ஜனவரி 9 வெளியீட்டு விழா குறித்து…

ஜனவரி 9-ஆம் தேதி ஒரு பெரிய அரங்கத்தில் இடம் கிடைத்திருக்கிறது.  பழுப்பு நிறப் பக்கங்கள் முதல் தொகுதியின் வெளியீட்டு விழாவை அங்கே வைக்கலாமா?  அது சனிக்கிழமை என்பதால் பலரும் வந்து கலந்து கொள்வது சுலபம்.  பழுப்பு நிறப் பக்கங்கள் தொகுதி – 1 க.நா.சு.வோடு முடிவடைகிறது.  ஆதவன், தி.ஜா., வண்ணநிலவன் போன்றோர் இரண்டாம் பாகத்தில்.  தனிப்பட்ட முறையில் இப்படி பிரம்மாண்டமான முறையில் வெளியீட்டு விழா நடத்துவதில் எனக்கு விருப்பம் இல்லை.  இன்னும் இரண்டு வாரத்தில் அரங்கத்துக்கு 45 … Read more

அதிகாலையில் ஓர் நேர்காணல்…

பின்வரும் நேர்காணல் சூர்ய கதிர் பத்திரிகையில் வெளிவந்தது.  இந்த நேர்காணல் பற்றி ஓரிரு வார்த்தைகள் சொல்ல வேண்டும்.  யாராவது ஒருவர், “நான் 1953-இல் பிறக்கிறேன்.  பிறகு அவசரகால கட்டத்தில் தலைமறைவாகிறேன்…” என்று கடந்த காலத்தை நிகழ்கால இலக்கணத்தில் பேசினால் அவர் ஒரு பிரமுகர் (வி.ஐ.பி.) என்று அறிந்து கொள்ளுங்கள்.  எனக்குத் தெரிந்து அப்படி கடந்த காலத்தை நிகழ்காலத்தில் பேசிய ஒரே இலக்கியவாதி தமிழவன் என்று நினைக்கிறேன்.  25 ஆண்டுகளுக்கு முன்பு அப்படி ஒரு நேர்காணல் படித்தேன்.  மற்றபடி … Read more

நாணயத்தின் இன்னொரு பக்கம்… (2)

நாணயத்தின் இன்னொரு பக்கம் என்ற நேற்றைய கட்டுரையில் ஒரு பகுதியைத் திட்டி என் அருமை வாசகி வெரோனிகா ஃப்ரான்ஸிலிருந்து கடிதம் எழுதியிருக்கிறார்.  அந்தக் கட்டுரையில் ஆட்சேபணைக்குரிய பகுதியாக வெரோனிகாவுக்குத் தோன்றியிருப்பது இதுதான்: ”கவிதையை நீங்கள் எவ்வாறு காண்கிறீர்கள்?”  இந்தக் கேள்வியை உலகின் முக்கியமான எழுத்தாளர்களிடமும் கவிகளிடமும் கேட்டு அதை ஒரு ஆந்தாலஜியாகத் தொகுக்கிறார் ஒரு பேராசிரியர்.  அவர் ஒரு கவி.  வந்த பதில்களிலேயே உங்கள் பதில் தான் மிகவும் சுவாரசியமானது; ஆழமானது என்று அவர் பதில் போட்டார்.  … Read more

நாணயத்தின் இன்னொரு பக்கம்…

க.நா.சு.வைப் படிக்கும் போதுதான் புரிகிறது, ஒரு ஆள் ஐம்பது அறுபது ஆண்டுகளுக்கு முன்பே என்னைப் போல் புலம்பியிருக்கிறார் என்று.  அச்சு அசலாக அதே புலம்பல்.  ஒரு வார்த்தை மாறவில்லை.  என்ன புலம்பல்?  காசு இல்லை; பயணம் செய்ய முடியவில்லை; எழுத்தாளனுக்கு உரிய அங்கீகாரம் இல்லை; தொலைக்காட்சி நிகழ்ச்சிக்காக நாள் பூராவும் நேரம் செலவு செய்தாலும் ஒரு பைசா கொடுப்பதில்லை; எட்செட்ரா, எட்செட்ரா.  இது நாணயத்தின் ஒரு பக்கம்தான்.  இன்னொரு பக்கம் சொர்க்கம்.   அந்தப் பக்கத்தைப் பார்த்தால் என்னைப் … Read more

தமிழை யார் எடுத்துச் செல்வது?

தி இந்துவில் வெளிவந்த கட்டுரையின் இணைப்பு: http://tamil.thehindu.com/general/literature/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%88-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81/article7694595.ece

க.நா.சு. the great! – பகுதி 3

பழுப்பு நிறப் பக்கங்களில் க.நா.சு. பற்றிய கட்டுரையின் மூன்றாம் பகுதி.  இந்தப் பகுதியில் உள்ள க.நா.சு. மேற்கோள்கள் 50, 60 ஆண்டுகளுக்கு முன்பு எழுதியவை.  ஆனால் நான் எழுதியது போலவே இருக்கிறது என்று நண்பர் ஒருவர் சொன்னார்.  படித்த போது எனக்குமே அப்படித்தான் தோன்றியது. http://www.dinamani.com/junction/pazhuppu-nira-pakkangal/2015/09/27/%E0%AE%95.%E0%AE%A8%E0%AE%BE.%E0%AE%9A%E0%AF%81.-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF—3/article3048827.ece