Pithy thoughts – 2

அகங்காரமே என் சிருஷ்டியாக வெளிப்படுகிறது. அதற்கான அவியே அடக்கமும் மதுரமும்.

***

நிச்சலனமாக இருக்கிறது ஏரி

சரேலென இறங்கியவொரு

தனித்த பறவை

மீனொன்றைக்

கவ்விச்செல்கிறது

படபடக்கிறது மனம்