நிறுத்த வேண்டாம்…

வணக்கம் சாரு,
உங்களின் வலைத்தளத்தில், ஒளரங்ஸேப் தொடரை நிறுத்திவிடலாமா என்று யோசித்ததாகவும்  மற்றும் சிலர் அதை திராபை என்று சொன்னார்கள் என்றும் எழுதியிருந்தீர்கள். மிகவும் வருத்தமாக இருந்தது. முன்பு ஒரு முறை உங்களிடம் , இந்த தொடர் புத்தகமாக வெளிவந்ததும் படிக்கிறேன் என்று சொன்னேன். ஆனால், 73 அத்தியாயங்கள் படித்த்து முடித்துவிட்டேன். தொடரந்து படிக்க நேரம் இல்லை இப்பொழுது.பிறகு நிச்சயமாக வாசிப்பேன்.புத்தகத்தையும் வாங்க படிப்பேன். எனக்கு வரலாறு படிப்பதில் ஆர்வம் அதிகம். 
இந்த தொடருக்காக நீங்கள் போடும் உழைப்பு , நீங்கள் சொல்லும் முன்பே எனக்கு நன்றாகவே புரிந்தது. அத்தனை புத்தகங்களைப் படித்து, அதன் சாரத்தை எடுத்து , தொடருக்கு  ஏதுவாக மாற்றி எழுதுவது மிக  பெரிய விஷயம். தொடரைப் படிப்பதற்கு ஒரு வாசகர் கொஞ்சம் உழைப்பு போட வேண்டும். அதை வாசகர்கள் உணர வேண்டும். நீங்கள் எழுதியிருக்கும், எழுதபொகும், எல்லா புத்தகமும் வரலாற்றில் நிச்சயமாக பங்கு வகிக்கும். எனக்கு அதில் நம்பிக்கை உள்ளது.

ஒளரங்ஸேப் நூறாவது விழாவிற்கு வர முடியவில்லை என்னால். சிவில் சர்வீஸ் பரிட்சைகாக படித்து கொண்டிருந்தேன். ஆசையாகத்தான் இருந்தது ஆனால் என்ன செய்ய…

தொடர்ந்து எழுதுங்கள்.
நன்றி.
அப்துல் ரஹ்மான், புதுவை.
பி.கு.  அ-காலம் முழுவதையும் படித்துவிட்டேன். ஒரு தோழிக்கு அதைக் கொடுத்தேன்…அவள் அத்தொடரை படித்து கொண்டிருக்கிறாள்.