நா. முத்துக்குமாரின் மரணம் தொடர்பாக…

ஒவ்வொரு கவிஞனும் அகால மரணம் அடையும் போது சில சமூக ஆர்வலர்கள், பொதுநல விரும்பிகள் குடிப்பதன் தீமைகள் பற்றி உபதேசம் செய்கிறார்கள்.  கலை, இலக்கியம் பற்றிய எந்தப் புரிதலும் இல்லாத அந்த மூடர்களுக்கு நண்பர் கார்ல் மார்க்ஸ் சொல்லியிருக்கும் பதிலை கீழே தருகிறேன்.  இதனால் எல்லா கவிஞர்களும், எழுத்தாளர்களும் குடித்து அழியுங்கள் என்று நான் சொல்லவில்லை.  ஆனாலும் அளவும் நிதானமும் வேண்டும் என்று நினைக்கிறேன்.  அது வேறு; பொதுநல விரும்பிச் சராசரி மொண்ணைகளின் உபதேசம் வேறு.  மேலும், … Read more

போலிகளை என்ன செய்யலாம்?

அன்புள்ள சாரு, தில்லியிலிருந்து நவீன். ராஸ லீலா படித்தேன். google play வில் கிடைத்தது மிக வசதியாக இருந்தது. அதன் பிறகு தேகமும் படித்தேன். ராஸ லீலா முதல் பாகத்தில் வரும் கண்ணாயிரம் பெருமாளின் அனுபவங்கள் சுவாரசியமாக இருந்ததை விட அவை அளித்த திறப்புகள் அபாரம். வேறு தள சிந்தனைக்கு வித்திட்டமைக்கு நன்றி. அடுத்து படித்தது தேகம். ஒரு உடலின் தேடலாகவும் அந்த தேடலின் அலக்கழிப்புகளையும் பதிவு செய்திருந்தது அருமை. இரு நாவல்களிலுமே பெண்கள் எழுதும் கடிதங்கள் … Read more

லெனின் விருது : தமிழ் ஸ்டுடியோஸ்

தமிழ் ஸ்டுடியோ அருணின் கோரிக்கை: லெனின் விருது – அனுராக் காஷ்யப் சென்னை வருகை – நன்கொடை    தமிழ் ஸ்டுடியோ இயக்கம் ஒவ்வொரு ஆண்டும் சுயாதீன திரைப்படக் கலைஞர்களை தெரிவு செய்து அவர்களுக்கு லெனின் விருதை வழங்கி வருகிறது. இந்த ஆண்டு ஆவணப்பட இயக்குனர் தீபா தன்ராஜ் லெனின் விருதிற்காக தெரிவு செய்யப்பட்டிருக்கிறார். ஆகஸ்ட் 20 ஆம் தேதி சனிக்கிழமை சென்னையில் விழா நடைபெறவிருக்கிறது. ஒவ்வொருமுறையும் லெனின் விருது நடைபெறும்போது நன்கொடை கேட்டு எழுதுவேன். ஆனால் சென்ற ஆண்டே … Read more

ரிஷான் ஷெரீஃபிடமிருந்து ஒரு முக்கியமான வேண்டுகோள்…

வாசகசாலை; மனதிற்கான வைத்தியசாலை வாசிப்பு பற்றி ஒரு பதிவு எழுதியிருந்தேன். மனதுக்குப் பிடித்த புத்தக வாசிப்பானது, நோயாளிகளை விரைவில் குணப்படுத்த ஏதுவாகும். அவர்களது மனதை சாந்தப்படுத்தும். வெளிநாடுகளில் நோயாளிகளை விரைவில் குணமடையச் செய்ய இந்த முறையைப் பின்பற்றுகிறார்கள். அந்த நடைமுறை, இலங்கையிலுள்ள அநேகமான வைத்தியசாலைகளில் பின்பற்றப்படுவதில்லை. காரணங்கள் பலவற்றைச் சொல்லலாம். இலங்கையிலுள்ள அனைத்து வைத்தியசாலைகளும், அங்கு அனுமதிக்கப்படும் நோயாளிகளை, ‘நாம் நோயாளிகள்’, ‘நாம் பலவீனமானவர்கள்’ என உணரச் செய்துகொண்டேயிருக்கின்றன. இதே நிலைப்பாடுதான் நோயாளிகளுடன், அவர்களுக்கு உதவுவதற்காக, கூடத் … Read more

மிஷ்கினின் சவரக் கத்தி

கொடூரமான கொலை ஆயுதமான சிலுவை ஒரு மாமனிதனின் மகத்தான தியாகத்தால் தியாகத்தின் குறியீடாக மாறியது.  அதைப் போல, கத்தி என்பது கொலைக்கானது அல்ல; அது ஜனனத்தின் குறியீடு, தொப்புள் கொடியை அறுப்பதன் மூலம் என்கிறார் மிஷ்கின்.  மிஷ்கின் எழுதிய, அருள் கொரேலி இசையமைத்த இந்த அற்புதமான பாடலைக் கேட்டேன்.  சவரக் கத்தி மிஷ்கினின் மகுடத்தில் மற்றுமொரு மயிலிறகு.  வாழ்த்துக்கள் நண்பனே… இதை எழுதிய பிறகுதான் மிஷ்கினுக்கு ஃபோன் போட்டு யார் குரல் என்றேன்.  உங்கள் நண்பனின் குரல், … Read more

என்னவென்று சொல்வது?

முகநூலில் எப்போதாவது  ஐந்து நிமிடம் மேய்வது வழக்கம்.  அப்போது பின்வரும் குறிப்பைப் படித்த போது நான் எழுதியதை யாரோ எடுத்து மேற்கோள் போட்டிருக்கிறார்கள் என்று நினைத்தேன்.  ஆனால் தொடர்ந்து படித்த போது இல்லையே, இப்படி எங்கே எழுதினோம், ஆனால் நாம் எழுதிய மாதிரியே இருக்கிறதே என்று நினைத்தேன்.  பிறகுதான் லீனா மணிமேகலை என்று தெரிந்தது.  நானும் முன்பெல்லாம் இப்படி விளக்கங்கள் கொடுத்துக் கொண்டிருந்தேன்.  பிறகு அது தேவையில்லை என்று தோன்றி விட்டது.  லீனா எழுதிய குறிப்பு கீழே: … Read more