கெட்ட பய, அராத்து! by அராத்து

கெட்ட பய, அராத்து ! சாருவின் மனைவி அவந்திகாவுக்கு என்னை பிடிக்காது என்று சாரு நேற்று எழுதி இருந்தார். ஆஹா இது ஒரு நல்ல மேட்டர் ஆச்சே , இதைப்பத்தி நாமும் ஒரு சின்ன கட்டுரை எழுதி விடலாம் என்று தோன்றியது. அவந்திகாவுக்கு மட்டும் அல்ல , என்னுடைய எந்த நண்பரின் மனைவிக்கும் என்னை பிடிக்காது. அதோடு விஷயம் முடிவதில்லை. என்னுடைய எந்த தோழியின் கணவருக்கும் என்னை பிடிக்காது. என்னுடன் பழகக்கூடாது என்று கடுமையாக எச்சரிப்பார்கள். இதற்கே … Read more

இரண்டு பரமாத்மாக்கள்

நேற்று நடந்த என் மகன் கார்த்திக்கின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி பற்றி ஒரு இதழில் விரிவாக எழுத இருப்பதால் இப்போது இங்கே எழுதவில்லை.  மற்றபடி நிகழ்ச்சிக்கு வந்திருந்த அனைவருக்கும் என் நன்றி.  உங்கள் அன்புக்கு பதிலாக என்னால் செய்யக் கூடியது இன்னும் அதிகமாகவும் இன்னும் சிறப்பாகவும் எழுதுவதுதான்.  அதைச் செய்வேன். இங்கே நேற்று நடந்த ஒரு வேடிக்கைச் சம்பவம் பற்றி.  டாக்டர் ஸ்ரீராம் எனக்கு செய்து வரும் உதவிகள் பற்றி, பணிகள் பற்றி நான் அவ்வப்போது எழுதி … Read more

பதினைந்து அபூர்வமான எழுத்தாளர்கள்!

மணியிடம் ஒரு விஷயத்தை ஆர்வத்துடன் சொல்லி முடிப்பேன்.  அவரும் படு சுவாரசியமாகக் கேட்பார்.  முடித்து விட்டு, எப்படி என்பேன்.  ஆஹா ஆஹா என்று ஆஹாகாரம் செய்து விட்டு, லேசாக, இந்த விஷயத்தை ஒன்பதாவது தடவையாகச் சொல்கிறாய் என்பார்.  அடப்பாவி, அதை முதலிலேயே சொல்வதற்கென்ன என்றால் உன் ஆர்வத்தைப் பார்த்தவுடன் சொல்லத் தோன்றவில்லை என்று பதில் வரும். அது போல் உங்களிடமும் இதை ஒன்பது முறை சொல்லியிருக்கலாம்.  இப்போது பத்தாவது தடவை.  ஆனால் படு ஆர்வமாகச் சொல்லத் தொடங்குகிறேன்.  … Read more

கடுமையான மழை பொழிந்து கொண்டிருக்கிறது…

நீங்கள் ஒரு பத்திரிகை ஆசிரியராக இருந்து பார்த்தால்தான் என் அருமை தெரியும். எல்லா கதை கட்டுரைகளும் போய்ச் சேர்வதற்கு முன்னால் முதல் ஆளாக அனுப்பி விடுவேன். ஆசிரியர்களுக்கு என்னால் எந்த டென்ஷனும் இருக்காது. நேற்று இரண்டு பத்திரிகைகளுக்குக் கட்டுரைகள் அனுப்ப வேண்டும். ஒன்று, உலக சினிமா. இன்னொன்று, ஃப்ரெஞ்ச் தத்துவம். இரண்டொரு நாட்களில் கார்த்திக்கின் திருமணம் இருப்பதால் சில நண்பர்களைத் தொலைபேசியில் அழைத்து விஷயத்தைச் சொல்ல வேண்டும். அதில் கொஞ்சம் பிஸியாக இருந்து விட்டேன். இதற்கே இன்னும் … Read more

எழுத்தாளனின் மரணம்

எழுத்தாளனின் மரணம் மனுஷ்ய புத்திரனின் புத்தம் புதிய கவிதை …………… சரியாக 25 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு அருவிகரையோரத்தில் வைத்து என்னிடம் கோட்பாட்டாளன் ஒருவன் நல்ல போதையில் நிதானமாக சொன்னான் ” ஆசிரியன் இறந்துவிட்டான்” நான் அப்போது மிகவும் இளைஞனாக இருந்தேன் அப்போதுதான் எழுதத்தொடங்கியிருந்தேன் ” எந்த ஆசிரியன்?” என்றேன் பயத்துடன் ” எல்லா ஆசிரியர்களும்தான்” என்றபோது எனது பயம் அதிகரித்துவிட்டது ” நானுமா?” என்று ஒரு பேய்வீட்டிற்குள் இருந்து கேட்பதுபோல கேட்டேன் ” சந்தேகமே இல்லாமல்” … Read more

அதிகம் கேட்ட பாடல்

நீங்கள் இதுவரை அதிகம் கேட்ட பாடல் எது? சுப்ரமணி, சென்னை எத்தனை முறை என்று கணக்கே பார்க்க முடியாது.  தினமுமே ஏழெட்டு முறை. அதை 365-ஆல் பெருக்கி, வரும் தொகையைப் பனிரண்டால் பெருக்கிக் கொள்ள வேண்டும்.  2005-இல் வெளியான ஆல்பம்.  சிறு வயதிலிருந்து கேட்டுக் கொண்டிருக்கும் பாடல்களை விட இந்தப் பாடலைத்தான் அதிக முறை கேட்டிருப்பேன்.  இந்தப் பாடலில் தெரியும் passion, madness-ஐ என் எழுத்தில் கொண்டு வந்து விட்டால் அது போதும். இதே ஆல்பத்தில் வரும் … Read more