ஆதார் இல்லாமல் இனி சாக முடியாது : மனுஷ்ய புத்திரன்

……………….. மனுஷ்ய புத்திரன் ……………….. ஆதார் எண் இல்லாவிட்டால் எனக்கு மரண சர்டிஃபிகேட் தர முடியாது என்று சொல்லிவிட்டார்கள் நான் சரியாக இன்று மாலை ஆறு மணிக்கு இறக்கவிருப்பதாக முடிவெடுத்து அனைவருக்கும் சொல்லி அனுப்பி விட்டேன் கடைசி நேரத்தில் வழிமறித்து ஒரு எண்ணைக்கேட்டு நிர்பந்திக்கிறார்கள் என்னிடம் இறப்பதற்கு போதுமான ஆதாரங்கள் இருக்கின்றன சாதிச்சான்றிதழ் இருக்கிறது மதச் சான்றிதழ் இருக்கிறது ரேஷன் கார்டு இருக்கிறதுi கல்விச் சான்றிதழ் இருக்கிறது எல்லாவற்றுக்கும் மேலாக பிறப்புச் சான்றிதழ் இருக்கிறது நான் பிறந்திருப்பதாலேயே … Read more

பிக் பாஸ் பதிவுகள்

முகநூலில் பிக் பாஸ் பற்றிய என் பதிவுகளைத் தொடர்ந்து எழுதி வருகிறேன்.  இன்று அராத்து பற்றி எழுதியதும் அதற்கு அராத்து பதிலும்: சாருநிவேதிதா :- அராத்து பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு நிச்சயம் அழைக்கப்படுவார். அதில் எனக்கு சந்தேகம் இல்லை. ஆனால் அவர் ஒரே வாரத்தில் நாமிநேட் செய்யப்படுவார். மக்களும் ஓட்டுப் போட மாட்டார்கள். ஏனென்றால், அவருக்கு நடிக்கத் தெரியாது. பிக் பாஸ் நிகழ்ச்சி ஒரு entertainment show. சினிமாவில் வசனத்தைக் கொடுத்து நடிக்க வைப்பார்கள். பிக் பாஸில் … Read more

இந்தியாவிலேயே ஆள் இல்லை…

சமயங்களில் இவரைப் பாராட்டி எழுதும் போது, எல்லோரும் சொல்வது போல் கொஞ்சம் உணர்ச்சிவசப்படுகிறோமோ என்று சம்சயம் கொள்வதுண்டு.  ஆனால் அவர் இன்று எழுதியுள்ள கட்டுரையைப் படித்த போது இப்படி எழுத இந்தியாவிலேயே ஆள் இல்லை என்று நினைத்தேன். நேற்று கோவையிலிருந்து ஸ்ரீதர் போன் செய்து அவர் என்ன வேறு இடத்துக்கு மாறி விட்டாரா, ஏன் அவர் கட்டுரையை ஒரு மாதமாகக் காணோம் என்று கேட்டார்.  பொதுவாக ஸ்ரீதர் எனக்கு போனே பண்ண மாட்டார்.  அவரே எனக்கு போன் … Read more

ஓவியா

பிக் பாஸ் பற்றி முகநூலில் இதுவரை 42 குறிப்புகள் எழுதி விட்டேன்.  பின்வருவது 42-ஆவது குறிப்பு.  இதற்கு காயத்ரி ஆர் அவர்களின் பின்னூட்டம், எப்படியிருந்த சாரு இப்படி ஆகிட்டீங்க!!!   ஓவியாவை நான் ஏன் கொண்டாடுகிறேன்? ஓவியா அழகி என்பதாலா? சே. மாதுரி தீட்சித் போன்ற ஒரு பேரழகியோடு 25 ஆண்டுகளாக வாழ்ந்து கொண்டிருக்கிறேன். எப்படி வாழ்ந்தேன் என்பதை மதுமிதா சொன்ன பாம்பு கதைகள் என்ற ஒரே ஒரு சிறுகதையைப் படித்தால் தெரிந்து கொள்வீர்கள். எனக்கு இந்த … Read more

ஒரு பெண்ணின் டயரி

முகநூலில் படித்த ஒரு பெண்ணின் டயரி.  எழுதியவர் லுலு தேவ ஜம்லா குளிக்காத கழுதைகள்* நேத்திக்கு ஆப்பீஸ் லிஃப்ட்டுக்குள்ள ஏறினா, கருமம் ஒரே நாத்தம்… அப்டியே குடலை புரட்டிகிட்டு வந்திச்சு… ஏன்னா லிப்டுக்குள்ள ஒரு குளிக்காத கும்பல் நின்னுகிட்டிருந்திச்சி… லிஃப்ட்டை விட்டு வெளிய வந்ததுக்கப்புறம் தான் மூச்சே விட்டேன்! அப்பதான் எனக்கு இத பத்தி எழுதினா என்னன்னு தோணிச்சி… இங்க பழங்குடியின மக்கள் பலரும் வீடுகள்ள குடியிருக்காம ஊரு ஊரா அலைஞ்சிகிட்டே இருப்பாங்க… நம்ம ஊர் நாடோடிகள் … Read more