இறுதிச் சுற்று

அன்புள்ள சாரு, தங்களின் ’சிறுபேர் அழைத்தனவும் சீறியருளாதே’ படித்தேன். அருமை! உங்கள் எழுத்து எங்களை வசீகரிப்பது புதிதல்ல, இருப்பினும் இது அட்டகாசம்! தங்களின் பணி நெருக்கடிகளுக்கு இடையில் சந்தோஷ் நாராயணனின் ’இறுதிச்சுற்று’ பாடல்களை கேட்க முடிந்ததா? ராமசாமி பைத்தியம் பிடித்து விடுமோ என்று அஞ்சும் அளவுக்கு வேலைப் பளு.  அதற்கு நடுவிலும் நேற்று நான் (மட்டும்) இறுதிச் சுற்று போயிருந்தேன்.  காரணம், நல்ல தமிழ்ப் படம் பார்த்து மாமாங்கம் ஆகி விட்டது.  மேலும் நான் ஒரு சினிமாப் … Read more

சிறுபேர் அழைத்தனவும் சீறியருளாதே! (2)

நேற்று எழுதிய பதிவில் ஒரு முக்கிய விஷயத்தை விட்டு விட்டேன்.  வட இந்தியர்களைப் பொறுத்தவரை கேரல்காரர்கள் முரடர்கள்.  ஆனால் முரடர்களைச் சமாளித்து விடலாம்.  ஆனால் தமிழர்கள் அத்தனை பேரும் பிரச்சினைக்குரியவர்கள்.  காஷ்மீரிகளைப் போல.  தமிழர்கள் அத்தனை பேருமே பிரபாகரன்கள்தான்.  அப்படித்தான் வட இந்தியர்களின் பொதுப்புத்தியில் உறைந்திருக்கிறது. இது இலக்கியச் சூழலிலும் பிரதிபலிப்பதை அவர்கள் அவ்வப்போது பார்க்கிறார்கள்.  உதாரணமாக, பாரதீய ஞான பீடம் யாருக்குக் கொடுக்கலாம் என்று இந்தியா முழுவதிலும் இருந்து வந்து அறிஞர்கள், எழுத்தாளர்கள் தில்லியில் கூடியிருப்பர்.  … Read more

சிறுபேர் அழைத்தனவும் சீறியருளாதே!

தலைக்கு மேலே வேலைகள் காத்துக் கிடப்பதால் பத்மஸ்ரீ விஷயம் பற்றி எதுவும் எழுதவில்லை.  இப்போது டாக்டர் ஸ்ரீராம் இது பற்றி ஜெயமோகன் மீண்டும் எழுதியதன் இணைப்பை அனுப்பியிருக்கிறார்.  அவசரமாக சில லிபிய நாவல்களைப் படித்துக் கொண்டிருக்கிறேன்.  இருந்தாலும் இது பற்றி ஓரிரு வார்த்தைகள் எழுதித் தான் ஆக வேண்டும் என்று தோன்றுகிறது.  முதலில் ஜெயமோகனின் பதிவு. http://www.jeyamohan.in/83865#.Vq9jWfl97IU  ஜெ.யின் அந்த விளக்கத்தில் ”முதல்முறையாக சிற்றிதழ்சார்ந்த ஒருவரை தேசியகௌரவம் தேடிவருகிறது. அது நிராகரிக்கப்படுவது தவறான முன்னுதாரணம் என்று சாரு … Read more

கோபி கிருஷ்ணன் – பழுப்பு நிறப் பக்கங்கள்

பழுப்பு நிறப் பக்கங்களுக்கு தினமணியின் பார்த்தசாரதி, ச.ந. கண்ணன், உமா ஷக்தி ஆகிய மூவரும் கொடுத்து வரும் ஊக்கம் எனக்குப் பெரிதும் உற்சாகம் அளிப்பதாக உள்ளது.  அவர்களுக்கும் இந்தப் பத்திக்கான புத்தகங்களை வாங்கிக் கொடுத்து உதவும் அத்தனை நண்பர்களுக்கும் என் மனப்பூர்வமான நன்றி.  ஃபெப்ருவரி 27 (சனிக்கிழமை) வெளியீட்டு விழாவை மறந்து விடாதீர்கள்.  மாலை ஆறரை மணி.  ராஜா அண்ணாமலை மன்றம், ப்ராட்வே (எஸ்பிளனேட்), பல் மருத்துவக் கல்லூரி அருகில், ஃபோர்ட் ரயில்நிலையம் எதிரே.  திருப்பூர் கிருஷ்ணன், … Read more

சிறுதெய்வ வழிபாடு

ஆறு மாதங்களுக்கு முன்பு நானும் டாக்டர் ஸ்ரீராமும் திருநெல்வேலி சென்றிருந்தோம்.  அது பற்றி எழுத வேண்டும் என நினைத்திருந்தேன்.  நேரமின்மையின் காரணமாக பல விஷயங்களை எழுத முடியவில்லை.  ஸ்ரீராம் எழுதியிருக்கிறார்.  ஒரே ஒரு விஷயத்தில் முரண்படுகிறேன்.  ஸ்டாலின் குணசேகரன் சிறுதெய்வம் அல்ல.  பெருந்தெய்வங்களோடு சேர்ந்து விட்டார்.  கட்டுரையைப் படித்துப் பாருங்கள். http://sriramintamil.blogspot.in/2016/02/blog-post.html