Charu Nivedita
நடிகர்களின் அரசியல் பிரவேசம் பற்றி…
சில மாதங்களுக்கு முன்பு திருப்பூரில் தந்தி டிவி நடத்திய மக்கள் மன்றம் என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன். முழுக்க முழுக்க ஒரு அரசியல் நிகழ்ச்சி. எடப்பாடி பழனிச்சாமி, ஓபிஎஸ் கோஷ்டிகள் பிரிந்து ஒரே வெப்பமாக இருந்த சூழல். என் பேச்சின் இடையே முன் வரிசையில் இருந்த பலர் சத்தம் போட்டு பேச்சை நிறுத்தி விட்டனர். இரண்டு நிமிடங்கள் கழித்தே பேச்சைத் தொடர முடிந்தது. நிகழ்ச்சி முடிந்தும் போலீஸ் பாதுகாப்புடன் தான் திரும்ப முடிந்தது. நாளை மாலை ஆறு … Read more
சட்டசபையில் கமல்ஹாசன்…
கமல் தேர்தலில் நின்றால் டெபாசிட் கூட கிடைக்காது என்று இங்கே எழுதியிருந்தேன். கமல் சரத்குமார் அல்ல என்பது நமக்குத் தெரியும். நான் எழுதியிருந்ததன் உள்ளர்த்தம், அவர் கட்சி ஆரம்பித்து தேர்தலில் நின்றால் அவர் கட்சிக்கு ஒன்று இரண்டு சீட் கிடைப்பது கூட நிச்சயம் இல்லை என்பதுதான். கமலுக்கும் டெபாசிட் கிடைக்காமல் போகலாம். ஆனால் அவர் திமுகவுடன் அதிமுகவுடன் கூட்டணி அமைத்தால் டெபாசிட் காப்பாற்றப்படும். ஆனால் வேறு எல்லா விஷயங்களும் கப்பல் ஏறி விடும். இரண்டு கட்சிகளும் வேண்டாம் … Read more
செடியில் குடும்பப் பேட்டி
என்னய்யா தீங்கு செய்தேன் உங்களுக்கு? தெரியாமல் செய்கிறீர்களா, தெரிந்தே அவமதிக்கிறீர்களா? அவந்திகா சொல்வதைப் பார்த்தால் இரண்டாவது விஷயத்துக்கு சாத்தியமில்லை என்று தோன்றுகிறது. விஷயம் இதுதான். செடி பத்திரிகையில் என் குடும்பப் புகைப்படமும் பேட்டியும் வந்துள்ளது. அவந்திகாவின் பேட்டி என்றே சொல்லலாம். ஒரு எழுத்தாளனின் மனைவியின் பேட்டி. படித்து விட்டு அவந்திகா, ”இதை எழுதிய பரிசல் கிருஷ்ணாவுக்கு நான் மிகுந்த நன்றிக் கடன் பட்டிருக்கிறேன். செடி பத்திரிகைக்கும் அதன் ஆசிரியருக்கும் மிகுந்த நன்றிக் கடன் பட்டிருக்கிறேன். இதுவரை என் … Read more
அறம் – 3
பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு எடை தூக்கும் பயிற்சிக்கும் பாக்சிங் பயிற்சிக்கும் போய்க் கொண்டிருந்தேன். பார்க்க பயில்வான் மாதிரி இருப்பேன். அப்போது ஒரு மாற்றத்துக்காக முடியை ஒட்ட வெட்டிக் கொண்டேன். அந்தக் காலகட்டத்தில் அவ்வப்போது சில்லம் அடிப்பதுண்டு. ஆனால் என்றைக்குமே அடிக்ட் ஆனதில்லை. கவனம். அதைத் தேடி பார்க் பக்கம் போவேன். அங்கே தான் அது கள்ளத்தனமாக விற்கப்படும். ஆனால் என்னைப் பார்த்ததும் எல்லோரும் ஓடி விடுவார்கள். இப்படியே போய்க் கொண்டிருந்ததால் என் நண்பர்கள் என்னை மட்டும் வெளியே … Read more
அறம் – 2
இதுவரை என் பிராமண நண்பர்கள் அத்தனை பேருமே கமலைத் திட்டிக் கொண்டிருந்த போதெல்லாம் – சுமார் 30 ஆண்டுகளாக – கமலுக்கு வக்காலத்து வாங்கிக் கொண்டிருந்த ஜென்மம் நான். இனி ஒருபோதும் கமல் மீது நட்பு பாராட்ட மாட்டேன். ஷங்கரை அவர் இரண்டு முறை எழுத்தாளர் என்று அழைத்தது அவலம். அவலம். அவலம். இரண்டாவது முறை அவர் எழுத்தாளர் ஷங்கர் என்று மட்டுமே சொன்னார். இயக்குனர் என்றே சொல்லவில்லை. இதைப் போன்ற வடிகட்டின அராஜகத்தை என் வாழ்நாளில் … Read more