ஈரோடு புத்தக விழா
ஈரோடு புத்தக விழா நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. அங்கே டிஸ்கவரி புக் பேலஸின் அரங்கில் ராஸ லீலா பதிப்பகத்தின் மூலம் வெளிவந்த என்னுடைய அனைத்து நூல்களும் கிடைக்கும். அரங்கம் எண்: 133 – 134.
ஈரோடு புத்தக விழா நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. அங்கே டிஸ்கவரி புக் பேலஸின் அரங்கில் ராஸ லீலா பதிப்பகத்தின் மூலம் வெளிவந்த என்னுடைய அனைத்து நூல்களும் கிடைக்கும். அரங்கம் எண்: 133 – 134.
நூலின் வடிவம் இந்தப் படத்தில் உள்ளது போல் இருக்கும்.
அன்புள்ள சாரு, வணக்கம். தங்களின் தியாகராஜா: கடவுளைக் கண்ட ஓர் ஞானியின் கதை” புத்தக அட்டையில் ஸ்ரீதியாகராஜ ஸ்வாமி ஆழ்ந்த தவநிலையில் ஸ்ரீ இராமபிரானைக் காண்பதாகக் காட்சிப்படுத்தப்பட்டுள்லது. அந்த க்ஷணத்தில் ஸ்வாமிகாரு பாடிய கீர்த்தனைகள் மூன்று. கனுகொண்டினி ஸ்ரீராமுலு – பிலஹரி நன்னு விடச்சி – ரீதி கௌளை வினயமு நானு – சௌராஷ்ட்ரம் இம்மூன்று கீர்த்தனைகளிலுமே ஸ்ரீஸ்வாமிகாரு ஸ்ரீஸீதா, லக்ஷ்மன, பரத சத்ருகன, ஹனுமத ஸமேத ஸ்ரீராமச்சந்திர மூர்த்தியை தர்ஸித்ததாகவே பதிவிடுகிறார். ஆனால் தங்களின் அட்டைப் … Read more
மொழி மரணம் கொண்டாட்டம் – 1 மரணம் கொண்டாட்டம் -9
நாவல் அதிக பட்சம் அக்டோபர் இறுதிக்குள் உங்கள் கைகளில் கிடைக்கும். அச்சகத்தில் தாமதமானால் நவம்பர் ஆகலாம். ஆனால் நான் நாவலை பதிப்பகத்திடம் செப்டம்பரில் கொடுத்து விடுவேன். நாவல் Everyman’s Library Classics தரத்தில் இருக்கும். Cloth binding போடப்பட்டிருக்கும். இது ஒரு Collector’s Special Edition என்பதால் விலை அதிகமாகத்தான் இருக்கும். Paperback edition போடுவதாக இல்லை. தியாகராஜா: ஓர் இசைஞானியின் கதை என்றுதான் தலைப்பு வைக்க நினைத்தேன். ஆனால் அது பல குழப்பங்களை உண்டு பண்ணும். … Read more
கோயம்பத்தூர் புத்தக விழாவில் ஒரு மூத்த எழுத்தாளரைச் சந்திக்க நேர்ந்தது. நீண்ட கால நண்பர். சந்தித்து சில ஆண்டுகள் இருக்கும். பத்து ஆண்டுகள் கூட இருக்கலாம். எனக்குப் பிரியமான எழுத்தாளரும் கூட. அவரோடு இருந்தால் எப்போதும் சிரிப்பும் அமளியுமாகவே இருக்கும். குசலம் விசாரித்த பிறகு உரையாடலை எங்கிருந்து தொடங்குவது என்று தெரியவில்லை. நண்பர் என்னைப் போலவே ஒரு குடிவிரும்பி. குடி பற்றிய அல்லது எது பற்றியுமே சங்கோஜமோ, கூச்ச உணர்வோ, குற்ற மனப்பான்மையும் இல்லாத அளவுக்கு வெளிப்படையானவர். … Read more