Pithy thoughts – 1

என் எழுத்தைப் படித்தால் என்னை வெறுக்கவே தோன்றும். என்னை அனுபவிப்பவர்களால் மட்டுமே என்னைப் புரிந்து கொள்ள முடியும்.

நான் உங்களிடம் ஒரு குழந்தை தன் அன்னையிடம் பேசுவது போலவே பேசுகிறேன். அதனாலேதான் என் எழுத்தில் எந்தத் தணிக்கையும் இல்லை. அதனாலேதான் என்னால் சக ஜீவராசிகளுக்கு அன்னையாகவும் இருக்க முடிகிறது. அதனாலேதான் எந்தக் கூச்சமுமின்றி என் குழந்தைகளுக்கு உணவு அனுப்புங்கள் என்று கேட்கவும் முடிகிறது.

***