நிர்பயா என்கிற ஜோதி சிங்

முகநூலில் நண்பர் கார்ல் மேக்ஸின் பதிவைப் படித்தேன்.  அவரது பதிவுகள் எப்போதுமே எனக்கு அந்தக் காலத்து நிறப்பிரிகை கட்டுரைகளை நினைவுபடுத்துகின்றன.  முதலில் கார்ல் மேக்ஸ்: நிர்பயா வன்கொலையில் பங்குபெற்ற சிறுவன் மூன்றாண்டுகளுக்குப் பிறகு விடுதலை செய்யப்படும் நிகழ்வையொட்டி நேற்று சமூகவலைத்தளங்களில் நிலவிய ”மத்தியதர வர்க்க மனநிலையின் வன்முறை” அச்சமூட்டுவதாக இருந்தது. நிர்பயாவின் மரணம் யாரையும் கண்ணீர் சிந்தச்செய்யும் கொடுமைதான். அவள் எதிர்கொண்ட வன்முறையும், அதன் வழியே அடைந்த நிராதரவான மரணமும் எல்லா மனங்களையும் அசைக்கக் கூடியதே. அந்த … Read more

ரசிகனின் கேள்வியும் முட்டாளின் பதிலும்…

கேள்வி: என்னைப் பொருத்தவரை, இளையராஜாவிடம் அந்த இளைஞர் அதுபோன்ற கேள்வியை எழுப்பியதே மிகப்பெரிய தவறு என்று தோன்றுகிறது. நாம் பொருட்படுத்த வேண்டாத விஷயம் இது என்றும் தோன்றுகிறது. இளையராஜாவிடம் அவர் அந்தக் கேள்வியைக் கேட்க வேண்டிய அவசியமே இல்லை… நாளைக்கு முதல் அமைச்சரின் ப்ரஸ் மீட் நடக்கும். அப்போதும் இதே கேள்வியை எவரேனும் கேட்பார்களா? கணேஷ் அன்பு. முட்டாளின் பதில்: கணேஷ், பொது இடத்தில் ஒரு அந்நிய மனிதரைப் பார்த்து, அதிலும் ஒரு பத்திரிகையாளரைப் பார்த்து உனக்கு … Read more

முட்டாளின் கடைசிச் சந்தேகம்!

இன்னும் ஒரு விஷயத்தை விட்டு விட்டேன்.  ஒரு அரசியல்வாதி  பொதுக்கூட்டத்தில் கையை ஓங்கி அடிக்கப் பார்ப்பார்.  சமயங்களில் அடித்தே விடுவார்.  பத்திரிகையாளர் கூட்டத்திலும் நாக்கைத் துருத்துவார், மிரட்டுவார்.  இப்படி இப்படி.  அவரைப் பற்றி நான் இதுவரை ஏதாவது கட்டுரை எழுதியிருக்கிறேனா?  ஏனென்றால், எங்கள் ஊரில் சொல்வார்கள்… மது அருந்தியவரும் குழந்தையும் ஒன்று என்று.  அது போகட்டும்.  இப்போது என் சந்தேகம் எல்லாம் அந்த அரசியல்வாதியும் இளையராஜாவும் ஒன்றா? அவர் செய்வதை இவர் செய்யலாமா?    

முட்டாளின் வருத்தங்கள் தொடர்கின்றன…

முட்டாளின் கேள்விகள் தொடர்கின்றன.  மன்னியுங்கள்.  ஒரு நண்பர் என்னைக் கேட்டிருந்தார்.  உங்களிடமும் பலர் ஏடாகூடமாகக் கேள்வி கேட்கும் போது நீங்களும்தான் கோபப்படுகிறீர்கள்.  இசைஞானி கோபப்பட்டால் மட்டும் தப்பா? கோபப்பட வேண்டாம் என்று யார் சொன்னது?  வன்முறையில் ஈடுபடலாமா என்பதுதான் கேள்வி.  வன்முறையா?  அவர் என்ன நிருபரை அடிக்கவா செய்தார் என்றெல்லாம் கேட்க மாட்டீர்கள் என்று நினைக்கிறேன்.   வசைச் சொல்லை நேரடியாக, முகத்துக்கு நேராகப் பிரயோகிப்பது மிகக் கடுமையான வன்முறை.  சொல்லுங்கள், அந்தச் செய்தியாளரால் தன் வாழ்நாள் முடியுமட்டும் … Read more

தேவகோட்டை சந்திப்பு

வரும் 27.12.2015 அன்று (ஞாயிறு) காலை ஒன்பது மணி அளவில் தேவகோட்டை, ராம் நகர், தாய் மஹாலில் லயன்ஸ் சங்கத்தின் மண்டல சந்திப்பில் உரையாற்றுகிறேன். மாவட்ட ஆளுநர், மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் போன்றோர் பேசும் சபையில் ஒரு எழுத்தாளனை அழைத்து சிறப்புரை ஆற்றச் சொல்லும் அளவுக்கு தேவகோட்டையில் யாருக்கு தைரியம் என்று தெரியவில்லை.  இருந்தாலும் எல்லா இடங்களிலும் எனக்கு ஒரே பேச்சுதான்.  மதுரை நண்பர்களுக்கு நேரம் இருந்தால் வந்து கலந்து கொள்ளலாம்.  அன்று இரவே சென்னை திரும்புகிறேன்.

ஆ. மாதவன்

தினமணி இணைய இதழில் இந்த ஆண்டு ஜூன் 21-ஆம் தேதி ஆ. மாதவன் பற்றி எழுதியிருந்தேன்.  பிறகு உடனேயே அவரைச் சந்திக்க வேண்டும் என்ற ஆவலில் பலரிடமும் அவரது தொலைபேசி எண்ணைக் கேட்டேன்.  ஜெயமோகனைக் கூட தொடர்பு கொண்டு கேட்டேன்.  ஆனால் அவர் அப்போது கனடாவில் இருந்தார்.  அதற்குப் பிறகு பழுப்பு நிறப் பக்கங்களின் மற்ற எழுத்தாளர்களில் மூழ்கி விட்டேன்.  இருந்தாலும் அவ்வப்போது அவரைத் தொடர்பு கொள்வது சம்பந்தமாக முயற்சி செய்து கொண்டே இருந்தேன்.  திருவனந்தபுரத்தில் இருக்கும் … Read more