Pithy thoughts – 22

10 Downingஇல்

எட்டு ரவுண்டு டகீலா

அப்புறம் கொஞ்சம் ஆட்டம்

எல்லாம் முடித்து

வோலாவில்

தெரேஸாவை அனுப்பி விட்டு

ஆட்டோவில்

வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது

பக்கத்தில் ஒரு ஆள்

யாரென்று புரியவில்லை

எட்டு ரவுண்டு டகீலாவும்

ஆடியதில் போய் விட்டதே

யார் நீர் என்றதற்குக்

கடவுள் என்று பதில் வந்தது

சமீபத்தில் புதுமைப்பித்தனைப்

படித்து பித்தமாகி விட்டதா

என ஐயத்துடன்

என்னய்யா உளறுகிறீர்

அதெல்லாம் கதையில்தான்

நடக்குமென்றேன்

நிஜத்திலும் நடக்கும்

என்ன வரம் வேண்டும் கேள்

என்றார் கடவுள்

சரி விளையாடுவதிலென்ன

நட்டமென்று பணம் வேண்டும்

என்றேன்

கலி முற்றி விட்டது

எழுத்தாளனுமா இப்படியென

முனகியபடி கொடுக்கிறேன்

ஆனாலொரு நிபந்தனை

என்றார் கடவுள்

என்ன என்றேன்

மது மாது கூடாது

அப்படியானால் உம் பணம் தேவையில்லை

என்று சொல்லி விட்டு

ஆட்டோவை நிறுத்திக்

காசு கொடுத்து விட்டு

நடக்க ஆரம்பித்தேன்

பெஹன்சூத்

கடவுள் கூட

டார்ச்சர் கொடுக்கிறார்