எடிட்டிங்

தமிழின் சமகால இலக்கியத்தில் எந்தப் பிரதியுமே செப்பனிடப்படுவதில்லை.  எடிட் செய்யப்படுவதில்லை.  எடிட்டர் என்று ஒரு நபரே இங்கே இல்லை.  எல்லா நாவல்களும் எடிட் செய்யப் படாமலேயே வந்து கொண்டிருக்கின்றன.  மேலும், எடிட் செய்வதைத் தமிழ் எழுத்தாளர்களும் ஏதோ சென்ஸார் செய்வது போல் நினைப்பதால் அது ஒரு தொடப்படாத மர்மப் பிரதேசமாகவே இருக்கிறது.  ஆனால் இதில் எனக்கு உடன்பாடு இல்லை.  ஒவ்வொரு நாவலும் எடிட் செய்யப்பட வேண்டும் என்றே நான் நம்புகிறேன்.  ஒரு சில விதிவிலக்குகள் மட்டுமே இருக்கலாம்.  … Read more

தீபாவளி

இப்போது நான் கடுமையான வேலை நெருக்கடியில் இருக்கிறேன்.  எந்தக் காரணத்தைக் கொண்டும் இப்படியெல்லாம் குறிப்புகள் எழுதவே கூடாது.  அத்தனை வேலை குவிந்து கிடக்கிறது.  இருந்தாலும் இந்த விஷயம் மனதை நெருடிக் கொண்டிருந்ததால் எழுதத் துணிந்தேன். தீபாவளிக் கொண்டாட்டம் எனக்குப் பிடிக்காது.  காரணம், மற்ற ஜீவராசிகள் வெடிச் சத்தத்தால் படும் தாங்கொணாத் துன்பம்.  நேற்று மாலையிலிருந்தே காகங்கள் பதற்றத்திலும் பீதியிலும் கதறிக் கொண்டிருக்கின்றன.  வீட்டைச் சுற்றியிருக்கும் நானாவிதமான மரங்களிலும் நூற்றுக் கணக்கான காகங்கள் குடியிருக்கின்றன.  அவற்றின் இடைவிடாத பயக் … Read more

பின் லாடனிலிருந்து கிறிஸ்து வரை…

தலைப்பை இன்னும் லயத்துடன், தீவிரவாதியிலிருந்து தீர்க்கதரிசி வரை என்றும் மாற்றி வாசிக்கலாம்.  என்ன விஷயம்?  Tag centre சம்பவம் பற்றி மனுஷ்ய புத்திரன் முகநூலில் இப்படி எழுதியிருக்கிறார்: ”சாருவின் நூற்றுக்கும் மேற்பட்ட வாசகர்கள் நேற்று டாக் செண்டரில் தடுத்து நிறுத்தப்பட்டது குறித்த பதிவைப் படித்தேன். குறிப்பிட்ட நபர்களுக்கே டிபன் காஃபி ஏற்பாடு செய்யபட்டிருந்ததால் அழைப்பிதழில் இல்லாதவர்கள் தடுக்கப்பட்டார்கள் என்று சாருவின் பதிவின் மூலம் அறிகிறேன். உயிர்மையின் சார்பில் நூற்றுக்கணக்கான கூட்டங்கள் நடத்தியிருக்கிறோம். சில நேரங்களில் சிற்றுண்டி ஏற்பாடு … Read more

Tag Centre நிகழ்ச்சி

நேற்றைய தினம் Tag centre-இல் நடந்த ராஸ லீலா விமர்சனக் கூட்டம் மிகச் சிறப்பாக நடந்ததாகவே நினைத்தேன்.  ஆனால் அரங்கத்துக்கு வெளியே ஒரு அசிங்கமான சம்பவம் நடந்திருக்கிறது.  அதாவது, சுமார் ஐம்பது வாசகர்கள் – அவர்கள் அனைவரும் வாசக வட்ட நண்பர்கள் – என்னுடைய நட்பு வட்டத்தில் இருப்பவர்கள் – மிக மோசமான முறையில் நடத்தப்பட்டுத் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.  நீங்களெல்லாம் யார், உங்களையெல்லாம் யார் அழைத்தது, இன்விடேஷன் இல்லாமல் உங்களையெல்லாம் யார் வரச் சொன்னது என்பது போன்ற … Read more

ராஸ லீலா

நேற்று மாலை நடந்த ராஸ லீலா கூட்டத்தைப் பதிவு செய்து நேற்று இரவே பதிவேற்றம் செய்துள்ள நண்பர் ஷ்ருதி டிவி கபிலனுக்கு என் மனமார்ந்த நன்றி. சாரு உரை மற்றும் கேள்வி பதில்:   அழகியசிங்கரின் விமர்சன உரை:

சென்னையில் நல்ல உணவு ஏன் இல்லை?

பிரபாகரன் உணவக உரிமையாளர் முத்துராமலிங்கம் அந்திமழை கட்டுரைக்கு நன்றி தெரிவித்துள்ளார். “நல்ல சோறு என்று பாராட்டிய சாரு ஐயாவுக்கு நன்றி. ஆனா வடபழனியை கே.கே. நகர்ன்னு ஏரியா மாத்திப்போட்டுட்டீங்களே சார்….” https://www.facebook.com/muthu.ramalingam.7/posts/1113622118707349 *** என். சொக்கனும் அந்திமழை கட்டுரையைப் பாராட்டியிருக்கிறார்.   இருவருக்கும் நன்றி.  வடபழனியை கே.கே. நகர் என்று எழுதியது தவறுதான்.  டிஸ்கவரி புக் பேலஸுக்கு வரும் போதெல்லாம் பிரபாகரன் மெஸ்ஸுக்குப் போவதால் அதையும் கே.கே. நகர் என்று நினைத்து விட்டேன்.  கீழே என். சொக்கன் குறிப்பு: … Read more