டாக்டர் அப்துல் கலாம் (2)

நிர்வாண நகரத்தில் கோமணம் கட்டியவன் பைத்தியக்காரன்.  இப்போது எனக்கு அந்தப் பட்டம் கிடைத்துள்ளது.  பரவாயில்லை.  ஒரு அன்பர் என்னை அடிக்கப் போகிறேன் என்று எழுதியிருக்கிறார்.  இதுதான் இவர்கள் கலாமிடமிருந்து கற்றுக் கொண்ட பாடம் போலும்.  எத்தனையோ ஜனாதிபதிகள் வருகிறார்கள், போகிறார்கள்.    ஆர். வெங்கட்ராமன் ஜனாதிபதியாக இருந்த போது நான் தில்லியில்தான் இருந்தேன்.  ஆனால் அவரெல்லாம் என்னை ஈர்க்கவில்லை.  கலாம் ஈர்த்தார்.  எதிர்மறையாக.  ஒரு விழா.  கலாம் தான் குத்துவிளக்கு ஏற்றி விழாவைத் துவக்கி வைக்க வேண்டும்.  குத்துவிளக்கு … Read more

டாக்டர் அப்துல் கலாம்

இன்று நான் முகநூலில் எழுதியது: நான் ஒரு பயந்தாங்கொள்ளி. ஏய் என்று மிரட்டினாலே தேகமெல்லாம் நடுங்க ஆரம்பித்து விடும். எங்காவது அடிதடி என்றால் அந்தப் பக்கமே போக மாட்டேன். ஆனால் மற்ற பயந்தாங்கொள்ளிகளுக்கும் எனக்கும் உள்ள சில வித்தியாசங்களில் முக்கியமானது என்னவென்றால், என் நெற்றிப் பொட்டில் துப்பாக்கியை வைத்தாலும் என் கருத்தை மாற்றிக் கொள்ள மாட்டேன். துப்பாக்கி வெடிக்கும் வரை சொல்லிக் கொண்டு தான் இருப்பேன். மற்றபடி மற்ற பயந்தாங்கொள்ளிகளைப் போலவே மரண பயத்தில் என் தேகமெல்லாம் … Read more