கடவுளும் நானும் (1)

ஜனவரி ஆறாம் தேதி ஏ.ஆர். ரஹ்மானின் அழைப்பின் பேரில் அவர் அலுவலகத்தில் காலை பத்தரை மணி அளவில் அவரைச் சந்தித்தேன்.  மூன்று மணி நேரம் பேசிக் கொண்டிருந்தோம்.  மேற்கத்திய இசையும் சூஃபி தத்துவமும் கொஞ்சம் இலக்கியமும்.  கிளம்பும் வேளையில்தான் அன்று அவரது பிறந்த நாள் என்றே தெரிந்தது.  என் புத்தகம் ஒன்றைப் பரிசாகக் கொடுத்தேன்.  அந்த மூன்று மணி நேரமும் அவர் தன் மொபைலை எடுக்கவே இல்லை என்பதை கவனித்தேன்.  இத்தனை எளிமையான ஒரு மனிதரை என் … Read more

நிறுவனங்கள் மீது நம்பிக்கை இழத்தல்

இந்தியாவில் – அதிலும் மிகக் குறிப்பாக தமிழகத்தில் – நிறுவனங்கள் மீது மக்கள் முற்றிலும் நம்பிக்கை இழந்து விட்டார்கள்.  இந்தியாவில் லஞ்சம் என்பது நம் அன்றாட வாழ்வோடு பின்னிப் பிணைந்து விட்ட விஷயம். லஞ்சம் இல்லாத இடமே இல்லை.  ஆனால் லஞ்சத்தையே கட்டணம் மாதிரி வசூலிக்கும் போது அதை சீரழிவின் உச்சக்கட்டமாக எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது.  ஏற்கனவே எழுதியதுதான்.  சென்னை மெரீனா கடற்கரைக்கு எதிரே உள்ள போலீஸ் கமிஷனர் அலுவலக வாசலிலேயே சீருடை அணிந்த ஒரு போலீஸ் … Read more

பொள்ளாச்சி சம்பவங்கள் : சீரழிவின் அடையாளம்

ஷார்ஜாவில் வசிக்கும் பாலாஜி தன் முகநூல் குறிப்பில் இதை எழுதியிருக்கிறார்: ”சாரு இங்கே ஷார்ஜாவில் என் வீட்டிற்கு வந்திருக்கும்போது என் மகள்களை இரு வருடம் கழித்து இந்தியா சென்று படிக்க வைக்க இருக்கிறேன் என்று சொன்னேன்.. அவர் உடனே பதறி…ஏன் இங்கேயே இருக்கட்டும்..இந்தியா எல்லாம் வேணாம்னு சொன்னார்.. நான் உடனே, ஏன்ப்பா அப்படி சொல்றிங்க..என்ன இருந்தாலும் ஒரு நாள் இந்தியா வந்துதானே ஆகனும்னு சொன்னேன்.. அதற்கு நீங்க வேணும்னா வாங்க. பொண்ணுங்க இங்கேயே படிச்சு, இங்கேயே இருக்கட்டும்..இல்லைன்னா … Read more

கோபி கிருஷ்ணனும் வரம்பு மீறிய பிரதிகளும்

என்னுடைய கட்டுரைகளில் அவ்வப்போது கோபி கிருஷ்ணன் பற்றிக் குறிப்பிடுவதை நீங்கள் கவனித்திருக்கலாம். தமிழில் எனக்கு மிகப் பிடித்தமான எழுத்தாளர்கள் நகுலன், அசோகமித்திரன், ஆதவன், கோபி கிருஷ்ணன். இதில் அசோகமித்திரனைத் தவிர மற்ற மூன்று பேருடைய எழுத்துக்கும் என்னுடைய எழுத்துக்கும் மிக நெருக்கமான தொடர்பு உண்டு. அதிலும், கோபியும் நானும் கிட்டத்தட்ட க்ளோன் பண்ணிய ஆடுகள் மாதிரி. தமிழில் transgressive fiction-ஐ அவரும் நானும் சேர்ந்தே எழுதினோம். என்னுடைய 12 ஆண்டு தில்லிவாசத்தை முடித்துக்கொண்டு 1989ஆம் ஆண்டு சென்னை … Read more

மூன்று கிண்டில் புத்தகங்கள்

தமிழ்ச் சமூகத்துக்கும் எழுத்துக்கும் என்றைக்குமே தகராறுதான்.  சங்க காலத்தில் புலவர்கள் மன்னர்களிடம் பிச்சை எடுத்த கதையையெல்லாம் பார்க்கும்போது கொஞ்சம் தெம்பாகத்தான் இருக்கிறது – சரி, உள்ளதுதானே என்று.  ஆனால் என் நண்பர்களின் உதவியால் கடந்த பத்து ஆண்டுகளாக நான் அந்தப் பிரச்சினை இல்லாமல் இருந்தேன்.  இப்போது ஜனவரி முதல் தேதியிலிருந்து பண வரத்து நின்று போனதால் யோசித்துக் கொண்டிருக்கிறேன்.  பாரதி புதுச்சேரியில் வாழ்ந்த போது பல மாதங்களாக வீட்டு வாடகை கொடுக்கவில்லை.  வீட்டு ஓனர் செட்டியார் வந்து … Read more

ஹௌல் மற்றும் சில கவிதைகள்…

தமிழில் நவீன கவிதைக்கு ஒரு மிகச் சிறப்பான பாரம்பரியம் இருக்கிறது.  பாரதியின் வசன கவிதைகளிருந்தே துவங்கலாம்.  பிறகு ந. பிச்சமூர்த்தி, தர்மு சிவராமு, ஞானக்கூத்தன் என்று தொடங்கி தேவதேவன், தேவதச்சன், ஆத்மாநாம், சுகுமாரன் என்று தொடர்ந்து இன்றைய சங்கர ராமசுப்ரமணியன் வரை வந்திருக்கிறது.  ஒரு தூரத்து வாசகனாக இந்தப் பின்னணியும் நெருங்கிய வாசகனாக Rainer Maria Rilke, Stéphane Mallarmé, ஆர்த்தர் ரேம்போ போன்ற ஐரோப்பியக் கவிகளின் பின்னணியும் கொண்டே என் கவிதைகளை எழுதி வருகிறேன்.  இந்தக் … Read more