பிரளயம்

காலையில் நடைப்பயிற்சிக்குப் போகும்போது கூட தியாகராஜா நாவலுக்காக வேலை செய்துகொண்டேதான் இருக்கிறேன். தியாகராஜர் பற்றிய உரைகளைக் கேட்டபடியும், அவற்றிலிருந்து முக்கியமான தகவல்களைக் குறித்துக்கொண்டும்தான் போகிறது நடைப்பயிற்சி. இன்னும் இரண்டு வாரத்தில் முடித்து விடுவேன். கடைசிப் பகுதியை எழுதிக்கொண்டிருக்கிறேன். ஒவ்வொரு அத்தியாயத்தையும் பத்து முறையாவது திருத்தம் செய்கிறேன். பத்து முறை என்றால் பத்து விதமான அத்தியாயங்கள். அதில் சிறந்ததை எடுத்து நாவலில் சேர்க்கிறேன். இதற்கு இடையில் இந்தப் பிரளயத்தைக் கேளுங்கள்.