ராஜபாளையம் சந்திப்பு: வரும் ஞாயிற்றுக்கிழமை

சுதந்திரச் சிந்தனை அமைப்பின் சார்பில் வரும் ஞாயிற்றுக்கிழமை காலை பத்து மணி முதல் மதியம் ஒரு மணி வரை என்னுடைய உரையும் கலந்துரையாடலும் ராஜபாளையம் ஆனந்தா ஓட்டல் மாடியில் நடக்க உள்ளது. பாம்பே சில்க்ஸ் எதிரில். இது சுதந்திரச் சிந்தனையின் நாற்பத்தாறாவது நிகழ்வு. ராஜபாளையம் மற்றும் சுற்று வட்டாரத்தில் உள்ள நண்பர்கள் நிகழ்ச்சிக்கு வர முயற்சி செய்யுங்கள். தொடர்புக்கு கந்தசாமி பாண்டியன் 96292 22201.

நிகழ்ச்சிக்கு நானும் ஸ்ரீவில்லிபுத்தூர் ராகவனும் வினித்தும் வருகிறோம். சனிக்கிழமை காலை ஸ்ரீவில்லிபுத்தூர் கதிரவன் ஓட்டலில் இட்லி சாப்பிடலாம் என்று திட்டமிட்டிருக்கிறேன்.