சாரு,
நீங்கள் எனக்குப் பொருள்வயமாக
ஒன்றைக் கொடுத்தாக
நான் கருதவில்லை
நீங்கள் எனக்குள்
இருளை நகர்த்தி இருக்கிறீர்கள்
அதனால் அதுவரை நான் உணர்ந்திராத
ஒரு விசாலமான அறையின்
கதவு திறந்தது
எனக்கு நீங்கள் அதை
அடையாளம் காட்டினீர்கள்
என் அம்மா அப்பா
இவரெனச் சொன்னது போலிருந்தது
இதெல்லாம்
சொல்லியாக வேண்டும் அல்லது
சொல்ல வேண்டாம்
என்னுமளவு
நீங்கள் அன்னியருமில்லை
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்
***
செல்வகுமார்