வரம் கேள் என்றால்
யாராவது கையில் இருப்பதையே
திரும்பவும் கேட்பார்களா?
இருப்பதை இல்லாததாய்க்
காண்பவனே கவி
அதுவும் தவிர
நீ
குரலாக ஒலிக்கிறாய்
நினைவாக இருக்கிறாய்
தூலமாக இல்லையே
தியாகராஜன் தன் கடவுளைத்
தூலமாகக் காணவே
உஞ்சவிருத்தி செய்து
உருகியுருகிப் பாடினான்
என்பதை
உனக்குநான்
நினைவூட்ட வேண்டுமா?
க்ஷீரசாகர சாமி மோகினியாய்
மாறி அமிர்தத்தை
தேவருக்கு
ஊட்டியதாய்க் கதை
நீயெனக்கு அமிர்தம்
தருவது எப்போது?