157. க.நா.சு.வின் 55 ரஜாய் பெட்டிகள்
நேற்று எழுதிய இனிய அனுபவத்துக்கு ராம்ஜி ஒரு பின்னூட்டம் எழுதியிருந்தார். அது: செருப்பை வெளியில் வைத்து விட்டு சாஷ்டாங்கமாக உங்கள் காலில் விழுந்து, தற்கொலை செய்து கொள்ளாமல் நான் இன்று வாழ்வதே உங்கள் எழுத்தை படித்த பின் தான் என்று எங்கோ ஒரு கிராமத்திலிருந்து வந்த அந்த இளம் மாணவன் சொன்ன தருணம். 80 வயது கடந்த மூதாட்டி புத்தக அரங்கிற்குள் வந்து பழுப்பு நிறப்பக்கங்களில் நீங்கள் தீ ஜாவை பற்றி எழுதியதைப் பேசி நெகிழ்ந்த தருணம். … Read more