புத்தக விழா

வருகின்ற புத்தக விழாவில் என்னுடைய புதிய புத்தகங்கள் எதுவும் வருகிறதா என நண்பர்கள் அக்கறையோடு விசாரித்தனர். நான் நாவல் எழுதும் மும்முரத்தில் அல்லவா இருக்கிறேன் என்றேன். எப்படியோ மனதைக் கரைத்து விட்டார்கள். அதனால் சட்டென்று அந்த வேலையில் அமர்ந்து இரண்டு புத்தகங்களை அனுப்பி விட்டேன். இன்னும் இரண்டு புத்தகங்களை அனுப்புவேன்.

மயானக் கொள்ளை (நாடகம்)

மாயமோகினி (கவிதைத் தொகுப்பு)

சொல் தீண்டிப் பழகு (கட்டுரைத் தொகுப்பு)

பூச்சி (சுயசரிதக் குறிப்புகள்)

இது தவிர இன்னும் மூன்று அத்தியாயங்கள் சக மொழிபெயர்ப்பாளரிடமிருந்து கிடைத்து விட்டால் முகமூடிகளின் பள்ளத்தாக்கு.

இப்போதைக்கு இந்த ஐந்தும்…