அருணாசலத்துக்கு வாழ்த்து

அருணாசலம் பற்றி எழுதியிருக்கிறேன். அவரைப் போன்ற ஒரு அபூர்வமான மனிதரை நான் கண்டதில்லை. அவர் கோபப்பட்டு நானோ நண்பர்களோ பார்த்ததில்லை. அதிர்ந்து கூடப் பேச மாட்டார். புகைப்பழக்கம் கிடையாது. மதுவைத் தொட்டதே இல்லை. எந்தப் பெண்ணையும் ஏறிட்டும் பார்க்க மாட்டார். எல்லாவற்றையும் விடக் கொடுமை என்னவென்றால், தூய சைவம். மதுரையில் எப்படி இப்படி ஒரு அதிசயம் நிகழ முடியும் என்றே எனக்குப் புரியவில்லை. தஞ்சாவூர் என்றால் கூடப் புரிந்து கொள்ள முடியும். மதுரையிலா? ஆனால் நேரில் பார்ப்பதற்கு மேற்கண்ட எல்லா பழக்கங்களும் உள்ள ஆசாமி போல் தெரிவார். கொடுப்பினைதான்.

என் வாசகர் வட்டத்தின் தூண்களில் ஒருவர் அருணாசலம். அவருக்கு இன்று பிறந்த நாள். கடவுள் நம்பிக்கை இல்லாத அவருக்குப் பூரணமான ஆயுளும் குறைவற்ற செல்வமும் நிறைந்த ஆரோக்கியமும் கிடைக்க எம்பெருமானை வேண்டிப் பிரார்த்தித்துக் கொள்கிறேன்.