9. மீண்டும் ஒருவர்

என் நாவலைப் படித்துப் பார்த்து ரெண்டு வார்த்தை திட்டுங்கள் அப்பா என்று வரும் கடிதங்களையெல்லாம் குப்பையில் தள்ளி விட்டு வேலையைப் பார்த்துக் கொண்டிருக்கலாம்தான். ஆனால் எனக்கும் கேளிக்கை தேவைப்படுகிறது அல்லவா, அதனால் இப்படிப்பட்ட சிறு விலகல்கள்.  இன்று அப்படி வந்த ஒரு கடிதம் இது:

ஒருமுறை உங்கள் பேட்டியைக் கேட்ட பிறகு லத்தீன் அமெரிக்க எழுத்தாளர்களைப் படிக்க ஆரம்பித்தேன். அவர்களில் யோசா, போர்ஹேஸ், ரொபர்த்தோ பொலான்யோ ஆகியவர்கள் என்னை மிகவும் கவர்ந்தார்கள்.  உங்கள் வாழ்க்கையில் உங்களைக் கவர்ந்த பத்து லத்தீன் அமெரிக்க நூல்களைச் சொல்ல முடியுமா?

அழகான பெண்ணைப் பார்த்து எடுத்த எடுப்பில் “நாம் செக்ஸ் வச்சுக்கலாமா?” என்று கேட்பது மாதிரிதான் இதுவும்.  ஆனாலும் இவர்களெல்லாம் தாம் செய்யும் தவறு இன்னதென்று தெரியாமல் செய்கிறார்கள் என்பதால் பொறுமையாகவே பதில் சொல்கிறேன்.  மேலும் ஒரு விவரம், அவர் எழுதியிருந்த ஆங்கிலக் கடிதத்தை நான் தமிழ்ப்படுத்தியிருக்கிறேன்.

என் பேட்டியை எப்போது கேட்டீர்கள்?  அதற்குப் பிறகு எத்தனை ஆண்டுகளில் மரியோ பர்கஸ் யோசா, ஹோர்ஹே லூயிஸ் போர்ஹேஸ், ரொபர்த்தோ பொலான்யோ போன்ற எழுத்தாளர்களை வாசித்தீர்கள்?  இவர்கள் உங்களை எந்த வகையில் கவர்ந்தார்கள்?  இந்த மயிராண்டிகள் எல்லாம் (கெட்ட வார்த்தை எழுதுவதற்காக மன்னியுங்கள், கோபம் கொண்டு இதைப் படிப்பதை நிறுத்தாமல் பொறுமையாகத் தொடர்ந்து படித்தால் ஏன் கெட்ட வார்த்தை போட்டிருக்கிறேன் என்று புரியும்) அசோகமித்திரனை விடவும், எம்.வி. வெங்கட்ராமை விடவும், சி.சு. செல்லப்பாவை விடவும், க.நா. சுப்ரமணியத்தை விடவும், கு.ப. ராஜகோபாலனை விடவும், புதுமைப்பித்தனை விடவும், தி. ஜானகிராமனை விடவும், தஞ்சை ப்ரகாஷை விடவும், ஆதவனை விடவும் – இன்னும் பல பெயர்களை விட்டு விட்டேன், மன்னிக்கவும் – எந்த விதத்தில் ஒஸ்த்தி என்று நினைக்கிறீர்கள்?  இப்போது புரிகிறதா ஏன் மயிராண்டிகள் என்று சொன்னேன் என்று?

மேலும், உங்களுக்கு சில டேபிள் மேனர்ஸையும் கற்றுத் தருகிறேன்.  (அதற்கு நீங்கள் எனக்குக் கட்டணம் செலுத்த வேண்டும்).  எந்த எழுத்தாளரையும் முதல் முறையாகக் குறிப்பிடும் போது முழுப் பெயரையும்தான் சொல்ல வேண்டும்.  அதே இடத்தில் அடுத்தடுத்து அவர் பெயரைச் சொல்ல நேரும்போது மட்டுமே பெயரைக் குறுக்கலாம்.  ஒவ்வொரு முறையும் முழுப் பெயரையும் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.  ஆனால் ஒன்றரை வரிக் கடிதத்தில் பெயரைக் குறிப்பிடும்போது முழுப் பெயரையும் குறிப்பிடுவதுதான் மரியாதை.

மேலும், உங்களுக்குத் தமிழ் தெரியுமா?  நான் மேலே குறிப்பிட்டிருக்கும் தமிழ் எழுத்தாளர்களை இதற்கு முன் கேள்வியாவது பட்டதுண்டா?

மேலும், என் பேட்டியைக் கேட்டீர்கள்.  சரி.  என் எழுத்தை ஏதாவது படித்திருக்கிறீர்களா?  நான் ஒரு ப்ளாகை ஆரம்பித்து அதில் பதினைந்து ஆண்டுகளுக்கும் மேலாக எழுதி வருகிறேன்.  அந்த ப்ளாக் பற்றிக் கேள்வியாவது பட்டதுண்டா?

***

என் சக எழுத்தாளர்கள் மற்றும் மாணவர்கள் தவிர மற்றவர்கள் இந்தத் தளத்தை வாசிக்கும் நண்பர்கள் இதற்குக் கட்டணமாக அல்லது நன்கொடையாக நீங்களே ஒரு தொகையை நிர்ணயித்து அனுப்பி வைக்க முயற்சி செய்யுங்கள்.  மாதாந்திரக் கூட்டங்களில் கலந்து கொள்பவர்களும் இதே முறையைப் பின்பற்றி எனக்குப் பணம் அனுப்பி வைக்கலாம்.

PayPal மூலம் பணம் அனுப்ப என் மின்னஞ்சல் முகவரி மட்டும் போதும். charu.nivedita.india@gmail.com

Xoom.com மூலம் பணம் அனுப்ப என் முகவரி தேவை எனில் எனக்கு எழுதுங்கள். அனுப்புகிறேன். charu.nivedita.india@gmail.com

Paypal மூலம் அனுப்ப முடியாவிட்டால் Xoom.com மூலமும் அனுப்பலாம். பேபாலின் கிளை நிறுவனம்தான் அது. கூகிள்பே மூலம் அனுப்ப என் தொலைபேசி எண் வேண்டும் என்று நினைக்கிறேன்.  மின்னஞ்சல் செய்தால் தொலைபேசி எண் தருகிறேன்.  பொதுவில் போட இயலாது.  தொலைபேசி எண் இல்லாமலும் கூகுள்பே மூலம் அனுப்பலாம். அதற்குத் தேவையான என் UPI ID:

charu.nivedita.india@okaxis

இந்த ஒரு விபரம் இருந்தாலே கூகுள்பே மூலம் பணம் அனுப்பி விடலாம். தொலைபேசி எண்ணும் தேவையெனில் எழுதுங்கள்:

கட்டணம் செலுத்துவதற்கான வங்கிக் கணக்கு விவரம்:

UPI ID: charunivedita@axisbank

பெயர்: K. ARIVAZHAGAN

Axis Bank Account No. 911010057338057

Dr Radhakrishnan Road, Mylapore

IFSC No. UTIB0000006

பெயரில் உள்ள K என்பதன் விரிவு Krishnasamy.  என் தந்தையின் பெயர்.  ஆக்ஸிஸில் அனுப்ப முடியாவிட்டால் என் ஐசிஐசிஐ கணக்கு விபரம் கீழே:

K. ARIVAZHAGAN

ICICI a/c no.  602601 505045

MICR Code: 600229065

IFS Code ICIC0006604

T. NAGAR BRANCH chennai