நிலவு தேயாத தேசம் : 6

ஒரு பயணக் கட்டுரையை இவ்வளவு ஆர்வத்துடன் வாசிப்பார்கள் என்றும், ஒரு பயணக் கட்டுரையை இவ்வளவு சுவாரசியமாக எழுத முடியும் என்றும் இப்போதுதான் தெரிகிறது.  பல நண்பர்கள் நிலவு தேயாத தேசம் பயணக் கட்டுரையின் அடுத்த அத்தியாயம் எப்போது வரும் என்று காத்திருந்து படிப்பதாகத் தெரிவிக்கிறார்கள்.  நன்றி.  பத்து நாள் மட்டுமே துருக்கியில் சுற்றினாலும் அந்தப் பத்து நாட்களுக்காக ஒரு ஆண்டு தீவிரமாகப் படித்தேன்.  அந்தப் படிப்பினால்தான் துருக்கி  சென்றே ஆக வேண்டும் என்று கிளம்பினேன்.  உதாரணமாக, கப்படோச்சியா … Read more

புதிய தலைமுறை விவாதம்

மது விலக்கு குறித்து புதிய தலைமுறை தொலைக்காட்சியில் பங்கு கொண்டு உளறியது.  (நன்றாகத்தான் பேசினேன்.  ஆனால் ஒட்டுமொத்த சூழலோடு பொருத்திப் பார்த்த போது  நான் பேசியது எனக்கே உளறலாகத்தான் தோன்றியது.)  பேசாமல் நானும் மனுஷ்ய புத்திரனோடு சேர்ந்து மது விலக்கு பிரச்சாரமே செய்திருக்கிலாம். புதிய தலைமுறை நேர்படப் பேசு – 28.11.2015 https://www.youtube.com/watch?v=LXbFfd1QDBI    

எச்சரிக்கை:  30 வயதுக்கு மேற்பட்டவர்கள் இந்தப் பதிவைப் படிக்க வேண்டாம். 

பெயர் Erick Orrosquieta.  லாஸ் ஏஞ்ஜலஸில் வாழும் புலம்பெயர்ந்த மெக்ஸிகன் பெற்றோருக்குப் பிறந்தவர்.  ஆனால் சொந்தப் பெயரைச் சொன்னால் தெரியாது.  Deorro என்றால் உலகம் பூராவும் இளைஞர்களுக்குத் தெரியும்.  பார்களில் வெள்ளி, சனி, ஞாயிறுகளில் ரொம்பப் பிரபலம்.  இவருடைய Five Hours என்ற பாடல் என்னை மிகவும் கவர்ந்தது.  டான்ஸ் ஆடாமல், தேகத்தின் நாடி நரம்புகள் துள்ளாமல் இந்தப் பாடலைக் கேட்க முடியாது. https://www.youtube.com/watch?v=MF6JvbfYI-8 பிறகு அதில் மேற்கொண்டு ஒரு குரலைச் சேர்த்து வெளியிட்டார்.  Five More … Read more

ட்டி. என். ராஜரத்தினம் பிள்ளை

டி.என். ராஜரத்தினம் பிள்ளை பற்றி கி.ரா. எழுதிய இந்தக் கட்டுரை 13.12.1988 தேதியிட்ட தினமணி கதிரில் வெளிவந்து சொல்வனத்தில் மறு பிரசுரம் செய்யப்பட்டது.   இணைப்பு: http://solvanam.com/?p=19710 டி.என். ராஜரத்தினம் பிள்ளை என்றால் யார், சுதந்திரப் போராட்ட தியாகியா, அரசியல்வாதியின் அப்பாவா, ஏதாவது பழைய காலத்து சிரிப்பு நடிகரா என்று குழம்பும் அன்பர்கள் பின்வரும் இணைப்பில் உள்ள சாருகேசியைக் கேட்டுப் பார்க்கலாம். http://gaana.com/artist/t-n-rajarathnam-pillai சாருகேசி பற்றி என் நண்பர் ராம் அற்புதமான ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார்.  ராமானுஜம் … Read more

படிக்க வேண்டிய நூல்கள் (2)

http://charuonline.com/blog/?p=3399 இந்தப் பதிவைப் படிப்பதற்கு முன் மேற்கண்ட இணைப்பில் உள்ள கடிதங்களைப் படித்து விடக் கேட்டுக் கொள்கிறேன்.  படித்து விட்டுத் தொடரலாம். சாரு, நான் தருணின் மூன்று நாவல்களையும் படித்து விட்டேன். அந்த மூன்றில் எனக்குப் பிடித்தது ‘The Story of My Assassins’. அதே போல் Alchemy of Desire -ல் Kama என்ற பாகத்தைப் படித்து மிரண்டு விட்டேன்.  அப்படியே உள்ளே இழுத்து விட்டது.  தருணின் மொழி மிக வசிகரமானது.  The valley of Masks … Read more