பொலிக! பொலிக!

நாலைந்து தினங்களுக்கு முன்பாகவே எழுத வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். நேரம் இல்லை. தினமலரில் பொலிக பொலிக என்ற தலைப்பில் ஸ்ரீராமானுஜரின் வாழ்க்கை வரலாற்றை அற்புதமாக எழுதிக் கொண்டிருக்கிறார் பா. ராகவன். அவர் கல்கியில் பணி புரிந்து கொண்டிருந்த காலத்திலிருந்து என் நண்பர். 25 ஆண்டுகள் இருக்கும். அந்தத் தொடரில் அவரது மொழி நடை பிரமாதமாக இருக்கிறது. (பொதுவாக அவருடைய நடை எனக்கு அந்நியமாக இருக்கும்.) மேலும் மிக நீண்ட கால ஆய்வுகளைச் செய்திருந்தால்தான் இத்தனைத் துல்லியமான … Read more

பேசாமொழி பதிப்பகம்

என்னுடைய புத்தகங்களில் மிக முக்கியமாகக் கருதுவது கலகம், காதல், இசை. இதை நான் மலையாளத்தின் பிரபலமான பத்திரிகையான மாத்ருபூமியில் பல ஆண்டுகளுக்கு முன் எழுதினேன். இதை எழுதும் போது என்னிடம் கணினி வசதியெல்லாம் கிடையாது. எப்படி எப்படியெல்லாமோ குறுந்தகடுகளைச் சேகரித்து லத்தீன் அமெரிக்க இசை கேட்டேன். மேலும், கனவுகளின் நடனம் என்பது சினிமா பற்றிய என் கட்டுரைகளின் தொகுப்பு. அதேபோல் சினிமா சினிமா. இந்த மூன்று புத்தகங்களையும் பேசாமொழி பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது. வாங்கிப் படியுங்கள். புத்தக விழா … Read more

ஜல்லிக்கட்டு – கார்ல் மார்க்ஸ்

கீழே வருவது கார்ல் மார்க்ஸ்: பொங்கல் பண்டிகை நெருங்குவதை ஒட்டி ஜல்லிக்கட்டு குறித்த விவாதம் மீண்டும் பொதுவெளிக்கு வந்திருக்கிறது. இந்த விவகாரத்தில் செயல்படுகிற முக்கியத் தரப்புகள் உண்டு. ஒன்று, பண்பாட்டு ரீதியாக இது தமிழகர்களின் கொண்டாட்டம். அதைத் தடை செய்வது என்பது ‘இனக்குழுக்களின் கலாச்சாரத்தில் குறுக்கிடுகிற வன்முறை; இதை அனுமதிக்க முடியாது’ எனும் ஜல்லிக்கட்டு ஆதரவு கிராமிய அடிப்படை சுபாவத்தின் குரல். இரண்டாவது, ஜல்லிக்கட்டைத் தமிழ்ப் பாரம்பரியமாகப் பேசுவதற்கு ஒன்றுமில்லை; ஏனெனில் தமிழ்ப் பாரம்பரியம் என்று சொன்னாலே … Read more