லா.ச.ரா.வின் எழுத்தில் கரைந்த இன்னொரு இதயம்…

மதிப்பிற்குரிய சாரு நீங்கள் லா.ச.ரா வை பற்றி ஆற்றிய உரையை கண்டேன். உண்மையான உணர்ச்சிகளுடன் ஆத்மார்த்தமாகப் பேசியதாகத் தோன்றியது. எனக்கு மிகவும் பிடித்த என்று சொல்வதைவிட எனக்கு வாசிப்பனுபவத்தின் உன்னதத்தை விளக்கியவர் லா.ச.ரா என்று கூறுவேன். இத்தனைக்கும் எந்த வித முன்னறிமுகமும் இல்லாமல் அவரை வாசிக்கத் தொடங்கியது இன்னும் என் நினைவில் இருக்கிறது. ஒரு 2 மணி நேர பேருந்து பிரயாணத்தில் நேரம் கடத்துவதற்காக என் அம்மாவின் புத்தக அலமாரியின் மூலையில் இருந்த கழுகு நாவலை படிக்கலாம் … Read more

பழுப்பு நிறப் பக்கங்கள் : தி.ஜா. பகுதி 2

இன்று மதியம் தான் ஒரு நண்பருடன் சேர்ந்து முடிவு செய்தோம்.  பழுப்பு நிறப் பக்கங்கள் முடிவடைந்த பிறகு மொத்தமாகக் கொண்டு வந்தால் பக்கங்கள் அதிகமாகி அதைக் கையில் வைத்து வாசிப்பது சிரமமாகி விடும் என்பதால் தொகுதி தொகுதியாகக் கொண்டு வரலாம் என்பதே அந்த முடிவு.  முதல் தொகுதி ஜனவரி 9-ஆம் தேதி ராஜா அண்ணாமலை மன்றத்தில் நடக்க இருக்கும் விழாவில் வெளியிடப்படும்.  க.நா.சு.வோடு முதல் தொகுதி முடியும். பின்வரும் இணைப்பில் உள்ளது தி.ஜா. பற்றிய கட்டுரையின் இரண்டாம் … Read more

நிலவு தேயாத தேசம் – 3

http://andhimazhai.com/news/view/nilavu3.html வெள்ளிக் கிழமைதோறும் சாரு நிவேதிதா எழுதும் இத்தொடர் அந்திமழையில் வெளியாகும் (இந்த வாரம் இரண்டு நாள் தாமதம். மன்னிக்கவும்)

தேவலோகத்து மங்கையும் சில பாடல்களும்…

நேற்றைய ரஷ்யன் செண்டர் கூட்டத்தில் நான் எதிர்பார்த்த அளவு கூட்டம் வரவில்லை.  300 பேர் கொள்ளளவு உள்ள அரங்கில் 100-125 பேர் தான் வந்திருந்தனர்.  போதாது.  அதிலும் லா.ச.ரா.வுக்குப் போதாது.  சரியான விளம்பரம் இல்லையோ என்னவோ.  நான் விளம்பர வேலைகளில் ஈடுபடவில்லை.  நான் ஒரு 50 நண்பர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பியிருந்தால் 40 பேராவது வந்திருப்பார்கள்.  எனக்கு அதற்கு நேரம் இல்லாமல் போய் விட்டது.  காரணம், திருப்பூர் கிருஷ்ணன்.  திருப்பூர் கிருஷ்ணன் பேசும் கூட்டத்தில் என்னை சிறப்புப் பேச்சாளர் … Read more