ஜெயமோகன், மனுஷ்ய புத்திரன் மற்றும் அடியேன்…

முதல் முறையாக ஜெயமோகனும் நானும் ஒரே மேடையில் பேசப் போகிறோம்.  நாளை மாலை ஆறு மணிக்கு தி. நகர் சர் பிட்டி தியாகராயா ஹாலில்.  அராத்துவின் ஆறு புத்தக வெளியீட்டு விழாவில்.  வழக்கமான மணிக்கணக்கான மேடைப்பேச்சுகளுக்குப் பதிலாக ஜெயமோகனை நான் பத்து இருபது கேள்விகள் கேட்பேன்.  (Hot Seat!) இதுவரை கேட்கப்படாத கேள்விகள்.  அவரும் என்னை பத்து இருபது கேள்விகள் கேட்பார்.  அதற்காக “உங்களுக்குப் பிடித்த கலர் என்ன?” என்பது போன்ற கேள்விகளாக இராது.  மனுஷ்ய புத்திரனும் இந்தக் கேள்வி பதில் செஷனில் இருப்பார்.

தவறாமல் வாருங்கள்.  நிகழ்வு ஒன்பதுக்கு முடிந்து விடும்.  எனக்கு ஒன்பதரை மணிக்கு வேறொரு முக்கியமான இடத்துக்குப் போக வேண்டும்.  எனவே புத்தகங்களில் நாளை கையெழுத்து இட நேரம் இருக்காது.  மன்னிக்கவும்.