கோணங்கியின் அத்துமீறலும் அதிகாரத்தின் கொடுக்குகளும், எழுத்தாளர் என்ற சலுகையும்: அராத்து

”இவனுவங்களையெல்லாம் நடுத்தெருவுல நிய்க்க வச்சு சுடணும் சார்” என்பதிலிருந்து “எழுத்தாளனும் சைக்கிளுக்கு பங்ச்சர் போடுபவனும் ஒன்றுதான்” என்பது வரை எல்லாம் எழுதிக் கொண்டிருக்கிறார்கள். இன்று அராத்து எழுதியிருப்பதோடு முற்றிலுமாக உடன்படுகிறேன். ஏனென்றால், அராத்து அதிகாரம் பற்றிப் பேசுகிறார். அதிகாரத்தைக் கொஞ்சம் கொஞ்சமாகக் கட்டியமைத்து, பின்னர், அதைத் துஷ்பிரயோகம் செய்யும் நிலை. அதைப் பற்றித்தான் நான் தொடர்ந்து எழுதிக் கொண்டிருக்கிறேன். – சாரு இனி அராத்து: கோணங்கியின் பாலியல் அத்துமீறலைப் பற்றி பல திசைகளில் இருந்தும் குற்றச்சாட்டு வந்ததும் … Read more

சுயவதை

சற்று நேரத்துக்கு முன் ஒரு நண்பருக்கு ஃபோன் பண்ணினேன். அவர் குடிப்பழக்கம் இல்லாதவர். கோவாவில் இருப்பதாகச் சொன்னார். பக்கத்திலேயே மற்றும் ஒரு நண்பர் ஏதோ உயர் ரக விஸ்கி அருந்திக் கொண்டிருப்பதாக மேலதிகத் தகவலையும் கொடுத்தார். இன்னொரு நண்பருக்கு ஃபோன் பண்ணினேன். ஏற்காட்டில் இருப்பதாகச் சொன்னார். அவரும் தான் அருந்தும் பானம் பற்றிய விவரத்தை நான் கேட்காமலேயே சொன்னார். பின்னர் கோவா போன நண்பர் சற்று விவரமாகப் பேசினார். கடல் அலை அடிக்கும் ஓரத்தில் அறையாம். அங்கே … Read more

எழுத்தாளன், புனிதன், மனிதன் : ஜெயமோகன்

நேற்று (வெள்ளிக்கிழமை) சமஸ் அருஞ்சொல் நேர்காணலுக்கான கேள்விகளை அனுப்பினார். இரண்டு மணி நேரத்தில் 2000 வார்த்தைகளில் பதில்களைத் தட்டச்சு செய்து அனுப்பினேன். இன்று காலையில் ஜெயமோகனின் தளத்தைப் பார்த்தால் நேற்று நான் சமஸுக்கு அனுப்பிய பதில்கள் வேறு வார்த்தைகளில் வந்திருந்தன. ஏற்கனவே நான் பல முறை எழுதியவைதான். அவற்றையெல்லாம் நேற்று அருஞ்சொல்லுக்காகத் தொகுத்து எழுதியிருந்தேன். நேற்று ஜெயமோகனின் தளத்தில் வந்த ”பாதிக்கப்பட்டவர்களுடன் நிற்றல்” என்ற கட்டுரைதான் ஜெ. இதுவரை எழுதியவற்றுள் ஆக மோசமான கட்டுரை. அதை நீக்கி … Read more

ஒரு சினிமா காட்சி: அராத்து

ஜட்ஜ் : ரேப் பண்ணியா? கலைஞன் : ஐயா நான் கலைஞன். இருள் ஒளிப்பாதையில் பயணிக்கும்போது கிடைக்கும் நுட்பமான அனுபவங்களை அதன் இருண்மைத் தன்மையோடு …. ஜட்ஜ் : யோவ் இன்ஸ்பெக்டர் …ஒனக்கு இதே வேலையாப்போச்சி. இவரு மெண்டல் போலருக்கு …மொதல்ல மெண்டல் ஹாஸ்பிடலுக்கு அனுப்பணும்… இன்ஸ் : இல்லீங்க ஐயா …மெண்டல் மாதிரி நடிக்கிறாரு. பத்துப்பதினஞ்சி பேர இதே மாதிரி பண்ணிருக்காரு. ஜட்ஜ் : மெண்டல் மாதிரி நடிக்கிறியா? கலைஞன் : ஒரு தடவை என்கூட … Read more

இலங்கைப் பயணம்

ஏப்ரல் 22ஆம் தேதி இலங்கை செல்கிறேன். இதுதான் என்னுடைய முதல் இலங்கைப் பயணம். 24 அன்று மட்டக்களப்புவில் நடக்க இருக்கும் புத்தகத் திருவிழாவில் கலந்து கொள்வதற்காகச் செல்கிறேன். ஒரு வாரம் நடக்கும் புத்தக விழாவில் தினமும் கலந்து கொள்வேன். அதற்குப் பிறகு இரண்டு வாரம் இலங்கையைச் சுற்றிப் பார்க்க நினைக்கிறேன். எங்கே போகலாம், எங்கே தங்கலாம் என்று எந்த யோசனையும் இல்லை. இந்த மாதக் கடைசியில் கோவா செல்லும்போது அந்தத் திட்டத்தைப் போடலாம் என்று உத்தேசித்திருக்கிறேன். புத்தக … Read more

அன்பு – ஒரு பின்நவீனத்துவவாதியின் மறுசீராய்வு மனு – ஓர் அனுபவப் பகிர்வு – புவனேஸ்வரி

Charu, first I want to tell you how thankful and priviledged I feel, to recieve the அன்பு novel as my B’day Gift from you. It is one of the most blessed days of my life. Second, I want to sincerely apologise for such a delayed reply after reading the novel. நானூறு பக்க நாவல் எழுதின உங்க … Read more