ரஜினியின் பத்து லட்சம்!

வெள்ள நிவாரண நிதிக்காக ரஜினிகாந்த் பத்து லட்சம் ரூபாய் நன்கொடை கொடுத்திருப்பதாக அறிந்தேன். மனம் நொந்தது.  மற்ற ஹீரோ நடிகர்கள் வாயே திறக்கவில்லை.  கமல் வாயைத்தான் முன்னமே பார்த்தோம்.  ரஜினியின் பத்து லட்சம்.  அவரா, சோத்துக் கையால காக்கா விரட்ட மாட்டார்பா என்று ஒரு பழமொழி உண்டு.  ரஜினியின் சம்பளம் இருபது கோடியா, முப்பது கோடியா?  நன்கொடை பத்து லட்சம்.  ஆன்மீகம் எல்லாம் சொல்லிக் கொடுத்தது இவ்வளவு தானா மிஸ்டர் ரஜினிகாந்த்?

எங்கள் பொம்மையைப் பறித்து வீசி விடாதீர்கள் மிஸ்டர் கமல்ஹாசன்!!!

கங்கையில் மிதக்கும் பிரேதங்களைப் போல் சென்னையே வெள்ளத்தில் மிதந்து கொண்டிருக்கிறது.  இந்தத் துயரமான வேளையில் கமல்ஹாசனின் செய்தி வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் உள்ளது. எப்போதுமே எனக்கு ஒரு சம்சயம் உண்டு.  தமிழ்நாட்டில் மட்டும் இலக்கியம் படித்தவர்கள் ஏன் கொஞ்சமும் சுரணை உணர்வு இல்லாமல் இருக்கிறார்கள்?  படிக்காதவர்களே தேவலாம் என்கிற அளவுக்கு இருக்கிறது படித்தவர்களின் பேச்சும் நடத்தையும்.  மழைக்கு முன்பு நடந்த ஒரு சினிமா விழாவில் கலந்து கொள்ள நேர்ந்தது.  பொதுவாக சினிமாவுக்கும் இலக்கியத்துக்கும் உள்ள … Read more

பழுப்பு நிறப் பக்கங்கள் : தி.ஜானகிராமன்

தி.ஜா. பகுதி 4 http://www.dinamani.com/junction/pazhuppu-nira-pakkangal/2015/11/15/%E0%AE%A4%E0%AE%BF.-%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D—%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-4/article3126795.ece பகுதி – 5 http://www.dinamani.com/junction/pazhuppu-nira-pakkangal/2015/11/22/%E0%AE%A4%E0%AE%BF.-%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D—%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-5/article3139857.ece பகுதி – 6 http://www.dinamani.com/junction/pazhuppu-nira-pakkangal/2015/11/29/%E0%AE%A4%E0%AE%BF.-%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D—%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-6/article3151402.ece

ருமாலி ரொட்டி – சிறுகதை (திருத்தப்பட்டது)

தில்லியில் கிடைக்கும் தந்தூரி ரொட்டி மாதிரி சென்னையில் கிடைப்பதில்லை. என்னதான் பக்கா வட இந்திய ரெஸ்ட்டாரண்டாக இருந்தாலும் கூட தந்தூரி ரொட்டியில் சொதப்பி விடுகிறார்கள்.  தந்தூரி அடுப்பு தெரியுமா, பார்த்திருக்கிறீர்களா?  ஒரு பெரிய பானை மாதிரி இருக்கும்.  கீழே விறகைப் போட்டு எரிப்பார்கள்.  ரொட்டியை உருட்டி ஒரு கையகல – அதை எப்படி உங்களுக்குச் சொல்வது?  அந்தக் காலத்தில் தயிர்க்காரிகள் தலையில் பிரிமணை மாதிரி ஒன்றை வைத்து அதன் மேல் தயிர்ப்பானையை வைத்துக் கொண்டு வருவார்கள் அல்லவா, … Read more

கடைசிப் பக்கங்கள்

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நியூஸ் சைரன் என்ற பத்திரிகையில் வாராவாரம் ‘சாத்தான் பாதி, கடவுள் மீதி’ என்ற தலைப்பில் ஒரு பத்தி எழுதிக் கொண்டிருந்தேன்.  அது ‘கடைசிப் பக்கங்கள்’ என்ற தலைப்பில் கிழக்கு பதிப்பக வெளியீடாக ஜனவரி 9-ஆம் தேதி நடக்க இருக்கும் புத்தக வெளியீட்டு விழாவில் வெளியிடப்படும்.  விழா பாரிஸ் கார்னரில் இருக்கும் டெண்ட்டல் காலேஜ் அருகே உள்ள (ஃபோர்ட் ரயில்வே ஸ்டேஷன் எதிரில்) ராஜா அண்ணாமலை மன்றத்தில் மாலை ஆறரை மணி அளவில் நடக்கும். … Read more