இருநூறில் ஒருவர்…

புத்தக விழாவின் போது வரம் என்ற தலைப்பில் சத்தமில்லாமல் என் கட்டுரைத் தொகுப்பு ஒன்று வெளிவந்தது. அன்புவின் சத்தத்தில் வரம் கட்டுரைத் தொகுப்பு பற்றி அதிகம் தெரியவில்லை. என் கட்டுரைகளெல்லாம் உண்மையில் புனைவுக்கும் அ-புனைவுக்கும் நடுவாந்திரமாக இருப்பவை என்று உங்களுக்குத் தெரியும். வாங்கிப் பயன் பெறுங்கள். ஒருத்தர் அங்கே என்.எஃப்.டி.யில் பத்தாயிரம் ரூபாய்க்கு விற்கும் புத்தகத்தை க்யூவில் நின்று வாங்கிக் கொண்டிருக்கிறார்கள். இங்கே 200 ரூபாய் புத்தகத்துக்கு tiny url போட்டு எழுதிக் கொண்டிருக்கிறேன். எப்படியும் வரம் … Read more

பொறாமை – 2

கமிஷன் சம்பந்தமான பேச்சு வார்த்தையின்போதுதான் தெரிந்தது, என்.எஃப்.டி. மூலம் புத்தகம் விற்பது ஒன்றும் அவ்வளவு சாதாரணமான விஷயம் அல்ல என்று. ஒவ்வொரு பக்கத்தையும் வடிவமைத்து முடிக்க இரண்டு மாதம், ஒவ்வொரு பக்கத்திலும் இசையமைக்க ஒரு மாதம் – இப்படி புத்தகம் தயாராக மூன்று மாதம் ஆகுமாம். அதிலும் ஒரு பக்கத்தைப் படிக்க நாற்பது ஐம்பது நொடிகள் என்றால், நாற்பது ஐம்பது நொடிகளுக்கு இசையமைப்பது பெரிய சவால் என்கிறார் இசையமைப்பாளர் சத்யா. எல்லாம் சேர்த்து புத்தகத் தயாரிப்புக்கே ஐம்பது … Read more

பொறாமை

வாழ்வில் இதுவரை நான் அனுபவிக்காத ஒரு உணர்வு பொறாமை. ஆனால் என்னைப் பார்த்து பொறாமை கொண்டவர்களைப் பார்த்திருக்கிறேன். போயும் போயும் நம்மைப் பார்த்துப் பொறாமை கொள்கிறார்களே என்று ஆச்சரியமும் அடைந்திருக்கிறேன். சமீபத்தில் கூட புத்தக விழாவில் ஒரு சக எழுத்தாளர் என்னைப் பார்த்து பொறாமையில் வெந்து மாய்ந்ததை இரக்கத்துடன் பார்த்துக் கொண்டிருந்தேன். ஆனால் நான்தான் வித்தியாசமான ஆள் இல்லையா? என்னை ஜெயிலில் தூக்கிப் போட்டால் கூட ஒரு அற்புதமான நாவலோடு வருகிறவன். அதனால் இந்தப் பொறாமை கூட … Read more

பெயர்

நேர்ப்பழக்கத்தில் நான் மிக இனிமையாகப் பழகக் கூடிய ஆள்.  ஆனால் எழுத்தின் மூலம் எனக்குக் கிடைத்திருக்கும் பிம்பம் நான் மிகவும் எதிர்மறையான ஆள் என்பது.  Negative vibesஐப் பரவ விடுபவன்.  இன்றைக்கு சாரு யாரைத் திட்டி எழுதியிருப்பார் என்று தெரிந்து கொள்வதற்காகவே என் இணைய தளத்தைப் படிப்பவர்கள் உண்டு.   இப்போதெல்லாம் நான் எதிர்மறை விமர்சனங்களைக் குறைத்து விட்டேன்.  முக்கியமாக, சினிமா விமர்சனம் எழுதுவதில்லை.  அதுவே பெரும்பாலான எதிர்மறை விமர்சனத்தைக் குறைத்து விட்டது.  படித்தே ஆக வேண்டிய புத்தகம் … Read more

அன்பு: ஒரு பின்நவீனத்துவவாதியின் மறுசீராய்வு மனு: மனுஷ்ய புத்திரன்

சாருவின் ‘அன்பு: ஒரு பின் நவீனத்துவவாதியின் மறு சீராய்வு மனு ‘ நாவலை இரு தினங்களுக்கு முன் படித்து முடித்தேன். அதுகுறித்து எழுதவேண்டும் என்ற எண்ணம் இருந்துகொண்டே இருந்தது. கடும் வேலை நெருக்கடி. சாருவின் மின்சார நடை நாவலை இடையறாது படிக்க வைத்தது. அவரது மொழி ஒரு சாகசம். சாருவின் எல்லா எழுத்துகளிலும் ஒரு சமூக சகவாழ்வில் மனிதர்களிடையே நிலவும் ஒவ்வாமைகளையும் கலாச்சார வேற்றுமைகளையும் தொடர்ந்து விவாதிப்பதைக் காணலாம். ஒட்டு மொத்த தமிழ் வாழ்க்கையே இந்த ஒவ்வாமைகளுக்கு … Read more