ந. சிதம்பர சுப்ரமணியனின் நூல் வெளியீட்டு விழா

நாளை மாலை ஆறு மணிக்கு மைலாப்பூர் ராமகிருஷ்ணா மடம் சாலையில் உள்ள  பி.எஸ். உயர்நிலைப்பள்ளியில் உள்ள விவேகானந்தா அரங்கில் ந. சிதம்பர சுப்ரமணியனின் மண்ணில் தெரியுது வானம் என்ற நாவலின் வெளியீட்டு விழா நடக்க உள்ளது. மாலை ஆறு மணி.  நற்றிணை பதிப்பகம்.  இந்த நாவல் பற்றி பழுப்பு நிறப் பக்கங்களில் எழுதியிருக்கிறேன்.  என்னை காந்தியவாதியாக மாற்றிய நாவல் இது.  தமிழ் தெரிந்த அத்தனை பேராலும் வாசிக்கப்பட வேண்டிய நாவல். முக்கியமாக பள்ளிக்கூட மாணவர்களும் கல்லூரி மாணவர்களும் … Read more

வாசக சாலை ஆண்டு விழா

வாசகர் வட்டத்திலிருந்து பிரிந்து சென்ற என் வாரிசுகளான ஞான பாஸ்கர் ராஜா, பார்த்திபன், கார்த்திகேயன், மனோஜ், அருண் ஆகியோர் மற்ற சில நண்பர்களுடன் சேர்ந்து வாசக சாலை என்ற அமைப்பை ஏற்படுத்தி மாதந்தோறும் இலக்கியச் சந்திப்புகளை நடத்தி வருவதை நீங்கள் அறிவீர்கள்.  வாசகசாலையின் ஆண்டு விழா நாளை நடைபெறுகிறது.  நானும் பங்கேற்கிறேன், பார்வையாளனாக.  அழகிய பெரியவன், ஆதவன் தீட்சண்யா போன்ற நண்பர்கள் உரையாற்றுகிறார்கள். வாசகசாலை ஆண்டுவிழா மற்றும் தமிழ் இலக்கிய விருதுகள் நிகழ்விற்கான முழுமையான அழைப்பிதழை இந்த … Read more

புத்தக வெளியீட்டு விழா (2)

ஃபெப்ருவரி 27 வெளிவரயிருக்கும் ஒன்பது புத்தகங்களில் மூன்று புத்தகங்கள். பழுப்பு நிறப் பக்கங்கள் – பகுதி 1     கடைசிப் பக்கங்கள் – ந்யூஸ் சைரனில் வந்து பெரும் வரவேற்பைப் பெற்ற கட்டுரைகள், கிழக்கு வெளியீடாக வர இருக்கிறது.   எங்கே உன் கடவுள்? – துக்ளக்கில் வெளிவந்து கவனத்தை ஈர்த்த 15 அரசியல் கட்டுரைகள் முதல் முறையாக நூல் வடிவில், கிழக்கு வெளியீடாக வர இருக்கிறது.  

புத்தக வெளியீட்டு விழா (1)

  அறம் பொருள் இன்பம், அந்திமழை பதிப்பகத்தின் வெளியீடாக வர இருக்கிறது. அந்திமழை இதழில் வெளிவந்த கேள்வி பதில்களின் தொகுப்பு இந்நூல்.  இத்துடன் இன்னும் ஏழெட்டு நூல்கள் சேர்ந்து அவற்றின் வெளியீட்டு விழா ஃபெப்ருவரி 27 சனிக்கிழமை மாலை ஆறரை மணிக்கு பாரிமுனையில் உள்ள பல் மருத்துவக் கல்லூரிக்கு அருகில் உள்ள ராஜா அண்ணாமல் மன்றத்தில் நடைபெறும்.