அடியேனின் நேர்காணல்

அரூ இதழில் வெளியாகியுள்ள இந்த நேர்காணல்தான் அடியேனின் இதுவரையிலான நேர்காணல்களில் ஆக முக்கியமானது எனக் கருதுகிறேன். அரூ இதழில் அராத்து, செல்வேந்திரன் ஆகியோரும் என் எழுத்து பற்றி எழுதியிருக்கிறார்கள். அவர்களுக்கு என் நன்றி. அரூ குழுவினர் சுஜா, ராம், பாலா ஆகியோருக்கும் என் மனமார்ந்த நன்றி. பின்னர் அரூ இதழைப் படித்து விட்டு விரிவாக எழுதுகிறேன்.

பூச்சி 94

எத்தனையோ எழுத்தாளர்கள் எத்தனையோ இன்னல்களுக்கு இடையே எழுதியிருக்கிறார்கள்.  பெரும்பாலான கதைகள் நமக்குத் தெரியும்.  லத்தீன் அமெரிக்க எழுத்தாளர் என்றால், ஒன்று, நாடு கடத்தி விடுவார்கள்.  அல்லது, தூதராக ஏதாவது ஒரு ஐரோப்பிய நாட்டுக்கு அனுப்பி விடுவார்கள்.  அது ஏன் ஐரோப்பிய நாடு என்றால், அங்கே போனால்தான் திரும்பி சொந்த நாட்டுக்கு வர மனசு வராது.  பாப்லோ நெரூதா எல்லாம் தன் வாழ்நாளில் பெரும்பகுதியை வெளிநாடுகளில் தூதராகவே கழித்தவர்.  துரதிர்ஷ்டவசமான விஷயம் என்னவென்றால், லத்தீன் அமெரிக்க இலக்கியம் என்றால், … Read more

To You Through Me – 12

நகுலன் உரை மிக மிகச் சிறப்பாக இருந்தது. நீங்கள் கொடுக்கும் அறிவுக்கு என்ன விலை கொடுத்தாலும் ஆகாது. இப்போது இங்கு நிலவும் சூழ்நிலை காரணமாக சிறு தொகைதான் என்னால் அனுப்ப முடிகிறது. உங்களின் 15 நாள் உழைப்புக்கு, இந்த சொற்பப் பணம் அனுப்புவது எனக்கு மிகவும் அவமானமாக இருக்கிறது. மன்னிக்கவும். நீங்கள் பேசிக்கொண்டிருக்கும்போது கல்லூரி மாணவனைப் போல் குறிப்பு எடுப்பேன். சி சு செல்லப்பா ஆகட்டும்,  நகுலன் உரை ஆகட்டும், குறிப்புகளே நான்கு பக்கங்களைத் தாண்டிவிட்டது. வேலைப்பளு காரணமாக … Read more

பூச்சி 93

ஒரு பெயரை விட்டு விட்டேன்.  இளம் எழுத்தாளர்.  முகநூலில் அவர் எழுதுவதைப் படித்திருக்கிறேன்.  பிடிக்கும்.  தன் சிறுகதையைத் தொகுதியைக் கொடுத்துப் படிக்கச் சொன்னார்.  ஒரு ஆண்டு ஆனது படிக்க.  அதுவரை தொடர்ந்து கேட்டபடியே இருந்தார்.  இடையில் என் நண்பர் ஒருவரும் அதைப் படிக்கச் சொல்லி வற்புறுத்திக்கொண்டே இருந்தார்.  படித்தேன்.  அவர் எந்த மக்களைப் பற்றி எழுதியிருந்தாரோ அதுதான் தமிழில் அவர்களைப் பற்றி எழுதப்பட்ட முதல் பதிவு.  நல்ல இலக்கியத் தரம் வாய்ந்ததாகவும் இருந்தது.  ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட வேண்டிய … Read more

பூச்சி 92

நேற்றைய பதிவில் இளம் எழுத்தாளர்கள் பற்றி அவர்களுக்கு என் எழுத்து பிடிக்காவிட்டாலும் எனக்கு அவர்களின் எழுத்து பிடித்திருக்கிறது என்று குறிப்பிட்டிருந்தேன்.  இதில் உள்ள முதல் விஷயம் பற்றி அவர்கள் எவ்விதக் குற்ற உணர்வும் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை.  அவர்களுக்கு என் எழுத்து பிடிக்காவிட்டாலும் – இதில் பல விஷயங்கள் அடங்கியுள்ளன.  சிலர் என்னைப் படித்ததே இல்லை.  சிலருக்குப் படித்தாலும் பிடிக்கவில்லை.  இதனால் இவர்களின் வாழ்க்கையிலேயே இவர்கள் என் பெயரைக் குறிப்பிட எந்த வாய்ப்பும் இல்லை.  இது … Read more

To You Through Me – 11

அன்புள்ள சாரு, உங்களோடு சிலவற்றைப் பகிர்ந்து  கொள்ள நினைக்கிறேன். சிலவற்றை நீங்கள் தெளிவுபடுத்த வேண்டுகிறேன்.  முதலாவதாக நகுலன் உரையில் நீங்கள் அவரை ஒரே ஒரு முறை சந்தித்ததாகவும் அது அவர் இறப்பதற்கு முந்தின வருடம் என்றும் குறிப்பிட்டீர்கள். ஆனால் நீங்கள் நகுலனை அவர் இறப்பதற்கு பத்து ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு முறை சந்தித்ததாகவும் பின்னர் அவர் இறப்பதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு முறை சந்தித்தாகவும் நகுலனின் நினைவஞ்சலியில் குறிப்பிட்டுள்ளீர்கள். முதல் முறை சந்தித்த பொழுது அவரோடு உரையாடியதையும் இரண்டாம் முறை சந்தித்த பொழுது அதை காணொளியாக பதிவு செய்ததையும் குறிப்பிட்டுள்ளீர்கள். நகுலனின் உங்கள் உரையைக் கேட்கும் முன்னர் … Read more