ஒரு கடிதமும் பதிலும்…

சாருஆன்லைனில் வெளிவரும் ஆங்கிலக் குப்பைகள் நான் பதிவிடுவதல்ல.  சில கிரிமினல்களின் வேலை.  என் இணையதளப் பொறுப்பாளரின் பார்வைக்காக விட்டு வைத்திருக்கிறேன். பின்வருவது என்னுடைய ஒரு கடிதமும் அதற்கான பதிலும்: dear kuppuswamy, இதுதான் நான் உங்களுக்கு எழுதும் முதல் மின்னஞ்சல் என்று நினைக்கிறேன்.  நீங்கள் மொழிபெயர்த்த பனி படித்து விட்டேன். எனக்கு ஒவ்வொரு ஞாயிறும் பரீட்சை.  பழுப்பு நிறப் பக்கங்களை சனிக்கிழமை அனுப்பி விட வேண்டும்.  ஆனாலும் அதைத் தொடாமல் ஒரு வாரத்தில் பனியை முடித்து விட்டேன். … Read more

பழுப்பு நிறப் பக்கங்கள் : ஆ. மாதவன்

எப்படியான சூழலில் எழுதிக் கொண்டிருக்கிறேன் என்பதை பழுப்பு நிறப் பக்கங்களுக்கு வரும் பின்னூட்டங்களிலிருந்து நீங்கள் புரிந்து கொள்ளலாம்.  மற்ற நாடுகளில் எழுத்தாளனை சிறையில் அடைப்பார்கள்.  நாடு கடத்துவார்கள்.  அல்லது சுட்டுக் கொல்வார்கள்.  தமிழ்நாட்டில் தொடர்ந்து செருப்பால் அடித்துக் கொண்டே இருப்பார்கள்.  அதுவும் எல்லா எழுத்தாளர்களையும் அல்ல;  என்னை மட்டும்தான்.  ஸீரோ டிகிரி ஆங்கிலப் பதிப்புக்கு பல்லவி என்பவர் ஒரு மதிப்புரை எழுதிய போது அதற்கு 190 ஆபாச பின்னூட்டங்கள் எழுதியவர்கள் என் தமிழ் நண்பர்கள்.  படு ஆபாசமான … Read more

மராட்டி ஒரு இனிமையான மொழி

ஒவ்வொரு எழுத்தாளரின் ஒவ்வொரு புத்தகம் கிடைக்காமல் போய் விடுவதால் பலரைப் பற்றியும் எழுத முடியாமல் கிடக்கிறேன்.  பழுப்பு நிறப் பக்கங்களில் தஞ்சை பிரகாஷ் பற்றி எழுதலாம் என்றால் அவருடைய கரமுண்டார் வீடு கிடைக்கவில்லை.  அதேபோல் எம்.வி.வி.யின் நித்ய கன்னி.  பிரபு காளிதாஸ் கொண்டு வந்து தருகிறேன் என்றார்.  காலையில் வருகிறேன்.  அய்யோ, காலையில் வந்தால் பதினெட்டாம் நூற்றாண்டு நிலக்கரிச் சுரங்கத் தொழிலாளி மாதிரி இங்கே வீட்டில் வேலை செய்து கொண்டிருப்பேனே என்றேன்.  வீட்டு கேட்டுல தொங்குற பைல … Read more

ஜனவரி 9

யாரையும் வேலை நாளில் வறுத்து எடுக்க இனியும் விருப்பம் இல்லை.  சாவகாசமாக சனிக்கிழமையே வரலாம்.  ஜனவரி ஒன்பது அன்று என்னுடைய பத்துப் பனிரண்டு புத்தகங்கள் வெளியாகும்.  வாசகர் வட்ட நண்பர்களின் ஆறு ஏழு புத்தகங்கள் வெளியாகும். சென்ற ஆண்டு தருண் தேஜ்பாலைப் போல் இந்த ஆண்டு மனுஷ்ய புத்திரனை அழைக்கலாம் என்று இருக்கிறேன்.  நேரில் போய் தான் அழைக்க வேண்டும்.    நட்சத்திரப் பேச்சாளர் என்பதால் இப்போதே ‘புக்’ பண்ணி விட வேண்டும் இல்லையா? அரங்கம் பற்றிய … Read more

கிரிமினல்களுக்கு இடையே…

ஒருவர் அல்ல, பல கிரிமினல்களுக்கு இடையே வாழ வேண்டியிருக்கிறது.  வாழ என்பதை எழுத என்று வாசித்துக் கொள்ளவும்.  எனக்கு எழுத்து தான் வாழ்க்கை என்பதால்.  சாருஆன்லைனில் பல கிரிமினல்கள் உள்ளே புகுந்து என்னென்னவே ஆபாச வேலைகளைச் செய்து வருகின்றனர்.  மொத்தம் பத்தாயிரம் பின்னூட்டங்கள் உள்ளன.  எல்லாவற்றையும் ஒவ்வொன்றாக நீக்குவது கடினம்.  தொழில்நுட்ப வேலை நடந்து வருகிறது.  வாசகர்கள் பொறுத்துக் கொள்ளவும். அதேபோல் தினமணியில் எழுதி வரும் பழுப்பு நிறப் பக்கங்களிலும் பின்னூட்டம் என்ற பெயரில், நல்லவிதமான விமர்சனம் … Read more