marginal man – first copy

மார்ஜினல் மேன் நாளை இரவு வந்து விடும். நாளை மறுநாள் காலையில் முதல் பிரதி வேண்டுவோருக்குக் கொடுத்து விடலாம். முதல் பத்து பிரதிகளை அப்படிக் கொடுக்கலாம் என்று இருக்கிறேன். பலருக்கும் முதல் பிரதி, முதல் பத்து பிரதி என்பதற்கெல்லாம் அர்த்தம் புரியவில்லை. முதல் பிரதியில், மார்ஜினல் மேன் நாவலின் முதல் பிரதியாகிய இதை இன்னாருக்கு இன்ன தேதியில் கொடுக்கிறேன் என்று எழுதி நான் கையெழுத்துப் போட்டுக் கொடுக்கிறேன். ஐந்து ஆண்டுகள் கழித்து அதன் மதிப்பு என்ன? 25 … Read more

“சாரு புலம்புகிறார்” – 2

சாரு புலம்புகிறார் என்று எதற்கு சொல்லியிருப்பார்கள் என்று இப்போது புரிகிறது.  ஊட்டி திரைப்பட விழாவுக்குச் சென்ற போது அங்கே என்ன நடந்தது என்று எழுதியிருந்தேன்.  அதுதான் அவர்களுக்குப் புலம்பலாகத் தெரிந்திருக்கும்.  இம்மாதிரி புலம்பலை நான் தொடர்ந்து செய்து கொண்டுதான் இருப்பேன்.  ஏனென்றால், அங்கே என்னை அழைத்தவர்கள் நான் பேசும் போது மைக்கே தரவில்லை.  மேடைக்குப் பின் புறம் – கொல்லைப்புறத்தில் – பத்து பேருக்கு முன்னால் பேசச் சொன்னார்கள்.  மைக் இல்லாமல்.  ஆனால் மிஷ்கினுக்கு வேறு விதமான … Read more

“சாரு புலம்புகிறார்” – 1

தமிழர்கள் யாரும் இலக்கியம் படிப்பதில்லை.  அதனால் எனக்கு ஒன்றும் நஷ்டமில்லை.  ஆனால் இலக்கியம் அறியாததன் காரணமாக இவர்களில் முக்காலே மூணு வீசம் பேர் விலங்குகளைப் போல் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.  விலங்கு என்ன செய்கிறது?  இரை தேடுகிறது.  மலஜலம் கழிக்கிறது.  புணர்கிறது.  குட்டி போடுகிறது. நீண்ட நேரம் உறங்குகிறது.  மீண்டும் இரை தேடுகிறது.  இதையே தான் தமிழர்களில் பெரும்பாலோர் செய்து கொண்டிருக்கிறார்கள்.  ஆனால் மிருகங்கள் சந்தோஷமாக இருக்கின்றன.  ஏனென்றால், அவைகளுக்கு வேறு ஆசைகள் இல்லை.  வீடு கட்ட வேண்டியதில்லை.  … Read more

ரஜினி – கமல் – தினகரன் – டிரம்ப் : அராத்து

முகநூலில் அராத்துவின் பின்வரும் சிறிய கட்டுரையைப் பார்த்தேன்.  இதில் உள்ள எழுத்துப் பிழை, இலக்கணப் பிழை, சந்திப் பிழை, தேவையற்ற ஆங்கில வார்த்தைப் பிரயோகம் ஆகியவற்றைத் தவிர்த்து, இதில் உள்ள அத்தனை விஷயங்களையும் அப்படியே நானும் எழுதியதாகக் கொள்ளவும்.  இந்த ஆட்களைப் பற்றி நானும் இதே மாதிரிதான் நினைத்தேன்.  நேற்று நியூஸ் 7-இல் அழைத்த போதும் இதையேதான் சொன்னேன்.  வைரமுத்துவுக்கு ஞானபீடம் கொடுக்க இருப்பதாக ஜெ. எழுதியிருந்தார்.  கொடுத்தால் தற்கொலை செய்து கொள்ளலாம்; தைரியம் வராவிட்டால் தினகரன் … Read more

silence and a melody of tears…

எனக்குப் பிறந்த நாள் வாழ்த்து அனுப்பிய அத்தனை நண்பர்களுக்கும் இந்தப் பாடல்களை என் கண்ணீருடன் சேர்த்து அனுப்பி வைக்கிறேன்.  கண்ணீர் துயரத்தின் வெளிப்பாடு என்று யார் சொன்னது?  இதில் வரும் இரண்டாவது இணைப்பில் உள்ள மெலடி ஆஃப் டியர்ஸை ஒரு ஐந்து நிமிடம் கேட்டுப் பாருங்கள்.  உங்கள் கண்கள் கலங்கவில்லை என்றால் என்னிடம் சொல்லுங்கள். *** உங்களுக்கு ஏதேனும் கவலை இருந்தால்  அதையெல்லாம் ஒரு பக்கம் ஒதுக்கி வைத்து விட்டு கண்களை மூடியபடி காலை ஐந்து மணி … Read more

உரையாடல்

உரையாடலுக்காக வந்திருக்கும் சில கேள்விகள் என்னை மலைக்க வைக்கின்றன.  இரண்டு கேள்விகள் கீழே: தொடர்ச்சியான பயணங்கள் உங்கள் நாவல்களில் நிகழ்ந்த படியே இருக்கின்றன (ராசலீலா ,எக்ஸைல் ) அபுனைவான நிலவு தேயாத தேசம் வரை.போர் நிமித்தம் புலம் பெயர்ந்தவர்கள் போக ,உலகமயமாக்கலின் விளைவுகளால் நிலம் பெயர்பவர்கள் காணும் புதிய கலாச்சார வெளியை ஒரு பண்பாட்டுத் தொடர்ச்சியை ஒரு ஆசியனின் பார்வையில் துய்ப்பும் விலக்கமுமாக உங்கள் பாத்திரங்கள் அணுகுகின்றன . எனில் நிலப்பரப்பு உங்கள் புனைவுலகத்தில் உருவாக்கம் பெறும் … Read more