இலக்கியத்தில் நல்லவர்கள்

”உங்கள் வருத்தம் எனக்குப் புரிகிறது. ஆனால் தமிழவன் அப்படி யாருக்கு எதிராவும் அரசியல் பண்ணக் கூடியவர் அல்லதானே? அவர் ஒரு பாவம், நேர்மையானவர் என்பதே என் நம்பிக்கை. அவர் என் நண்பர், என் சொந்த ஊர்க்காரர் என்பதால் மட்டும் நான் இதைச் சொல்லவில்லை, நிஜமாகவே கவனித்ததை வைத்தே சொல்கிறேன். ஒருமுறை கூட சக எழுத்தாளர்களை உரையாடலின் போது அவர் தூஷணை செய்து நான் பார்த்ததில்லை. வெளிப்படையான மனிதர். அதனாலே நல்லவர். அத்தகையோர் தமிழில் அரிது. நான் பார்த்துள்ள 99% எழுத்தாளர்களும் ஐந்து நிமிடப் பேச்சில் ஐம்பது எழுத்தாளர்களையாவது வதம் பண்ணுவார்கள். தமிழவன் மட்டுமே விதிவிலக்கு. (அடுத்து, சு.ரா., நீங்கள், எஸ்.ரா.வும் தூஷிக்க மாட்டீர்கள்.)”

அபிலாஷ் எனக்கு எழுதிய கடிதம்.  இன்றைய தினம் ஏற்கனவே சொல்லப்பட்ட மனிதர்கள் எனக்குத் தெரிந்து ஐந்து நண்பர்கள் ஆர்டர் பண்ணியிருக்கிறார்கள்.  இதைக் கூட தமிழவன் எனக்குப் பண்ணினதில்லை.  நான் அவரை விமர்சித்தால் என் நண்பர்கள் ஐந்து பேர் அவர் நூலை வாங்கியிருக்கிறார்கள்.  என் வருத்தமெல்லாம் எனக்கு ஜார்ஜ் பத்தாயை சொல்லிக் கொடுத்தவர் நான் ஜார்ஜ் பத்தாயை மீறும் போது என்னை அங்கீகரிக்க வேண்டாமா என்பதுதான்.  அவருக்கு என்னென்ன அதிகாரங்கள் இருந்தன என்று அபிலாஷுக்கு நான் சொல்ல வேண்டுமா?  தமிழவன் க்றைஸ்ட் கல்லூரியில் எத்தனை ஆண்டுகள் தமிழ்த் துறைப் பேராசிரியராக இருந்தார்?  துறைத் தலைவரும் அவர்தானா?  அவரால் என்னை அழைத்து மாணவர்களிடையே ஒரே ஒரு முறை பேச வைத்திருக்க முடியாதா?  அதற்காக நான் அபிலாஷ் என்ற நண்பர் க்றைஸ்ட் கல்லூரிக்குப் பேராசிரியராக வரும் வரை – என் 67 வயது வரை காத்திருக்க வேண்டியிருந்தது.  இத்தனைக்கும் அபிலாஷ் ஆங்கிலத் துறை.  இத்தனைக்கும் நான் அபிலாஷின் நாவலையும் விமர்சித்துத்தான் இருந்தேன். 

நல்லவர்களால் நாட்டுக்கும் பயனில்லை, இலக்கியத்துக்கும் பயனில்லை அபிலாஷ்.  தஸ்தயேவ்ஸ்கியின் An indecent incident என்ற சிறுகதையைப் படித்துப் பாருங்கள்.  A Nasty Story என்ற தலைப்பிலும் இருக்கும்.  அதன் நாயகன் நம் தமிழவன்தான்.  அதில் வரும் குமாஸ்தாதான் நான். 

உண்மைதான்.  தமிழவன் யாரைப் பற்றியும் தீங்கு பேசியதில்லை.  அப்பழுக்கு இல்லாத மனிதர்.  உத்தமர்.  சந்தேகமே இல்லை.  ஆனால் ஜெயமோகனும் நானும் எப்படி என்று உங்களுக்குத் தெரியும்.  அவர் சிங்கப்பூர் பல்கலைக்கழகத்தில் விஸிட்டிங் பேராசிரியராக ஆறு மாத காலம் பணியாற்றி முடித்ததும், அடுத்து யார் என்று அவரது பரிந்துரையைக் கேட்ட போது என் பெயரைச் சொல்லி விட்டு வந்திருக்கிறார்.  என்னால் அவருக்குக் கால் காசு பிரயோஜனம் உண்டா?  நாளையும் நான் அவரை விமர்சிக்கத்தான் போகிறேன்.  அதுவும் அவருக்குத் தெரியும்.  என் எழுத்து வாழ்வில் கிடைத்த ஒரே விருது, கண்ணதாசன் விருது.  ஒரு லட்சம் ரூபாய்.  கோவை.  யார் பரிந்துரை செய்தது என்று கேட்ட போது ஜெயமோகன் பெயர் வந்து விழுந்தது. 

எனக்கு ஜார்ஜ் பத்தாய் சொல்லிக் கொடுத்தவர் நாற்பது ஆண்டுகளாக என் பெயரைக் கூட உச்சரிக்கவில்லை.  ஆனால் நல்லவர்.  அராத்துவிடம் கேட்டுப் பாருங்கள்.  நல்லவர்களைப் பற்றி நான் என்ன திட்டு திட்டுவேன் என்று. 

***

முடிந்தவர்கள் சந்தா/நன்கொடை அனுப்புங்கள்.

அதற்கான விவரங்கள்:

PayPal மூலம் பணம் அனுப்ப என் மின்னஞ்சல் முகவரி மட்டும் போதும். charu.nivedita.india@gmail.com

Xoom.com மூலம் பணம் அனுப்ப என் முகவரி தேவை எனில் எனக்கு எழுதுங்கள். அனுப்புகிறேன். charu.nivedita.india@gmail.com

Paypal மூலம் அனுப்ப முடியாவிட்டால் Xoom.com மூலமும் அனுப்பலாம். பேபாலின் கிளை நிறுவனம்தான் அது. கூகிள்பே மூலம் அனுப்ப என் தொலைபேசி எண் வேண்டும் என்று நினைக்கிறேன்.  மின்னஞ்சல் செய்தால் தொலைபேசி எண் தருகிறேன்.  பொதுவில் போட இயலாது.  தொலைபேசி எண் இல்லாமலும் கூகுள்பே மூலம் அனுப்பலாம். அதற்குத் தேவையான என் UPI ID:

charu.nivedita.india@okaxis

இந்த ஒரு விபரம் இருந்தாலே கூகுள்பே மூலம் பணம் அனுப்பி விடலாம். தொலைபேசி எண்ணும் தேவையெனில் எழுதுங்கள்:

கட்டணம் செலுத்துவதற்கான வங்கிக் கணக்கு விவரம்:

UPI ID: charunivedita@axisbank

பெயர்: K. ARIVAZHAGAN

Axis Bank Account No. 911010057338057

Dr Radhakrishnan Road, Mylapore

IFSC No. UTIB0000006

பெயரில் உள்ள K என்பதன் விரிவு Krishnasamy.  என் தந்தையின் பெயர்.  ஆக்ஸிஸில் அனுப்ப முடியாவிட்டால் என் ஐசிஐசிஐ கணக்கு விபரம் கீழே:

K. ARIVAZHAGAN

ICICI a/c no.  602601 505045

MICR Code: 600229065

IFS Code ICIC0006604

T. NAGAR BRANCH Chennai