மௌனமும் பேச்சும்…

நேற்று இரவு ஒன்பதரைக்கே உறங்கச் சென்று விட்டேன்.  அத்தனை அசதி.  நாள் பூராவும் செய்த ஒரே வேலை, படிப்பு.  ஒரு இடத்தில் அமர்ந்து படித்துக் கொண்டே இருந்தால் – பத்து மணி நேரம் – உடம்பெல்லாம் அடித்துப் போட்டது போல் வலிக்கிறது.  உங்களுக்கு இதில் சந்தேகம் இருந்தால் காலை பத்து மணியிலிருந்து இரவு ஒன்பது மணி வரை இருந்த இடத்திலேயே இருந்து, அங்கே இங்கே நகராமல், அசையாமல் படித்துக் கொண்டே இருந்து பாருங்கள்.  இடையில் போன் எதுவும் பேசக் கூடாது.  போன் வந்தாலும் எடுக்கக் கூடாது.  மொபைலைத் தொடவே கூடாது.  முகநூலை எட்டியும் பார்க்கக் கூடாது.  இடையில் என் ஸ்கூல் நண்பன் போன் பண்ணினான்.  எடுத்துப் பேசவில்லை.  ஏனென்றால், லெபனான் செல்வதற்கு முன் அங்கே நான் சந்திக்க இருக்கும் சில எழுத்தாளர்களின் படைப்புகளைப் படித்துக் கொண்டிருக்கிறேன்.  ஸ்கூல் நண்பனோடு இன்னொரு நாள் பேசிக் கொள்ளலாம்.  என் நண்பரின் சிறுகதைத் தொகுதியை அது அச்சுக்குப் போவதற்கு முன் படிக்க வேண்டும்.  அதைக் கூட தொடவில்லை.  ஒரு எழுத்தாளரைச் சந்திக்கும் போது அவரது எழுத்தை நாம் பரிச்சயப்படுத்திக் கொள்ள வேண்டும்.  நேரில் சந்திக்கும் போது ஹி ஹி ஒங்க எழுத்தெ நான் படிச்சதில்ல என்று அசடு வழியக் கூடாது.  படிக்காவிட்டால் சந்திக்கக் கூடாது.  அதனால்தான் தீவிரமாகப் படித்துக் கொண்டிருக்கிறேன். 

சிரியாவில் பிறந்து இப்போது பெய்ரூட்டில் வாழும் காதா சம்மானை (Ghada Samman) சந்திக்கலாம் என்று நினைத்து அவருக்கு மின்னஞ்சல் எழுதினேன்.  பதிலே இல்லை.  பெய்ரூட்டில் வசிக்கும் நஜ்வா பரக்கத்திடம் காதா பற்றி விசாரித்து எழுதினேன்.  காதா சம்மானின் பெய்ரூட் கொடுங்கனவுகள் (Beirut Nightmares) ஒரு அற்புதமான நாவல்.  அதன் ஒரு பகுதியை ”ஊரின் மிக அழகான பெண்” தொகுப்பில் மொழிபெயர்த்திருக்கிறேன்.   ஆனால் காதா சம்மானோடு தனக்கு எதுவும் தொடர்பு இல்லை என்று மெஸேஜ் அனுப்பினார் நஜ்வா.  இருந்தாலும் எனக்காகக் கேட்டுப் பார்க்கிறேன் என்றார். 

வெளிநாட்டு எழுத்தாளர்கள் பலரும் இப்படித்தான் இருக்கிறார்கள்.  ஒருவருக்கொருவர் தொடர்பே இல்லை.  இத்தனைக்கும் தமிழ்நாட்டின் மூன்று மாவட்டத்தைச் சேர்த்தால் அதுதான் லெபனான். ஒருமுறை தில்லியில் ஒருசில ஐரோப்பியக் கவிஞகளுடன் மூன்று நாள் தங்கியிருந்தேன்.  அதில் மிகவும் சுவாரசியமாக இருந்த ஒருவர்  Tomaž Šalamun.  ஸ்லோவேனியாவைச் சேர்ந்த கவிஞர்.  ஸ்லோவேனியாவின் தலைநகர்  Ljubljana.  ஸ்பெல்லிங் பயங்கரமாக இருக்கும்.  உச்சரிப்பு எளிது.  லூப்லியானா.  லூப்லியானாவிலிருந்து பக்கத்து நாடான செர்பியாவின் தலைநகர் பெல்க்ரேட் 530 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது.  சென்னையிலிருந்து கோயம்பத்தூர் தூரம்.  இரண்டொரு நாளிலேயே தொமாஸ் எனக்கு நெருங்கிய நண்பராகி விட்டார்.  அவரிடம் எனக்குப் பிடித்த – தமிழ்நாட்டில் மிகப் பிரபலமாக விளங்கும் செர்பிய எழுத்தாளர் மிலோராத் பாவிச் பற்றி விசாரித்தேன்.  மிலோராத் பாவிச்சின் நாவல் டிக்‌ஷனரி ஆஃப் கஸார்ஸ் இங்கே பல எழுத்தாளர்களுக்கும் பைபிள் போன்றது.  எனக்கும்தான்.  ஆனால் தொமாஸ் ஸாலாமுன்னுக்கு மிலோராத் பாவிச் பற்றி எதுவுமே தெரியவில்லை.  ஏதோ ஓரிரு முறை அந்தப் பெயரைக் கேட்டது போல் இருக்கிறது என்று அண்ணாந்து பார்த்தபடி சொன்னார்.  சுத்தமாகத் தெரியவில்லை.  மேற்கத்திய எழுத்தாளர்கள் – இல்லை இல்லை – வெளிநாட்டு எழுத்தாளர்கள் பெரும்பாலுமே அப்படித்தான் இருக்கிறார்கள்.  இங்கே தமிழ்நாட்டில்தான் நான் ஜெயமோகன் எழுதிய 350 புத்தகங்களையும் படித்து விமர்சனம் எழுத வேண்டியிருக்கிறது.  அவரும் நான் எழுதிய நூறு புத்தகங்களைப் படிக்க வேண்டியிருக்கிறது. 

போகட்டும், நேற்று கதைக்கு வருகிறேன்.  ஒன்பதரைக்கு உறங்கச் செல்லும் போது “என்ன இது, இவ்வளவு சீக்கிரம்?” என்றாள் அவந்திகா.  பொதுவாக நான் பத்துக்குப் படுத்து நாலரைக்கு எழும் ஆள்.  இன்று அரை மணி நேரம் முன்னதாக.  நாள் முழுதும் படித்தால் உடம்பு வலிக்கிறது; அசதியாக இருக்கிறது; உடல் உழைப்பு செய்தது போல் இருக்கிறது என்றெல்லாம் அவளிடம் சொல்ல ஆரம்பித்த போது “ஐயோ, எனக்குப் படிக்க வேண்டிய வேலை நிறைய இருக்கிறது, நாளை பேசுவோம்” என்று சொல்லி விட்டாள்.  அடப் பாவி, கேள்வி கேட்டு விட்டு பதிலைக் கேட்காமல் போகிறாளே என்று நினைத்தபடி தூங்கப் போனேன்.  அப்போது தோன்றியது – நேற்று நான் வாக்கிங் போய் வந்த பிறகு பேசிய – அல்லது பேச நினைத்த முதல் பேச்சே “நாள் முழுதும் படித்தால் உடம்பு வலிக்கிறது…” என்பதுதான்.  அதைக் கூட கேட்க ஆள் இல்லாமல் போயிற்று. 

இந்த ஒரு காரணத்திற்காகத்தான் நாகேஸ்வர ராவ் பூங்காவுக்கு வாக்கிங் செல்கிறேன்.  ஒரு ஒன்றரை மணி நேரம் ராகவனிடமும் ராமசேஷனிடமும் பேசிக் கொண்டிருக்கலாம்.  இல்லாவிட்டால் மாதக் கணக்கில் மௌன விரதம் இருந்தது போல் ஆகி விடும்.  ஒரு சின்ன பிரச்சினைதான்.  ”இங்க்லீஷ்காரன் வருவதற்கு முன் சாதிப் பிரிவினைகள் இத்தனை கொடூரமாக இல்லை; இங்க்லீஷ்காரன் தான் இதையெல்லாம் கொண்டு வந்தான்.  அப்போது எல்லாருக்கும் சமமான கல்வி வாய்ப்பு இருந்தது.  இல்லாவிட்டால் ஒரு அ-பிராமணரான நம்மாழ்வார் அத்தனை அபூர்வமான பாசுரங்களை இயற்றி இருக்க முடியுமா?  முன்பெல்லாம் பெண்கள் ரொம்ப சமத்துவமாக இருந்தார்கள்.  இல்லாவிட்டால் ஔவையார் அப்படியெல்லாம் பாடியிருக்க முடியுமா?  ஆரியர்கள் ஒன்றும் கைபர் வழியாக வரவில்லை; அவர்கள்தான் தமிழ்நாட்டின் பூமி புத்திரர்கள்” என்றெல்லாம் ராகவன் சொல்லும் போது தீவிரமாக ஆமாம் ஆமாம் என்று தலையாட்ட வேண்டியிருக்கும்.  இல்லாவிட்டால், வருஷம் முன்னூற்று அறுபத்தி அஞ்சு நாளும் மௌன விரதம் இருக்க வேண்டியிருக்கும்.   

***

Xoom.com மூலம் பணம் அனுப்ப என் முகவரி தேவை எனில் எனக்கு எழுதுங்கள். அனுப்புகிறேன். charu.nivedita.india@gmail.com

***

www.charuonline.com என்ற இந்த இணையதளம் 2002-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.  சினிமா, இசை, அரசியல், இலக்கியம் போன்ற தலைப்புகளில் இதில் இத்தனை ஆண்டுகளாகத் தொடர்ந்து எழுதி வருகிறேன்.  இந்த இணையதளத்தை ஒரு மாதத்தில் 60000 பேர் வாசிக்கிறார்கள்.  தமிழில் எழுத்தாளர்கள் இணையத்தில் எழுத ஆரம்பிப்பதற்கு வெகுகாலம் முன்னரே ஆரம்பிக்கப்பட்ட பழைய இணைய தளம் இது.  அப்போது விகடன், தினமலர் போன்ற பத்திரிகைகளின் இணைய தளங்கள்தான் இருந்தன.  இப்போது இந்த இணையதளத்தைக் கட்டணம் செலுத்திப் படிக்கும் தளமாக மாற்றலாமா என யோசித்தேன்.  அறுபது ஆயிரத்தில் ஆறு பேர் கூட எஞ்ச மாட்டார்கள்.  முன்பே அதைப் பரிசோதித்துத் தோற்றிருக்கிறேன்.  எனவே மீண்டும் அந்தச் சோதனையில் ஈடுபட மாட்டேன்.  ஆக, இப்போது என் வேண்டுகோள் என்னவெனில், இதை வாசிக்கும் அன்பர்களில் விருப்பமுள்ளவர்கள் தாமாகவே முன்வந்து கட்டணம் செலுத்தலாம்.  விருப்பம் இல்லாதவர்கள் கட்டணம் செலுத்தாமலும் படிக்கலாம்.  அவரவர் விருப்பம்.  பணம் எப்போதும் என் சிந்தனையில் இருந்ததில்லை.   இனிமேலும் இருக்காது.  பணம் பற்றி யோசிக்காமல் இருக்கக் கூடிய சூழல் இருந்தது.  யோசிக்காமல் இருந்தேன்.  இப்போது நிலைமை மாறி விட்டதால் பணத்துக்கான ஒரு சிறிய ஏற்பாடு இது.  எவ்வளவு கட்டணம் என்பதும் அவரவர் விருப்பம்.  மாதாமாதம் அனுப்ப முடியாவிட்டால் மூன்று மாதத்துக்கான தொகையை அனுப்பலாம். கட்டணம் செலுத்தவில்லையே, படிக்கலாமா கூடாதா என்ற அறம் சம்பந்தமான கேள்விக்குள் நுழைந்து விடாதீர்கள்.  அது 60000 என்ற வாசகர் எண்ணிக்கையைக் குறைத்து விடும்.  முடிந்தவர்கள் கட்டணம் செலுத்துங்கள்.  முடியாவிட்டால் எந்தப் பிரச்சினையும் இல்லை.

ஓரிரு நண்பர்கள் paypal மற்றும் google pay மூலம் பணம் அனுப்பலாமா என்று கேட்டார்கள்.  நான் paypal-இல் இருக்கிறேன்.  Paypal மூலம் அனுப்ப முடியாவிட்டால் Xoom.com மூலமும் அனுப்பலாம். பேபாலின் கிளை நிறுவனம்தான் அது. கூகிள்பே மூலம் அனுப்ப என் தொலைபேசி எண் வேண்டும் என்று நினைக்கிறேன்.  மின்னஞ்சல் செய்தால் தொலைபேசி எண் தருகிறேன்.  பொதுவில் போட இயலாது.  தொலைபேசி எண் இல்லாமலும் கூகுள்பே மூலம் அனுப்பலாம். அதற்குத் தேவையான என் UPI ID:

charu.nivedita.india@okaxis

இந்த ஒரு விபரம் இருந்தாலே கூகுள்பே மூலம் பணம் அனுப்பி விடலாம். தொலைபேசி எண்ணும் தேவையெனில் எழுதுங்கள்:

charu.nivedita.india@gmail.com

கட்டணம் செலுத்துவதற்கான வங்கிக் கணக்கு விவரம்:

UPI ID: charunivedita@axisbank

பெயர்: K. ARIVAZHAGAN

Axis Bank Account No. 911010057338057

Dr Radhakrishnan Road, Mylapore

IFSC No. UTIB0000006

ஒரு நண்பர் பெயரில் உள்ள K என்பதன் விரிவு என்ன என்று கேட்டிருந்தார்.  அவர் வங்கியில் கேட்கிறார்களாம்.  Krishnasamy.  என் தந்தையின் பெயர்.  ஆக்ஸிஸில் அனுப்ப முடியாவிட்டால் என் ஐசிஐசிஐ கணக்கு விபரம் கீழே:

K. ARIVAZHAGAN

ICICI a/c no.  602601 505045

MICR Code: 600229065

IFS Code ICIC0006604

T. NAGAR BRANCH chennai