேராசை, பணத்தாசை, நம்பிக்கைத் துரோகம், அகங்காரம்… ஐயோ, நம்பவே முடியவில்லை.  எல்லாம் இருபத்தஞ்சு வயதில்.  ஆனால் அவர் ஒரு எழுத்தாளர் என்பதால் ஆச்சரியம் விட்டுப் போயிற்று.  இப்போதெல்லாம் எழுத்தாளர்கள் அப்படி இல்லை என்றால்தான் ஆச்சரியம்.

நாகோர்கோவிலாக இருந்தாலும் தன் உத்தம குணங்களால் அசத்தியது துபய் சுதாகர்தான்.  அற்புதமான மனிதர்.  அவரைத் தவிர்த்து ஒரு ஆளை வில்லங்கமில்லாமல் பார்த்ததில்லை.  அதே துபயில்தான் இன்னொரு நாகர்கோவில் ஆள்.  எனக்கு நாவல் அனுப்பி அபிப்பிராயம் கேட்டவர்.  ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு அவருடைய சிறுகதைத் தொகுதியை இரண்டு மாதங்கள் செலவழித்து எடிட் செய்து கொடுத்தேன்.  போகட்டும்.  அது நான் விரும்பி செய்தது.  அதற்குப் பிறகு அந்த ஆள் ஓடியே போய் விட்டார்.  பிறகு எந்தெந்த பதிப்பகங்களிலோ அவர் புத்தகம் வந்தது.  ஒரு வார்த்தை சொல்லவில்லை.  ஒரு தொடர்பு இல்லை.  என் துபய் நண்பர்களோடும் அவருக்குத் தொடர்பு இல்லை போல் தெரிகிறது.  இந்த வாக்கியம் ரொம்ப முக்கியம்.  ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள்.  சென்ற ஆண்டு துபய் சென்றிருந்த போது ஒரு மதிய நேரத்தில் வந்து சாப்பாடு வாங்கிக் கொடுத்தார்.  ஓடி விட்டார்.  அத்தோடு சரி.  இப்போது அவர் நாவலைப் படித்து நான் ரெண்டு வார்த்தை திட்ட வேண்டுமாம்.

இது பற்றி நேற்று எழுதிய பிறகு என் மன உளைச்சல் தீரவில்லை.  பா.ராகவன் எழுதியது போல் நாவலைப் படித்துப் பாருங்கள் என்று சொன்னதால் மன உளைச்சல் இல்லை.  அதுபோல் ரெண்டு தினங்களுக்கு ஒருமுறை நாவலோ சிறுகதைத் தொகுதியோ குறும்படமோ வந்து கொண்டேயிருக்கின்றன.  எல்லாம் குரியரில் வருகின்றன.  அதையெல்லாம் நான் பிரித்துப் பார்த்து விட்டு பழைய பேப்பரோடு போட்டு விடுகிறேன்.  சமீபத்தில் அப்படி வந்த புத்தகம் திருக்குறளில் பெண்கள்.  அப்படியிருக்கும்போது இந்த நாவலுக்கு மட்டும் ஏன் காண்டு என்றால், இந்த ஆள் எனக்குத் தெரிந்தவர் என்பதுதான்.  என்னை அப்பா என அழைப்பவர். தனிப்பட்ட முறையில் ரொம்ப ரொம்ப நல்லவர்.  இதுதான் நீங்கள் கவனிக்க வேண்டியது.  ரொம்ப ரொம்ப நல்லவர்.  மற்றவர்களுக்கு எந்தத் தீங்கும் செய்ய நினைக்காதவர்.  அவருக்குத் தான் என்ன தப்பு செய்தோம் என்பது கூடத் தெரியாது.  ஏன், என் உடன் இருப்பவர்களுக்கே சிலருக்குத் தெரியாத போது எங்கோ இருப்பவருக்கு என்ன தெரியப் போகிறது?

நான் சொல்வது மிக எளிய விஷயம்.  நீ ஒருத்தனை அப்பா என அழைக்கிறாய்.  அவர் உனக்குத் தன் ரெண்டு மாத உழைப்பை நல்கியிருக்கிறார்.  பதிலுக்கு நீ என்ன செய்தாய்?  சொல்லியிருக்கிறேன், எங்கள் ஊரில் கலியபெருமாள் என்று ஒருத்தன் இருந்தான்.  பதினெட்டு வயதில் முஸ்லீமாக மதம் மாறினான்.  அம்மா இல்லை.  அப்பா அவனைக் கொத்துவேலை பார்த்துக் காப்பாற்றினார். மற்றவர்களைப் போல் ரெண்டாம் கல்யாணம் செய்து கொள்ளவில்லை. இவனுக்காகவே.  முஸ்லீமாக மாறியதும் அப்பாவை நடுத்தெருவில் விட்டு விட்டு பெண் வீட்டோடு போய் விட்டான்.  அதே நாகூரில்தான் இருந்தான் அப்துல்லா.  இப்போது அவன் பெயர்.  அவன் அப்பா தெருத்தெருவாகப் பிச்சை எடுத்து வாழ்ந்தார்.  ஏன் இது என் மனதில் பதிந்த சம்பவமாகப் போய் விட்டது என்றால், என் அம்மாதான் அவருக்கு தினமும் ராச்சாப்பாடு போடுவார்கள்.  நாங்களே எட்டு பேர்.  அவர் ஒருத்தர் எக்ஸ்ட்ரா.  சுடுகாட்டுக் கொட்டகையில்தான் அவர் வாசம்.  இந்தக் கலியபெருமாள் என்கிற அப்துல்லாவுக்கும் என்னிடம் நாவலைப் படிக்கச் சொல்லிக் கேட்ட தம்பிக்கும் என்ன வித்தியாசம்? உனக்கு நான் என்னுடைய ரெண்டு மாத காலத்தைத் தந்தேன்.  ஓடி விட்டாய்.  ஓடு.  அது உன் இஷ்டம்.  அப்புறம் என் பக்கமே தலைவைத்துப் படுக்கக் கூடாது அல்லவா?  அப்புறமும் எதற்கு நாவலை எழுதி என்னிடம் நொட்டுகிறாய்?

எனக்கு ஒரு சம்சயம் ஏற்பட்டது.  இந்த ஆள் நம் ப்ளாகைப் படிக்கிறாரா?  படிக்க மாட்டார் என்றே தோன்றியது.  நான் இவரைத் திட்டி எழுதியதையே இவர் படித்திருக்க மாட்டார்.  துபய் நண்பர்களும் சொல்லியிருக்க மாட்டார்கள்.  ஏனென்றால், அவருக்கு யாரோடும் தொடர்பு இல்லை.  நான் அவருக்கு ஒரு கடிதம் எழுதினேன்.  என் ப்ளாகில் நான் எழுதுவதை நீங்கள் படிக்கிறீர்களா? உண்மையைச் சொல்லுங்கள்.

இதற்கு அந்தத் தம்பி நேற்று எழுதியிருந்த பதில்:

“படிப்பதில்லை. மன்னியுங்கள்.

உடல்நிலை காரணமாக சிரத்தையாக சமூக ஊடகங்களில் தற்போது இயங்குவது இல்லை. ஆனால் நேற்றைய இரவில் கூட என் மனதிற்கு நெருக்கமான உங்கள் திசை அறியும் பறவைகள் புத்தகத்தைப் படித்தேன்.”

என்ன ஒரு அயோக்கியத்தனமான பதில் பாருங்கள்.  உடல்நிலை சரியில்லாததால் சமூக ஊடகங்களில் இயங்குவது இல்லையாம்.  அடப் பாவி, என் இணைய தளம் சமூக ஊடகமா?  என் எழுத்துக்கும் முகநூலுக்கும் கூட தம்பிக்கு வித்தியாசம் தெரியவில்லை.  ஆனால் உடல்நிலை சரியில்லாத நிலையிலேயே ஐயாவால் நாவல் எழுத முடிந்திருக்கிறது.

நான் என்ன சொல்ல வருகிறேன் என்று புரிகிறதா?  எனக்கு நீ பணம் கொடுக்க வேண்டாம்.  குறைந்த பட்சம், நான் எழுதுவதையாவது படிக்கிறாயா என்றால் அதற்கு ஒரு அயோக்கியத்தனமான பதிலைக் கொடுக்கிறாய்.  28 வயதான உன் நேரத்தை எனக்குத் தர மாட்டாய்.  ஆனால் 68 வயதான நான் என் நேரத்தை உனக்குத் தர வேண்டும் என்று எதிர்பார்க்கிறாய். 

இதனால்தான் சொன்னேன், ஒரு பெண்ணைப் பார்த்து படுக்க வர்றியா என்று கேட்பதற்கும் இந்தப் பையனின் மனோபாவத்துக்கும் எந்த வித்தியாசமும் இல்லை என்று.  இப்போது இதையும் அந்த ஆள் படிக்க மாட்டார்.  அவர்தான் சமூக ஊடகங்களில் இயங்குவதில்லையே?  சமூக ஊடகம் என்ன porn siteஆ, உடம்பு சரியில்லாவிட்டால் இயங்காமல் இருப்பதற்கு?  படிச்சியா என்று கேட்டால் இயங்குறாராம் இயங்கு.

***

என் சக எழுத்தாளர்கள் மற்றும் மாணவர்கள் தவிர மற்றவர்கள் இந்தத் தளத்தை வாசிக்கும் நண்பர்கள் இதற்குக் கட்டணமாக அல்லது நன்கொடையாக நீங்களே ஒரு தொகையை நிர்ணயித்து அனுப்பி வைக்க முயற்சி செய்யுங்கள்.  மாதாந்திரக் கூட்டங்களில் கலந்து கொள்பவர்களும் இதே முறையைப் பின்பற்றி எனக்குப் பணம் அனுப்பி வைக்கலாம்.

PayPal மூலம் பணம் அனுப்ப என் மின்னஞ்சல் முகவரி மட்டும் போதும். charu.nivedita.india@gmail.com

Xoom.com மூலம் பணம் அனுப்ப என் முகவரி தேவை எனில் எனக்கு எழுதுங்கள். அனுப்புகிறேன். charu.nivedita.india@gmail.com

Paypal மூலம் அனுப்ப முடியாவிட்டால் Xoom.com மூலமும் அனுப்பலாம். பேபாலின் கிளை நிறுவனம்தான் அது. கூகிள்பே மூலம் அனுப்ப என் தொலைபேசி எண் வேண்டும் என்று நினைக்கிறேன்.  மின்னஞ்சல் செய்தால் தொலைபேசி எண் தருகிறேன்.  பொதுவில் போட இயலாது.  தொலைபேசி எண் இல்லாமலும் கூகுள்பே மூலம் அனுப்பலாம். அதற்குத் தேவையான என் UPI ID:

charu.nivedita.india@okaxis

இந்த ஒரு விபரம் இருந்தாலே கூகுள்பே மூலம் பணம் அனுப்பி விடலாம். தொலைபேசி எண்ணும் தேவையெனில் எழுதுங்கள்:

கட்டணம் செலுத்துவதற்கான வங்கிக் கணக்கு விவரம்:

UPI ID: charunivedita@axisbank

பெயர்: K. ARIVAZHAGAN

Axis Bank Account No. 911010057338057

Dr Radhakrishnan Road, Mylapore

IFSC No. UTIB0000006

பெயரில் உள்ள K என்பதன் விரிவு Krishnasamy.  என் தந்தையின் பெயர்.  ஆக்ஸிஸில் அனுப்ப முடியாவிட்டால் என் ஐசிஐசிஐ கணக்கு விபரம் கீழே:

K. ARIVAZHAGAN

ICICI a/c no.  602601 505045

MICR Code: 600229065

IFS Code ICIC0006604

T. NAGAR BRANCH chennai